நிதி நிலைத்தன்மை மற்றும் நிதி வளர்ச்சியை அடைய நாம் முயற்சிக்கும்போது, சேமிப்புக் கணக்கு மற்றும் ஃபிக்சட் டெபாசிட் ஆகிய இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்படக்கூடும். இந்த இரண்டு சேமிப்புக் கருவிகளுமே உங்களது நிதி இலக்குகள் மற்றும் உடனடி பணத் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. சேமிப்புக் கணக்கிற்கும், ஃபிக்சட் டெபாசிட்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம். உங்களது பணத்தை எங்கு சேமித்தால் அல்லது முதலீடு செய்தால் சிறந்த லாபம் கிடைக்கும் என்பதைத் தீர்மானிக்க இது உங்களுக்கு உதவும்.
சேமிப்புக் கணக்கு என்றால் என்ன?
சேமிப்புக் கணக்கு என்பது உங்களது பணத்தைப் பாதுகாப்பாக வைப்பதோடு, மிதமான வட்டியையும் வழங்கும் ஓர் அடிப்படையான நிதிச் சேமிப்புக் கருவியாகும். உங்களது தினசரி செலவுகளுக்கான தொகையைச் சேமிப்பிலிருந்து தனியாகப் பிரித்து நிர்வகிக்க விரும்பினால், இதுவே சரியான தேர்வாகும். அவசரகால நிதி மற்றும் குறுகிய காலத் தேவைகளுக்கு இக்கணக்கைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் எளிதாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
சேமிப்புக் கணக்குகளுக்கும், ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கும் இடையே உள்ள முதன்மையான வேறுபாடே அவற்றின் நெகிழ்வுத்தன்மை மற்றும் வட்டி விகிதங்களில்தான் உள்ளது. சேமிப்புக் கணக்குகள் அதிக உடனடி பணப்புழக்கம் கொண்டவை. அதாவது, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுக்குத் தேவைப்படும்போது எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, அவசரகால நிதியைச் சேமித்து வைக்க இதுவே மிகவும் ஏற்ற இடமாகும்.
சேமிப்புக் கணக்கின் நன்மைகள் மற்றும் தீமைகள்
நன்மைகள்:
- எளிதில் பணம் எடுக்கும் வசதி: சேமிப்புக் கணக்கில் பணத்தை எடுப்பது மிகவும் எளிது. அவசரத் தேவைகளுக்கும், தினசரி செலவுகளுக்கும் உடனடியாகப் பணத்தைப் பயன்படுத்தலாம்.
- எளிதில் கிடைக்கும் வசதி: அனைத்து வங்கிகளிலும் சேமிப்புக் கணக்கு தொடங்குவது எளிது என்பதால், நாடு முழுவதும் இது பரவலாகக் கிடைக்கக்கூடிய ஒரு சேவையாகும்.
- குறைந்த ஆரம்பத் தொகை: பல வங்கிகள் குறைந்த தொகையிலேயே சேமிப்புக் கணக்கைத் தொடங்க அனுமதிக்கின்றன.
தீமைகள்:
- குறைந்த வட்டி விகிதங்கள்: சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் மிகவும் குறைவு. இதனால் பணவீக்கத்தால் உங்கள் பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது.
- குறைந்தபட்ச இருப்புத் தொகை: சில வங்கிக் கணக்குகளில் குறிப்பிட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு பராமரிக்கத் தவறினால் பிடிக்கப்படும் அபராதக் கட்டணமானது, நாம் பெறக்கூடிய வட்டி வருமானத்தையும் விட அதிகமாகி நமது சேமிப்பைக் குறைத்துவிடும்.
ஃபிக்சட் டெபாசிட் கணக்கு என்றால் என்ன?
ஃபிக்சட் டெபாசிட் (எஃப்டி) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிக வட்டி விகிதத்தை வழங்கும் ஒரு முதலீட்டு முறையாகும். இந்தக் காலம் சில நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரை இருக்கலாம். இதன் வட்டி விகிதம் சாதாரண சேமிப்புக் கணக்கை விட ஃபிக்சட் டெபாசிட்டில் வட்டி விகிதம் கணிசமாக அதிகமாக இருக்கும். எஃப்டி-யின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இது உறுதியான லாபத்தை வழங்கும். ஓய்வூதியத் திட்டம் போன்ற நீண்ட கால சேமிப்பு இலக்குகளுக்கு இதுவே பலரின் முதல் தேர்வாக உள்ளது.
உடனடியாகப் பணம் தேவைப்படாத, பாதுகாப்பான முறையில் தனது சேமிப்பைப் பெருக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த நிதித் தேர்வாகும்.
ஃபிக்சட் டெபாசிட்டின் நன்மைகள் மற்றும் தீமைகள்
நன்மைகள்:
- நெகிழ்வான கால அவகாசம்: எஃப்டி குறுகிய காலம் முதல் 10 ஆண்டுகள் வரை பல்வேறு கால வரம்புகளை வழங்குகிறது. பொதுவாக நீண்ட காலத்திற்கு அதிக வட்டி கிடைக்கும்.
- உறுதியான லாபம்: முதிர்வு காலத்தில் உறுதியான லாபம் கிடைப்பதால், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை விட இது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
- வரிச் சலுகைகள்: சில குறிப்பிட்ட எஃப்டி திட்டங்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிச் சலுகைகள் உண்டு.
தீமைகள்:
- குறைந்த லிக்யூடிட்டி: கால அவகாசம் முடியும் வரை எஃப்டி பணத்தை எளிதாக எடுக்க முடியாது. முன்கூட்டியே பணத்தை எடுத்தால் அபராதம் விதிக்கப்படும், இதனால் கிடைக்கும் தொகையும் குறையலாம்.
பயன்படுத்திப் பாருங்கள்: ஃபிக்சட் டெபாசிட் கால்குலேட்டர்
சேமிப்புக் கணக்கிற்கும் ஃபிக்சட் டெபாசிட்டிற்கும் உள்ள முக்கிய வித்தியாசங்க
|
விவரங்கள் |
ஃபிக்சட் டெபாசிட் (எஃப்டி) |
சேமிப்புக் கணக்கு |
|
நோக்கம் |
நீண்ட காலத்திற்கு அதிக வட்டி ஈட்டுவது |
பணத்தைப் பாதுகாப்பாகவும் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய வகையிலும் வைத்திருப்பது |
|
கால அளவு |
குறிப்பிட்ட காலம் (நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை) |
குறிப்பிட்ட கால வரம்பு இல்லை |
|
வட்டி விகிதம் |
பொதுவாக அதிகம் |
ஒப்பிடும்போது குறைவு |
|
பணம் எடுக்கும் வரம்பு |
கால அவகாசம் முடிந்த பிறகு |
எப்போது வேண்டுமானாலும் (குறைந்தபட்ச இருப்புத் தொகை விதிக்கு உட்பட்டு) |
|
கடன் பெற ஈடாக வைக்கலாம் |
ஆம் |
பொதுவாக இல்லை |
|
வரிச் சலுகைகள் |
சில குறிப்பிட்ட காலங்களுக்கு உண்டு |
இல்லை |
|
லிக்யூடிட்டி |
குறைவு |
அதிகம் |
சேமிப்புக் கணக்கை விட ஃபிக்சட் டெபாசிட்டை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
- அதிக வட்டி விகிதங்கள்: சேமிப்புக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது எஃப்டி-யில் வட்டி அதிகம். இது பணவீக்கத்தின் தாக்கத்தைத் தாண்டி உங்கள் சேமிப்பு வளர இது உதவுகிறது.
- வரிச் சலுகைகள்: குறிப்பாக 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட கால அவகாசம் கொண்ட எஃப்டி திட்டங்கள் வரிச் சலுகைகளை வழங்குகின்றன.
- ஒழுக்கமான முதலீட்டு முறை: முதிர்வு காலம் வரை பணம் பூட்டப்பட்டிருப்பதால், தேவையில்லாமல் பணத்தைச் செலவழிக்காமல் சேமிப்பதில் ஒரு நிதி ஒழுக்கத்தை இது ஏற்படுத்துகிறது.
- கடன் பெற உதவும்: அவசர கால நிதித் தேவைகளின் போது எஃப்டி-யை ஈடாக வைத்து நீங்கள் எளிதாகக் கடன் பெறலாம்.
- நெகிழ்வான கால அவகாசம்: பல்வேறு கால அளவுகள் இருப்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளுக்கு ஏற்ப திட்டமிடலாம்.
முடிவுரை:
சேமிப்புக் கணக்கிற்கும், ஃபிக்சட் டெபாசிட் கணக்கிற்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொண்டு, உங்களது நிதி இலக்குகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எஃப்டி மற்றும் எஸ்ஐபி கால்குலேட்டர் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி, ஃபிக்சட் டெபாசிட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கிடைக்கும் லாபங்களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இறுதியில், சேமிப்புக் கணக்கின் பாதுகாப்பு மற்றும் லிக்யூடிட்டி வேண்டுமா அல்லது ஃபிக்சட் டெபாசிட்டின் அதிக லாபம் வேண்டுமா என்பது உங்கள் நிதி இலக்குகளைப் பொறுத்தது.
முதலீட்டு உலகத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த, டீமேட் கணக்கு தொடங்குவது மிகவும் அவசியமாகும். ஏஞ்சல் ஒன் பிளாட்பார்மைப் பயன்படுத்தி இன்றே கணக்கைத் தொடங்குங்கள்.
