Skip to main content

நடத்தைசார் நிதியாண்மை என்றால் என்ன: விரிவாகப் படிக்கவும்

6 min readUpdated on 17th Aug, 2026by Angel One
Share

ஒரு பங்கின் விலையை ஃபண்டமெண்டல் அல்லது டெக்னிக்கல் அனாலிசிஸ் மட்டுமே தீர்மானிப்பதில்லை. சில நேரங்களில், முதலீட்டாளர்களின் (குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்களின்) மனநிலைதான் ஸ்டாக் மார்க்கெட் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மனிதர்களின் மனநிலை மற்றும் உளவியல் முடிவுகள் மார்க்கெட்டை எப்படிப் பாதிக்கின்றன என்பதைப் பற்றிப் படிப்பதுதான் பிஹேவியரல் ஃபைனான்ஸ் எனப்படும். ஒருவருடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய பங்கு என்பதால் மட்டுமே அதை வாங்குவது இதற்கொரு எளிய உதாரணம். ரிஸ்க் மற்றும் லாபத்தை கணக்கிட்டு லாபகரமாக யோசிப்பதற்குப் பதிலாக, மக்கள் தங்கள் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் நிதி முடிவுகளை எடுக்கிறார்கள். இப்போது இது பொருளாதாரம் மற்றும் நிதியியலின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது.

லாஸ் அவேர்ஷன்

சில சமயங்களில், ஒரு பங்கு விலை ஏறும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கும்போது, ஃபண்டமெண்டல் அல்லது டெக்னிக்கல் காரணங்களால் அது கீழே விழலாம். அந்தச் சமயங்களில், பல சில்லறை முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்த கம்பெனி மீதான அதீத பற்று காரணமாக தங்கள் முதலாட்டைக் கைவிட மாட்டார்கள். ஃபண்டமெண்டல் விஷயங்களை யோசிக்காமல் தங்கள் உணர்ச்சிகளுக்கும் மனது சொல்வதற்கும் மக்கள் செவிசாய்ப்பதற்கு இதுவே சான்று. இது போன்ற சூழ்நிலைகளில், எந்தவொரு டிரேடு செய்யும்போது ஸ்டாப் லாஸ் வைத்திருப்பது மிகவும் அவசியமானது. மேலே சொன்ன உதாரணத்தை லாஸ் அவேர்ஷன் என்று அழைக்கிறார்கள். எளிமையாகச் சொன்னால், மக்கள் லாபம் தரும் சந்தோஷத்தைவிட நஷ்டம் தரும் சோகத்தை அதிகமாக உணர்கிறார்கள். ஒருவர் அடுத்தடுத்த நாட்களில் ₹1000 லாபம் பார்த்துவிட்டு ₹1000 நஷ்டம் அடைந்தால், லாபம் தந்த நிம்மதியை விட நஷ்டம் ஏற்படுத்திய வருத்தத்தையே அதிகம் உணருவார்கள். இது பிஹேவியரல் ஃபைனான்ஸுக்கான ஒரு எடுத்துக்காட்டு, இதை ஒரு மாதிரி சர்வே மூலமாகவும் புரிந்து கொள்ளலாம்.

கேள்வி 1

  • இரண்டு ஆப்ஷன்கள் - $10 ஐ பெற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஒரு காயினை டாஸ் செய்யுங்கள், ஹெட்ஸ் வந்தால் $20 கிடைக்கும். டெயில்ஸ் வந்தால் எதுவும் கிடைக்காது.

மேற்கண்ட கேள்வியில், பெரும்பாலான மக்கள் உறுதியாகக் கிடைக்கும் $10 டாலரைத் தேர்ந்தெடுப்பார்கள், அதனால் அவர்கள் எந்த ரிஸ்க்கும் எடுக்க மாட்டார்கள்.

கேள்வி 2

  • இரண்டு ஆப்ஷன்கள் - $10 ஐக் கொடுங்கள் அல்லது ஒரு காயினை டாஸ் செய்யுங்கள், ஹெட்ஸ் வந்தால் $20 கொடுக்க வேண்டும். டெயில்ஸ் வந்தால் நீங்கள் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.

மேற்கண்ட கேள்வியில், பெரும்பாலான மக்கள் காயினை டாஸ் செய்து தங்கள் அதிர்ஷ்டத்தைச் சோதிப்பார்கள். தங்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டிய வராது என்பதால் டெயில்ஸ் விழும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

சில முதலீட்டாளர்களின் முதலீட்டு தொகுப்பில் சில பங்குகளின் மதிப்பு 50% க்கும் அதிகமாகக் குறைந்திருந்தாலும், அவற்றை விற்க அவர்கள் விரும்புவதில்லை.

ஹெர்ட் மென்டாலிட்டி

மார்க்கெட்டில் மக்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பின்பற்றும் வழக்கம் கொண்டுள்ளனர். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போன்ற பெரிய முதலீட்டாளர் ஏதேனும் ஒரு கம்பெனியில் முதலீடு செய்திருந்தால், சில்லறை முதலீட்டாளர்களும் அதில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள். அப்படிப்பட்ட ஒரு பெரிய முதலீட்டாளர் பங்குகளை வாங்கியுள்ளார் என்றால், அவர் நிச்சயம் எல்லா ஆராய்ச்சிகளையும் முழுமையாகச் செய்திருப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஸ்டாக் மார்க்கெட்டில் மிகவும் விசித்திரமான நிகழ்வுகள் பல 2021-ம் ஆண்டில் நடந்துள்ளன.

இவற்றில் பல நிகழ்வுகள் உண்மையான ஃபண்டமெண்டல்ஸ் அல்லது வேல்யூவேஷன்களை விட மக்களின் உணர்வுகள் மற்றும் நடத்தையின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளன.

உதாரணமாக: ஏப்ரல் 2021 இல் கோவிட்-19 இன் இரண்டாவது அலையின் போது, ​​இந்தியாவில் உள்ள சில மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. பாம்பே ஆக்ஸிஜன் எனப்படும் ஒரு நிறுவனம் இரண்டு வாரங்களுக்குள் ₹10,000 இலிருந்து ₹23,000 ஆக உயர்ந்தது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், பாம்பே ஆக்ஸிஜனுக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கும் அல்லது வழங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அது ஒரு முதலீட்டு நிறுவனமாகும், ஹெல்த்கேர் துறைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பெயரில் “ஆக்ஸிஜன்” என்ற வார்த்தை இருந்த காரணத்தினாலேயே, அந்தப் பங்கு இரண்டு வாரங்களில் 100% க்கும் அதிகமாக உயர்ந்தது. இதுதான் பிஹேவியரல் இன்வெஸ்டிங், எந்தவொரு ஃபண்டமெண்டல் அல்லது டெக்னிக்கல் காரணமும் இல்லாமல் எந்தப் பங்கும் உயரக்கூடும் என்பதை இது காட்டுகிறது.

அமெரிக்காவிலும், கேம்ஸ்டாப் மற்றும் ஏஎம்சி போன்ற நிறுவனங்களுக்கும் இதே போன்ற சம்பவம் நடந்தது.

நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் வால் ஸ்ட்ரீட் பெட்ஸ் (ஒரு ரெட்டிட் பக்கம்) இல் ஒருங்கிணைந்து, அமெரிக்க எக்ஸ்சேஞ்சில் அதிக அளவில் ஷார்ட் செய்யப்பட்ட பங்குகளான ஜி.எம்.இ. மற்றும் ஏ.எம்.சி. ஐ தொடர்ந்து வாங்கினர். இறுதியில், அது ஒரு ஷார்ட் ஸ்க்வீஸுக்கு வழிவகுத்தது, மேலும் அவை இரண்டும் மிகப்பெரிய அளவில் உயர்ந்தன. ஜி.எம்.இ இல் முதலீடு செய்து மக்கள் கோடீஸ்வரர்களாகினர், அந்தச் சூழலைப் பார்த்த சிலர் அந்தப் பங்குடன் எந்த அளவுக்குப் பற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றால் அதை விற்கவே மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, நேக்கட் ஷார்ட் செல்லிங் போன்ற நியாயமற்ற செயல்களில் ஈடுபடும் பெரிய வால்ஸ்ட்ரீட் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போர் இது.

பிஹேவியரல் ஃபைனான்ஸ் மற்றும் ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் போன்ற பிற முறைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பிந்தையது பகுத்தறிவுடன் கூடியது மற்றும் கணக்கீடுகள் தேவைப்படுகிறது. அவை உணர்ச்சிகள், கலாச்சாரம் அல்லது எந்தவொரு தனிப்பட்ட பகையிலிருந்தும் விடுபட்டவை. ஃபண்டமெண்டல் மற்றும் டெக்னிக்கல் அனாலிசிஸில் எஃபிஷியண்ட் மார்க்கெட் ஹைபோதெசிஸ்-ஸைப் பின்பற்றலாம், ஏனெனில் விலைகள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.

இது போன்ற பிஹேவியரல் இன்வெஸ்டிங் முறையானது பாரம்பரியமான ஃபண்டமெண்டல் வேல்யூவேஷன்கள் அல்லது டெக்னிக்கல் அனாலிசிஸுடன் இணைந்து பயணிக்க முடியுமா என்பதுதான் கேள்வி. இப்போதெல்லாம், மில்லியன் கணக்கான மக்கள் ஒரு பங்கை ஃபண்டமெண்டல் பலம் இல்லாமலேயே உயர்த்த முடிவு செய்தால், அதன் விலை சட்டென ஏறிவிடலாம். "பாம்பே ஆக்ஸிஜன்" எடுத்துக்காட்டில், ஒரு முதலீட்டாளர் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில் 100% க்கும் அதிகமான லாபத்தைப் பெற்றார், இது பாரம்பரிய முறைகள் மூலம் இவ்வளவு குறுகிய காலத்தில் சாத்தியமில்லை.

மறுபுறம், பிஹேவியரல் இன்வெஸ்டிங் என்பது முற்றிலும் கணிக்க முடியாதது, ஏனெனில் அது மக்களைப் பொறுத்தே அமைகிறது. கூட்டத்தோடு கூட்டமாகச் செல்வது என்பது தனிநபரின் விருப்பமாகும், மேலும் பொதுமக்களின் ஈர்ப்பால் இயங்கும் பங்குகளில் முதலீடு செய்யும்போதும் ஒருவர் எப்போதும் நடைமுறை ரீதியாகவும் பகுத்தறிவுடனும் சிந்திக்க வேண்டும்.

இன்றைய பங்கு சந்தை விலைகளை ஆராயுங்கள்.

ஐ.ஆர்.எஃப்.சி ஷேர் பிரைஸ் 

சுஸ்லான் ஷேர் பிரைஸ் 

ஐ.ஆர்.இ.டி.ஏ ஷேர் பிரைஸ் 

டாடா மோட்டார்ஸ் ஷேர் பிரைஸ் 

யெஸ் பேங்க் ஷேர் பிரைஸ் 

எச்.டி.எஃப்.சி. பேங்க் ஷேர் பிரைஸ் 

என்.எச்.பி.சி ஷேர் பிரைஸ் 

ஆர்.வி.என்.எல் ஷேர் பிரைஸ் 

எஸ்.பி.ஐ ஷேர் பிரைஸ் 

டாடா பவர் ஷேர் பிரைஸ் 

இந்தியப் பங்குச் சந்தையானது மூலதன உருவாக்கம், செல்வம் ஈட்டுதல் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சியைச் சாத்தியமாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, நாட்டின் மிகவும் வெற்றிகரமான சில நிறுவனங்களில் ஈக்விட்டி வைத்திருப்பதன் மூலம் காலப்போக்கில் பணத்தை வளர்க்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

ஏஞ்சல் ஒன் அதன் சக்திவாய்ந்த ஆன்லைன் டிரேடிங் பிளாட்பார்ம், ஏஆக்யூ பிரைம் ஸ்மார்ட் ரெக்கமெண்டேஷன்கள், ஐபிஓ அணுகல் மற்றும் ரிசர்ச் அறிக்கைகள் மூலம் பங்குச் சந்தையை உங்கள் விரல் நுனிக்குக் கொண்டுவருகிறது. நீங்கள் சிறிய அளவில் தொடங்கினாலும் சரி அல்லது நீண்ட கால முதலீட்டு தொகுப்பை உருவாக்கினாலும் சரி, பங்குச் சந்தை செல்வத்தை உருவாக்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்க முடியும்.

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers

+91

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers
+91