Skip to main content

பான் கார்டுக்குத் தேவையான ஆவணங்களின் பட்டியல்

6 min readUpdated on 12th Aug, 2026by Team Angel One
இந்தியாவின் வருமான வரித்துறையால் வழங்கப்படும் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர் என்பது நிதி சார்ந்த அனைத்துப் பணிகளுக்கும் மிக முக்கியமான அடையாள எண்ணாகும். தனிநபர்கள், வெளிநாட்டினர், மைனர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பான் கார்டு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை என்பத
Share

பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர் என்பது இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படும் தனித்துவமான 10 இலக்க எண்ணாகும். இது வரி செலுத்துவோரை அடையாளம் காணவும், நிதி பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் பயன்படுகிறது. இன்றைய இந்தியப் பொருளாதாரத்தில், பான் எண் இல்லாமல் எந்தவொரு நிதிப் பரிவர்த்தனையையும் மேற்கொள்வது கடினம்.

பான் கார்டு விண்ணப்பத்திற்கு சரியான ஆவணங்கள் இல்லாவிட்டால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். நிதி மோசடி மற்றும் திருட்டைத் தடுக்க அரசு கடுமையான சரிபார்ப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. எனவே, விண்ணப்ப செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பே தேவையான ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருப்பது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் மற்றும் தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்கும். வயது, குடியுரிமை மற்றும் கார்பரேட் ஸ்டேட்டஸ் ஆகியவற்றிற்கு ஏற்ப தேவைகள் மாறுபடுவதால், நீங்கள் எந்த வகையின் கீழ் வருகிறீர்கள் மற்றும் வரி அதிகாரிகள் எந்தெந்த சான்றுகளைக் கேட்கிறார்கள் என்பதை பற்றி புரிந்துகொள்வது அவசியமாகும்.

முக்கிய குறிப்புகள்

  • இந்திய குடிமக்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க மூன்று வகையான சான்றுகளை வழங்க வேண்டும்: அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பிறந்த தேதிச் சான்று.
  • வயது வந்த இந்திய குடிமக்கள், தங்கள் மொபைல் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதன் மூலம், ஆன்லைன் வழியாகவே இ-கேஒய்சி விண்ணப்ப செயல்முறையை முடிக்கலாம்.
  • மைனர்கள் சட்டப்படி இந்த கார்டைப் பெறலாம், ஆனால் அவர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள், தங்களின் ஆவணங்களுடன் குழந்தையின் பிறப்புச் சான்றிதழையும் இணைத்து கையொழுத்திட வேண்டும்.
  • வணிகங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை தங்கள் சட்டப்பூர்வ இருப்பை நிரூபிக்க, நிறுவனங்களின் பதிவாளர் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் படிக்கவும்: பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி?

பான் கார்டை ஆன்லைன் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

இந்தியாவில் வசிக்கும் வயது வந்த குடிமக்களுக்கு, NSDL மற்றும் UTIITSL போன்ற பல்வேறு டிஜிட்டல் தளங்கள் மூலம் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. பான் கார்டு விண்ணப்பத்தின்போது, விதிகளின்படி விண்ணப்பதாரர்கள் பின்வரும் மூன்று முக்கிய பிரிவுகளில் உரிய ஆவணங்களை ஆதாரங்களாகச் சமர்ப்பிக்க வேண்டும்:

1. அடையாளச் சான்று:

அடையாளச் சரிபார்ப்பிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள்:

  • ஆதார் கார்டு
  • வாக்காளர் அடையாள அட்டை
  • செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
  • செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
  • விண்ணப்பதாரரின் புகைப்படம் உள்ள ரேஷன் கார்டு
  • மத்திய அல்லது மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை

2. முகவரிச் சான்று:

உங்கள் தற்போதைய வசிப்பிட முகவரியைச் சரிபார்க்க ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள்:

  • ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம்
  • எலெக்ட்ரிசிட்டி, லேண்ட்லைன் போன் அல்லது பிராட்பேண்ட் பில்கள் (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)
  • பேங்க் அக்கௌன்ட் ஸ்டேட்மெண்ட் அல்லது கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட் (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)
  • தபால் நிலைய சேமிப்புக் கணக்கு புத்தகம்
  • சொத்து பதிவு ஆவணம் அல்லது சமீபத்திய சொத்து வரி மதிப்பீட்டு ஆணை

3. பிறந்த தேதிச் சான்று:

இந்த ஆவணம் உங்கள் பிறந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டைத் தெளிவாகக் காட்ட வேண்டும். இதற்கு ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள்:

  • நகராட்சி அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
  • மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து பெறப்பட்ட 10-ஆம் வகுப்புத் தேர்ச்சிச் சான்றிதழ்
  • ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட்
  • திருமணப் பதிவாளரால் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ்

குறிப்பு: உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி மற்றும் தற்போதைய முகவரி ஆகியவை சரியாக இருந்தால், அது மட்டுமே POI, POA மற்றும் DOB ஆகிய மூன்றிற்கும் போதுமானது.

இதையும் படிக்கவும்: ஆன்லைனில் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க படிப்படியான வழிகாட்டுதல்

வெளிநாட்டினருக்கான பான் கார்டு விண்ணப்பத் தேவை ஆவணங்கள்

இந்தியாவில் வருமானம் ஈட்டும் அல்லது இந்திய நிதிச் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சட்டப்படி பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர் வைத்திருக்க வேண்டும். அவர்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஃபார்ம் 49A-க்கு பதிலாக, ஃபார்ம் 49AA பயன்படுத்த வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணத் தேவைகள் சர்வதேச அளவிலான அடையாளங்களைச் சரிபார்க்கும் வகையிலும், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முறையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டினருக்கான அடையாளச் சான்று:

  • செல்லுபடியாகும் மற்றும் தற்போதைய பாஸ்போர்ட்டின் நகல்
  • இந்திய அரசால் வழங்கப்பட்ட இந்திய வம்சாவளி நபர் கார்டின் நகல்
  • இந்திய அரசால் வழங்கப்பட்ட வெளிநாட்டு இந்தியக் குடிமகன் கார்டின் நகல்
  • அவர்களின் சொந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அல்லது உயர் ஆணையத்தால் சான்றளிக்கப்பட்ட குடியுரிமை ஐடி எண், தேசிய ஐடி எண் அல்லது வரி செலுத்துபவர் அடையாள எண்ணின் நகல்

வெளிநாட்டினருக்கான முகவரிச் சான்று:

  • அவர்களின் தற்போதைய வசிப்பிட நாட்டின் பேங்க் அக்கௌன்ட் ஸ்டேட்மெண்ட்டின் நகல்
  • இந்தியாவில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியரின் வெளிநாட்டு வங்கி கணக்கு அறிக்கையின் நகல்
  • இந்தியாவில் தங்குவதற்கான சான்றிதழ் அல்லது மாநில போலீஸ் அதிகாரிகளால் வழங்கப்பட்ட வசிப்பிட அனுமதியின் நகல்
  • இந்திய முகவரியைக் காட்டும் வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்

இதையும் படிக்கவும்: இந்தியாவில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) எவ்வாறு பான் (பான்) கார்டுக்கு விண்ணப்பிப்பது?

மைனர்கள் மற்றும் மாணவர்களுக்கான பான் கார்டு ஆவணங்கள்

இந்தியாவில் பான் கார்டை பெறுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. ஒரு மைனர் வருமானம் ஈட்டினால் (குழந்தை நட்சத்திரங்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் போன்றவை) அல்லது பெற்றோர் தங்கள் குழந்தையின் பெயரில் முதலீடு செய்ய விரும்பினால், பான் கார்டு சட்டப்பூர்வமாகத் தேவைப்படும்.

மைனர்கள் சட்டப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யவோ அல்லது வரி ஆவணங்களில் கையொப்பமிடவோ முடியாது என்பதால், அவர்களின் விண்ணப்பத்தை "பிரதிநிதி மதிப்பீட்டாளரிடம்" (Representative Assessee) சமர்ப்பிக்க வேண்டும், இது பொதுவாக ஒரு பெற்றோர் அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்டப்பூர்வ பாதுகாவலர் ஆவார்.

விண்ணப்பத்திற்கு மைனர் மற்றும் பாதுகாவலர் ஆகிய இருவரின் ஆவணங்களும் தேவை:

  • மைனருக்கு: பிறந்த தேதி மற்றும் அடையாளச் சான்று. நகராட்சி பிறப்புச் சான்றிதழ் மற்றும் மைனரின் ஆதார் கார்டு ஆகியவை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள்.
  • பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு: பாதுகாவலர் தங்கள் சொந்த அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோரின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள்.

கையொழுத்து: பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மைனரின் சார்பாக விண்ணப்பத்தில் கையொப்பமிட வேண்டும். மைனர் 18 வயதை அடைந்தவுடன், கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் கையொழுத்தை மாற்ற முறையான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் படிக்கவும்: ஆன்லைனில் பான் (பான்) கார்டை எவ்வாறு டவுன்லோடு செய்வது?

நிறுவனங்களுக்கான பான் கார்டை விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

நிறுவனங்கள், லிமிடெட் லையபிலிட்டி பார்ட்னர்ஷிப், அறக்கட்டளைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் போன்ற வணிக அமைப்புகள் கார்ப்பரேட் வங்கிக் கணக்குகளைத் திறக்க, ஜிஎஸ்டி பதிவுகள் மற்றும் ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்ய, மற்றும் அனைத்து விதமான சட்டப்பூர்வ வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள பான் கார்டு வைத்திருப்பது கட்டாயமாகும். மேலும், இந்த அமைப்புகளுக்கான பான் கார்டு விண்ணப்ப ஆவணங்கள் அனைத்தும் அந்தந்த நிறுவனங்களின் சட்டப்பூர்வ உருவாக்கத்தையே முக்கியமாக நிரூபிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1. நிறுவனங்கள் மற்றும் LLPs

பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, நிறுவனங்களின் பதிவாளர் (RoC) அல்லது LLP பதிவாளரால் வழங்கப்பட்ட நிறுவனப் பதிவுச் சான்றிதழ் அல்லது அதன் நகலை சமர்ப்பிப்பது அவசியமான மற்றும் கட்டாயமான ஆவணமாகும்.

2. கூட்டாண்மை நிறுவனங்கள்

கூட்டாண்மை நிறுவனங்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, கூட்டாண்மையின் பதிவுச் சான்றிதழ் மற்றும் கூட்டாண்மையின் ஒப்பந்தம் ஆகிய இரண்டும் அல்லது அவற்றில் பொருத்தமான ஆவணம் தேவைப்படுகிறது.

3. அறக்கட்டளைகள்

அதிகாரப்பூர்வ அறக்கட்டளை ஒப்பந்தத்தின் நகல்

தொண்டு ஆணையர் வழங்கிய பதிவுச் சான்றிதழ் எண்ணின் நகல்.

4. நபர்களின் சங்கம் அல்லது உள்ளூர் அதிகாரம்

அமைப்பை நிறுவும் அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தின் நகல்.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அல்லது பிற தகுதியான அரசு அதிகாரியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் எண்ணின் நகல்.

முடிவுரை:

பான் கார்டு பெறுவது என்பது இந்தியாவில் ஒரு சட்டப்பூர்வமான நிதி அடையாளத்தை உருவாக்குவதற்கான மிக முக்கியமான படியாகும். விண்ணப்பதாரர் தனது வகையைத் (தனிநபர், நிறுவனம், வெளிநாட்டு நிறுவனம் போன்றவை) சரியாகக் கண்டறிந்து, சரியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். நீங்கள் ஆதார் e-KYC முறையை நம்பியிருக்கும் ஒரு தனிநபராக இருந்தாலும் சரி அல்லது சான்றளிக்கப்பட்ட பாஸ்போர்ட் நகல்களைத் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி, துல்லியமான மற்றும் செல்லுபடியாகும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

FAQs

இந்தியாவில் பான் கார்டு தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு முக்கிய முகவர்கள் (Service Providers) Protean (முன்னாள் TIN-NSDL) மற்றும் UTIITSL (UTI Infrastructure Technology And Services Limited) ஆவர். விண்ணப்பதாரர்கள் தங்களின் சந்தேகங்கள் அல்லது குறைகளைத் தீர்க்க இந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை எண்கள் மூலம் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம்.

இல்லை, பான் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, பொதுவாக அசல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றினால் போதுமானது. அசல் ஆவணங்களை உங்களிடமே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஆவணங்களில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் மட்டுமே, சரிபார்ப்புக்காக அசல் ஆவணங்களைக் கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்கலாம்.

ஆம், இந்தியாவில் ஒரு அறக்கட்டளை சட்டப்பூர்வமாக வரிக்குரிய அல்லது வரி விலக்கு பெறும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட, அறக்கட்டளை நிர்வாகிகள் அதிகாரப்பூர்வ அறக்கட்டளை ஒப்பந்தத்தின் நகல் அல்லது மாநிலத்தின் தொண்டு ஆணையரால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் எண்ணைச் சமர்ப்பிப்பது அவசியமான நடைமுறையாகும். இது அறக்கட்டவையின் சட்டப்பூர்வ இருப்பை உறுதிப்படுத்துகிறது.

பான் கார்டு விண்ணப்பத்திற்கான செயலாக்கக் கட்டணமானது, விண்ணப்பதாரர் குறிப்பிடும் தகவல் தொடர்பு முகவரியின் அடிப்படையில் மாறுபடும். அதாவது, இந்திய முகவரிக்கு பான் கார்டை அனுப்பக் கோரும் விண்ணப்பங்களுக்குக் கட்டணம் தோராயமாக Rs. 107 (வரிகள் உட்பட) ஆகும். வெளிநாட்டில் உள்ள முகவரிக்கு பான் கார்டை அனுப்பக் கோரும் விண்ணப்பங்களுக்குக் கட்டணம் தோராயமாக Rs. 1017 (வரிகள் உட்பட) ஆகும்.

ஆம், பான் கார்டு தொடர்பான சந்தேகங்கள், விண்ணப்ப நிலை, ஆவணங்கள் நிராகரிப்பு அல்லது குறைகளுக்கு வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ tininfo@nsdl.co.in என்ற ஈமெயில் முகவரிக்கு மெயில் அனுப்பலாம். மெயில் அனுப்பும்போது உங்கள் 15 இலக்க ஒப்புதல் எண்ணை குறிப்பிடுவது, உங்கள் விண்ணப்பத்தை விரைவாக அடையாளம் கண்டு தீர்வு காண உதவும்.

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers

+91

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers
+91