Skip to main content

ஒரு வேலைவிட்டு விலகிய பிறகு ஆன்லைனில் பி.எப். எவ்வாறு திரும்பப் பெறுவது

6 min readUpdated on 11th Aug, 2026by Angel One
ஈபிஎஃப்ஓ உங்கள் பணி நிதியத்திலிருந்து ஆன்லைனில் பணத்தை எளிதாகப் பெறுவதற்கு உதவுகிறது. தகுதி விதிகள், படிவங்கள், வரி விதிப்பு, நிலை கண்காணிப்பு மற்றும் சமீபத்திய பணம் பெறும் கொள்கையைப் புரிந்துகொள்ளுங்கள்.
Share

இந்தியாவில் PF என்பது ஊழியர்களின் நீண்டகால சேமிப்பாகவும் மற்றும் ஓய்வு பெற்ற பிறகு அந்த பணம் தங்களின் பாதுகாப்பாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில், வேலையிலிருந்து விலகிய பிறகு ஏற்படும் அவசர தேவைகளுக்காகவோ அல்லது தனிப்பட்ட செலவுகளுக்காகவோ அதில் இருந்து பணத்தை எடுக்கலாம்.

ஆன்லைனில் PF தொகையை எவ்வாறு எடுப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வது, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் நேரத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்கிறது. சரி இப்போது உங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது எப்படி, தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய பிற முக்கிய அம்சங்களைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

முக்கிய அம்சங்கள்:

  • உங்கள் PF தொகையை ஆன்லைனில் இருந்து எடுக்க, உங்கள் UAN மற்றும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும்.
  • நீங்கள் வேலையில்லாமல் இருந்தால், வேலையை விட்ட உடனேயே மொத்த PF தொகையிலிருந்து 75% வரையிலான தொகையை எடுக்கலாம்.
  • 12 மாதங்கள் தொடர்ந்து வேலையில்லாத பட்சத்தில் மட்டுமே முழு PF தொகையையும் எடுக்க முடியும், அதுவரை மொத்த PF தொகையிலிருந்து 25% இருப்பு கணக்கில் இருக்க வேண்டும்.
  • மார்ச் 2026-க்குள் ATM & UPI மூலமாகவும் PF பணத்தை எடுக்கும் வசதியை வழங்க EPFO திட்டமிட்டுள்ளது.

வேலை விலகலுக்குப் பிந்தைய PF விதிகள்:

EPFO என்பது இந்தியாவில் தொழிலாளர்களின் PF தொகையை நிர்வகிக்கும் தன்னாட்சி அமைப்பாகும். EPFO 3.0 சீர்திருத்தங்களின் கீழ் முன்பு இருந்த சிக்கலான 13 பல்வேறு விதிகளை எளிமைப்படுத்தி ஒரே சீரான விதிகளாக மாற்றியுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்களின் PF பணத்தை எளிதாகவும், விரைவாகவும் பெறலாம்.

  • வேலையிலிருந்து விலகிய உடனேயே மொத்த PF தொகையிலிருந்து 75% தொகை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
  • மீதமுள்ள 25% தொகையானது 12 மாதங்கள் தொடர்ந்து வேலையில்லாமல் இருந்த பிறகு மட்டுமே கிடைக்கும்.
  • புதிய விதிகளின்படி, 12 மாதங்கள் முடியும் வரை உங்கள் PF இருப்பில் குறைந்தது 25% இருக்க வேண்டும், இது ஓய்வுக்காலத்திற்கான வட்டி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்கிறது.
  • எம்ப்லாய்ஸ் பென்ஷன் ஸ்கீமிலிருந்து (EPS) பணம் எடுக்க இப்போது 36 மாதங்கள் வேலையில்லாமல் இருக்க வேண்டும், இது நீண்டகால ஓய்வூதிய பாதுகாப்பை ஊக்குவிக்கிறது.
  • வேலையிலிருந்து விலகிய 12 மாதங்களுக்குள் நீங்கள் புதிய நிறுவனத்தில் சேர்ந்தால், முழுத் தொகையையும் எடுக்க முடியாது, அதற்குப் பதிலாக உங்கள் PF கணக்கை புதிய முதலாளிக்கு மாற்ற வேண்டும்.
  • உங்கள் PF இருப்பை ஆன்லைனில் எடுக்க, உங்கள் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கை உங்கள் UAN உடன் இணைத்திருக்க வேண்டும்.
  • முன்பு சிக்கலாக இருந்த 13 விதிகள் இப்போது மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: அவை அத்தியாவசியத் தேவைகள் (எ.கா., உடல்நலக்குறைவு, கல்வி), வீட்டுத் தேவைகள் மற்றும் அவசர கால தேவைகள் ஆகியவையாகும்.

மேலும் படிக்க: Link Aadhaar With an EPF Account

புதிய EPF 3.0 எடுப்பதற்கான விதிகள்:

நீண்ட படிவங்களைத் தவிர்க்கவும், நேரத்தைக் குறைக்கவும் ATM மற்றும் UPI மூலம் PF எடுக்கும் வசதியை EPFO அறிவித்துள்ளது.

  • KYC சரிபார்க்கப்பட்ட பிறகு பல கோரிக்கைகள் உடனடியாக தானாகவே ஏற்றுக்கொள்ளப்படலாம், இதனால் வேலை முடியும் நேரம் மிகவும் குறையும்.
  • EPF கோரிக்கைகளைச் செயல்படுத்தும் கால அளவு 15 நாட்களில் இருந்து 8 வேலை நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • ஆதார் மற்றும் OTP சரிபார்ப்பு முறை மூலம் குறிப்பிட்ட இடங்களில் உள்ள EPF கியோஸ்க்களில் (Kiosk) பணத்தை எடுக்கலாம்.
  • KYC விவரங்கள் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்குச் சிறிய அளவிலான முன்பணக் கோரிக்கைகள் மனித தலையீடு இன்றி கணினி மூலமாகவே தானாகவே அங்கீகரிக்கப்படும்.
  • DigiLocker-ல் இப்போது உங்கள் PF பேலன்ஸ், கோரிக்கை நிலை மற்றும் பாஸ்புக் வரலாறு ஆகியவற்றை எளிதாகப் பார்க்கலாம்.

மேலும் தெரிந்து கொள்ள: How to Check EPF Balance?

வேலை விலகலுக்குப் பிறகு PF எடுப்பதற்கான நடைமுறை:

ஆன்லைன் செயல்முறை:

ஆன்லைன் செயல்முறைக்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிகள் இதோ:

  1. உறுப்பினர்களுக்கான EPFO-வின் ஒருங்கிணைந்த போர்ட்டலுக்கு செல்லவும்.
  2. உங்கள் UAN மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாகின் செய்யவும்.
  3. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒருமுறை OTP அனுப்பப்படும். அதை என்டர் செய்யவும்.
  4. ‘ஆன்லைன் சர்வீசஸ்’ பிரிவில், ‘கிளைம்(Form-31, 19, 10C & 10D)’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பிறகு நீங்கள் புதிய பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள், அங்கு உங்கள் வங்கி கணக்கு எண்ணை என்டர் செய்ய வேண்டும். விவரங்களை என்டர் செய்த பிறகு, ‘வெரிஃபை’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. ‘யெஸ்’ என்பதை செலக்ட் செய்து, ‘ப்ரோஸீட் டு ஆன்லைன் கிளைம்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. ‘ஐ வாண்ட் டு அப்ளை ஃபார்’ என்ற டேப்-இன் கீழ் நீங்கள் எடுக்க விரும்பும் பணத்தின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. ‘PF அட்வான்ஸ்’ படிவத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கான காரணத்தைக் குறிப்பிடவும். சில ஆவணங்களின் காப்பியை சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம். அந்த ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பிகளை இணைக்கவும்.
  9. பின்னர் விண்ணப்பத்தை சப்மிட் செய்யவும்.
  10. ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், EPFO அதைச் சரிபார்க்கும். சரிபார்ப்புக்குப் பிறகு, சில நாட்களில் உங்கள் வங்கி கணக்கில் PF தொகை வரவு வைக்கப்படும்.

ஆஃப்லைன் செயல்முறை:

  • காம்போசிட் கிளைம் ஃபார்ம் (ஆதார்): UAN உடன் ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இணைக்கப்பட்டு, KYC முழுமையாக முடிந்திருந்தால் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம். இதில் நிறுவனத்தின்/முதலாளியின் சான்றொப்பம் தேவையில்லை. நேரடியாக PF அலுவலகத்திலேயே சமர்ப்பிக்க முடியும்.
  • காம்போசிட் கிளைம் ஃபார்ம் (ஆதார் அல்லாத): ஆதார் விவரங்கள் UAN உடன் இணைக்கப்படாத போது இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு கட்டாயமாக நிறுவனத்தின்/முதலாளியின் கையொப்பம் மற்றும் சான்றிதழ் அவசியம்.

PF எடுக்க வேலையிலிருந்து வெளியேறிய தேதியை என்டர் செய்யும் முறை:

  1. UAN போர்ட்டலில் லாகின் செய்யவும்.
  2. ‘மேனேஜ்’ என்பதைத் தேர்ந்தெடுத்து, டிராப்-டவுன் மெனுவிலிருந்து ‘மார்க் எக்ஸிட்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் பணிபுரிந்த நிறுவனங்களின் பட்டியலிலிருந்து உங்கள் முதலாளியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்கள் பிறந்த தேதி, வேலையில் சேர்ந்த தேதி மற்றும் வெளியேறிய தேதியை ஆவணங்களின்படி சரியாக என்டர் செய்யவும்.
  5. சர்வீஸ் ஹிஸ்டரி டேப்-இன் கீழ், ‘வியூ’ பகுதிக்குச் சென்று ஏதேனும் அப்டேட் கிடைத்துள்ளதா என்பதை சரிப்பார்க்கவும்.

மேலும் படிக்க: Universal Account Number (UAN)

உங்கள் PF ஸ்டேட்டஸை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

ஆன்லைனில் PF ஸ்டேட்டஸை சரிபார்க்க, முதலில் EPFO இணையதளத்திற்குச் சென்று எம்பிளாய் சர்வீசஸ் என்ற பகுதிக்குச் செல்லவும்.

உங்கள் கோரிக்கை நிலையை பற்றி தெரிந்து கொள்ள அதற்கான விருப்பத்தைத் செலக்ட் செய்யவும்.

அதன் பிறகு, பாஸ்புக் போர்ட்டலுக்குத் திருப்பிவிடும் லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

உங்கள் UAN, பாஸ்வோர்ட் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தி லாகின் செய்தவுடன், "வியூ கிளைம் ஸ்டேட்டஸ்" பட்டனை செலக்ட் செய்து உங்கள் ஸ்டேட்டஸை உடனடியாகப் பார்க்கலாம்.

EPF எடுப்பதற்கான படிவங்கள்:

  • EPF Form 31: EPF Form 31 என்பது அவசர கால தேவைகளுக்காக, உங்கள் EPF கணக்கிலிருந்து ஒரு பகுதியை எடுக்க பயன்படுத்தப்படும்.
  • EPF Form 19: EPF Form 19 என்பது வேலையை விட்டு விலகும் போது உங்கள் வருங்கால வைப்பு நிதி பணத்தை முழுமையாகப் பெறப் பயன்படுத்தப்படும்.
  • EPF Form 10C: 6 மாதங்கள் முதல் 10 வருடங்கள் முழு சேவை முடிவதற்குள் வேலையை விட்டு விலகும் ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய பலன்களைப் பெற EPFO போர்ட்டல் வழியாகப் படிவம் 10C பயன்படுத்தப்படுகிறது.

வேலை விலகலுக்குப் பிறகு PF மீதான வரி விதிப்பு:

PF பணத்தின் மீதான வரி விதிப்பானது, நீங்கள் வெவ்வேறு முதலாளிகளிடம் பணிபுரிந்த மொத்த காலத்தைப் பொறுத்தது.

நீங்கள் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரியும் முன் PF-ஐ எடுத்தால், ஊழியர் பங்களிப்பு (Section 80C-ன் கீழ்), முதலாளி பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை வருமானமாகக் கருதப்பட்டு வரி விதிக்கப்படும்.

வருமானம் ரூ.50,000-க்கு மேல் இருந்து PAN கார்டு இணைக்கப்பட்டிருந்தால், EPFO 10% TDS பிடிக்கும்; PAN எண் இல்லையெனில், TDS அதிகமாக பிடிக்கப்படும். வரி விலக்கு வரம்பிற்குள் வருமானம் இருந்தால் TDS பிடிக்கப்படாமல் இருக்க Form 15G அல்லது Form 15H சமர்ப்பிக்கலாம்.

5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த பிறகு PF தொகையை எடுத்தால், அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டிற்கும் எந்தவித வரியும் விதிக்கப்படாது.

5 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணிபுரிதல், முதலாளியின் நிறுவனம் மூடப்படுதல், உறுப்பினர் அல்லது குடும்ப உறுப்பினரின் உடல்நலக்குறைவு போன்ற சில காரணங்களுக்கு PF வரி விலக்கு உண்டு.

முடிவுரை:

வேலையிலிருந்து விலகிய பிறகு உங்கள் PF தொகையை எவ்வாறு எடுப்பது மற்றும் அதற்கான நிபந்தனைகள் என்ன என்பதை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவசர தேவைகளுக்காக PF தொகையை எடுப்பது உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவினாலும், அது எதிர்கால ஓய்வூதியச் சேமிப்பை பாதிக்கும். வேலையை மாறும் போது PF பணத்தை முழுமையாக எடுப்பதை விட, அதை புதிய நிறுவனத்தின்/முதலாளியின் UAN கணக்கிற்கு மாற்றுவது அல்லது ஓய்வுக்காலத்திற்காக வைத்திருப்பது புத்திசாலித்தனமான நடைமுறையாகும்.

FAQs

ராஜினாமா செய்த பிறகு PF பணவிலகல்கள் நிராகரிக்கப்படுமா


ஆம். முழுமையற்ற விவரங்கள், விவரங்களில் உள்ள தவறான தகவல்கள், பல விண்ணப்பங்கள் அல்லது போதுமான பேலன்ஸ் இல்லாதது போன்ற காரணங்களால் PF கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.

நான் என் வேலைவிட்ட பிறகு என் முழு பி.எப் தொகையையும் திரும்பப் பெற முடியுமா

ஆம். வேலையிலிருந்து விலகிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு உங்கள் முழு PF தொகையையும் எடுக்கலாம். இருப்பினும், 5 ஆண்டுகள் தொடர்ந்து பணி முடிவதற்கு முன் எடுக்கும் தொகைக்கு வரி விதிக்கப்படலாம்.

வேலையிலிருந்து விலகிய பிறகு திரட்டப்பட்ட PF தொகையை எடுப்பது கட்டாயமா?

இல்லை. வேலையிலிருந்து விலகிய பிறகு திரட்டப்பட்ட PF தொகையை எடுப்பது கட்டாயமில்லை. நீங்கள் விரும்பும் வரை கணக்கைச் செயல்பாட்டில் வைத்திருக்கலாம், அது வட்டி ஈட்டிக்கொண்டே இருக்கும் அல்லது புதிய முதலாளிக்கு மாற்றிக்கொள்ளலாம்.

எந்த படிவம் பி.எப் தொகையை திரும்ப பெற தாக்கல் செய்ய வேண்டும்

PF பேலன்ஸை முழுமையாக எடுக்க, நீங்கள் EPF Form 19-ஐ ஆன்லைனிலோ அல்லது EPFO அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் PF பேலன்ஸில் ஒரு பகுதியை மட்டும் எடுக்க விரும்பினால், EPF Form 31-ஐப் பயன்படுத்த வேண்டும்.

PF தொகையை எடுப்பதற்குப் பதிலாக புதிய முதலாளிக்கு மாற்ற முடியுமா?

ஆம். வேலையிலிருந்து விலகிய பிறகு பணத்தை எடுப்பதற்குப் பதிலாக, உங்கள் PF கணக்கை புதிய முதலாளிக்கு மாற்றிக்கொள்ளலாம்.

புதிய முதலாளிக்கு மாற்றாமல் முந்தைய நிறுவனத்தின் PF-ஐ எடுக்க முடியுமா?

ஆம். நீங்கள் PF தொகையை புதிய முதலாளிக்கு மாற்றாமல், அதிலிருந்து ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ எடுக்க தேர்வு செய்யலாம்.

EPF உறுப்பினராக வயது வரம்பு ஏதேனும் உள்ளதா?

இல்லை, EPF கணக்கில் சேர குறைந்தபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. இருப்பினும், நீங்கள் வருமானம் ஈட்டும் நபராகவும் மற்றும் EPFO-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிபவராகவும் இருந்தால் மட்டுமே இதில் பங்களிக்க முடியும்.

வேலையிலிருந்து விலகிய பிறகு PF-ஐ எடுக்கவில்லை என்றால் என்னவாகும்?

நீங்கள் வேலையிலிருந்து விலகிய பிறகு PF-ஐ எடுக்கவில்லை என்றால், அது தொடர்ந்து வட்டி ஈட்டிக்கொண்டே இருக்கும் மற்றும் நீங்கள் அதை எடுக்கும் வரை அல்லது புதிய முதலாளிக்கு மாற்றும் வரை உங்கள் கணக்கில் இருக்கும்.

PF எடுப்பதற்கான குறைந்தபட்ச கால அளவு என்ன?

நீங்கள் 75% வரை பணத்தை உடனடியாக எடுக்கலாம், ஆனால் முழுமையாக பணத்தை எடுக்கும் 12 மாதங்கள் வேலையில்லாமல் இருக்க வேண்டும்.

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers
+91