Skip to main content

SEBI அல்கோ வர்த்தக விதிகளைப் பயன்படுத்தி எப்படி முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா? முழு விபரம் இங்கே!

6 min readUpdated on 12th Aug, 2026by Angel One
இந்தியாவில் தானியங்கி வர்த்தகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பை மேம்படுத்த, SEBI-ன் அல்கோ வர்த்தக விதிகள் அனுமதிப்பதோடு, முறையான கண்காணிப்பு மற்றும் இடர் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகின்றன.
Share

இந்தியாவில் அல்காரிதமிக் வர்த்தகம், செபியின் புதிய அல்கோ வர்த்தக விதிகளின் அறிமுகத்துடன் ஒரு கட்டமைக்கப்பட்ட கட்டத்திற்குள் நுழைகிறது. தானியங்கி உத்திகள் சில்லறை முதலீட்டாளர்களுக்கு எளிதில் கிடைப்பதால், ஒழுங்குமுறை கவனம் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்புகளை வலுப்படுத்துவதை நோக்கி மாறியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இந்த கட்டமைப்பு, தானியங்கி வர்த்தக அமைப்புகள் கண்காணிக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இயங்குவதை உறுதிசெய்ய, பங்குச்சந்தைகள், தரகர்கள் மற்றும் அல்காரிதம் வழங்குநர்கள் மீது பொறுப்பைச் சுமத்துகிறது. இந்தியப் பங்குச்சந்தையில் அல்காரிதமிக் உத்திகள் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகின்றன என்றும் செயல்படுத்தப்படுகின்றன மற்றும் கண்காணிக்கப்படுகின்றன? என்பதை இவை பாதிப்பதால், இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்வது முக்கியமாகும்.

முக்கிய அம்சங்கள்

  • அனைத்து அல்காரிதமிக் உத்திகளும் நேரடி பயன்பாட்டிற்கு முன், பங்குச்சந்தையால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் கண்காணிக்கப்படும் கட்டமைப்பிற்குள் இயங்க வேண்டும்.
  • அல்காரிதமிக் செயல்பாட்டின் கண்காணிப்பு, தணிக்கை தடயங்கள், இடர் கட்டுப்பாடுகள் மற்றும் இணக்கத்தன்மைக்கு தரகர்களே பொறுப்பாவார்கள்.
  • அல்காரிதம் வழங்குநர்கள் பதிவு, வெளிப்படுத்தல் மற்றும் பிளாக் பாக்ஸ் மாதிரிகளுக்கான கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள்.
  • இந்த கட்டமைப்பு வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், செயல்பாட்டு மற்றும் சந்தை அபாயங்களைக் குறைக்கவும், ஒழுங்குபடுத்தப்பட்ட தானியக்கத்தை ஆதரிக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அல்காரிதமிக் வர்த்தகம் என்றால் என்ன?

இந்தியாவில் அல்காரிதமிக் வர்த்தகம் என்பது, பங்குச்சந்தையில் தானாகவே பங்குகளை வாங்க அல்லது விற்க முன் வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் கணினி சார்ந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. இந்த வழிமுறைகள் விலை இயக்கம், நேரம், வர்த்தக அளவு அல்லது பிற சந்தை நிலவரங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் அமையலாம். இது கைமுறை தலையீட்டைக் குறைத்து, வேகத்துடனும் நிலைத்தன்மையுடனும் வர்த்தகங்களைச் செயல்படுத்த உதவுகிறது.

காலப்போக்கில், தானியங்கி வர்த்தகக் கருவிகள் மற்றும் API-களுக்கான அணுகல் அதிகரித்ததால், நிறுவன முதலீட்டாளர்களைத் தாண்டி சில்லறை முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்கத் தொடங்கினர். இந்த மாற்றத்தினால், செபி அல்கோ வர்த்தக விதிமுறைகள், தானியங்கி வர்த்தகம் ஒரு வெளிப்படையான மற்றும் கண்காணிக்கப்பட்ட சந்தை சூழலில் இயங்குவதை உறுதி செய்ய, அங்கீகாரம், கண்காணிப்பு, தணிக்கை மற்றும் இடர் கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பை அறிமுகப்படுத்தின.

இந்தியாவில் அல்கோ வர்த்தகத்தையும் அதன் வளர்ச்சியையும் புரிந்துகொள்ளும் முறைகள்:

அல்காரிதமிக் வர்த்தகம், பெரும்பாலும் அல்கோ வர்த்தகம் என்று அழைக்கப்படுகிறது, இது முன் வரையறுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் பங்குகளைத் தானாகவே வாங்குதல் மற்றும் விற்பதாகும். இந்த விதிகள் கணினி நிரல்கள் மற்றும் கணித மாதிரிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன, இதனால் உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளைக் குறைத்து, திறமையான முறையில் வர்த்தகம் செய்ய முடியும். ஒருமுறை தூண்டப்பட்டால், உத்தரவுகள் கைமுறை தலையீடு இன்றி தானாகவே இடப்படும், இது செயல்பாட்டு தாமதங்களையும் மனித சார்புகளையும் குறைக்கிறது.

இந்தியாவில், அல்காரிதமிக் வர்த்தகத்தின் வளர்ச்சி, வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு, அதிகரித்து வரும் சில்லறை முதலீட்டாளர்களின் பங்கேற்பு மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஏபிஐI-அடிப்படையிலான வர்த்தகக் கருவிகளுக்கானப் பரந்த அணுகல் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது. பயன்பாடு அதிகரித்தவுடன், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், கண்காணிப்பை வலுப்படுத்தவும் மற்றும் சந்தை அபாயங்களைக் குறைக்கவும் செபி ஒரு கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது.

IMARC குழுவின் மதிப்பீட்டின்படி, இந்திய அல்கோ வர்த்தக சந்தை 2024-ல் சுமார் 562 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது மற்றும் 2025-2033 காலகட்டத்தில் சுமார் 9.5% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்து, 2033-க்குள் 1,274 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

செபி-யின் சொந்த ஆய்வின்படி, ஊக வழித்தோன்றல் வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்களின் அதிக பங்கேற்பால், தனிப்பட்ட F&O வர்த்தகர்களின் நிகர இழப்பு FY25-ல் 41% அதிகரித்து ₹1.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இதுவே இந்த ஒழுங்குமுறை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் வாசிக்கவும்: ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகம்

அல்கோ வர்த்தக உத்திகள்

அல்கோ வர்த்தக உத்திகள், வர்த்தகத்தை தானியக்கமாக்க விலை, அளவு அல்லது நேரத்தின் அடிப்படையில் முன் வரையறுக்கப்பட்ட விதிகளைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில், இந்த உத்திகள் செயல்பாட்டு வேகம் மற்றும் ஆர்டர் அளவின் அடிப்படையில் குறைந்த அதிர்வெண் மற்றும் உயர் அதிர்வெண் அணுகுமுறைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

குறைந்த அதிர்வெண் வர்த்தகம்

  • உத்திகள் நீண்ட கால இடைவெளிகளிலும், ஒப்பீட்டளவில் சிறிய ஆர்டர்களிலும் செயல்படுகின்றன.
  • டிரெண்ட்-ஃபாலோயிங், ஆர்பிட்ரேஜ் மற்றும் மீன் ரிவர்ஷன் மாதிரிகள் பொதுவானவை.
  • இந்த உத்திகள் வேகத்தை விட விலை வடிவங்கள், அளவு சமிக்ஞைகள் அல்லது புள்ளிவிவர உறவுகளை அதிகம் சார்ந்துள்ளன.
  • குறைக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் தாமதத் தேவைகள் காரணமாக, சில்லறை வர்த்தகர்களிடையே LFT மிகவும் பிரபலமானது.

உயர் அதிர்வெண் வர்த்தகம்

  • மிக அதிக வேகத்தில் ஏராளமான ஆர்டர்களைச் செயல்படுத்த இந்த உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • மார்க்கெட் மேக்கிங், புள்ளிவிவர ஆர்பிட்ரேஜ் மற்றும் லேட்டன்சி வர்த்தகம் ஆகியவை இதில் அடங்கும்.
  • மேம்பட்ட தொழில்நுட்பம், கோலோகேஷன் வசதிகள் மற்றும் மிக முக்கியமான இடர் கட்டுப்பாடுகள் இதற்குத் தேவை.
  • சந்தை நிலைத்தன்மையில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதால், HFT செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

இதையும் வாசிக்கவும்: உயர் அதிர்வெண் வர்த்தகம் (High-Frequency Trading) என்றால் என்ன?

புதிய செபி விதிமுறைகள்

ஒழுங்குபடுத்தப்படாத சில்லறை பங்கேற்பு மற்றும் சந்தை அபாயங்கள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய, செபி அல்காரிதமிக் வர்த்தகத்தில் விரிவான விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அல்காரிதமிக் வர்த்தக வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் அங்கீகாரம், வரிசைப்படுத்தல், கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறலை நிர்வகிக்கின்றன.

அனைத்து அல்காரிதமிக் உத்திகளுக்கும் கட்டாயப் பங்குச்சந்தை அங்கீகாரம்

  • தரகர்கள் தங்கள் அல்காரிதமிக் உத்திகள், வரிசைப்படுத்துவதற்கு முன் பங்குச்சந்தை அங்கீகாரம் மற்றும் உள்வாங்கல் தேவைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • அல்காரிதமிக் வர்த்தகச் செயல்பாடுகள் நேரடி பயன்பாட்டிற்கு முன் பங்குச்சந்தை மற்றும் தரகர் அங்கீகாரக் கட்டமைப்பிற்குள் இயங்க வேண்டும்.

தனித்துவமான அல்கோ ஐடி குறிச்சொல்

  • அல்காரிதமால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு ஆர்டரும், பங்குச்சந்தையால் வழங்கப்பட்ட ஒரு தனித்துவமான அல்கோ-ஐடியைக் கொண்டிருக்க வேண்டும்.
  • ஏப்ரல் 1, 2026 முதல், தரகர்கள், அல்கோ வழங்குநர்கள் அல்லது பதிவுசெய்யப்பட்ட சில்லறை வர்த்தகர்கள் யாராக இருந்தாலும், அனைத்து அல்காரிதமிக் ஆர்டர்களுக்கும் இந்த குறிச்சொல் தேவை.
  • இது பங்குச்சந்தைகள் அல்காரிதம்களைக் கணக்கிடவும், நடத்தையைக் கண்காணிக்கவும் மற்றும் சிக்கல்களை நிகழ்நேரத்தில் கண்டறியவும் உதவும்.
  • உத்தியின் வெற்றிகரமான சோதனை மற்றும் அங்கீகாரத்திற்குப் பிறகு அல்கோ ஐடிகள் வழங்கப்படும்.

வகைப்பாடு: ஒயிட் பாக்ஸ் மற்றும் பிளாக் பாக்ஸ் அல்கோக்கள்

  • ஒயிட் பாக்ஸ் அல்கோக்கள்: உத்தியின் தர்க்கம் முழுமையாக வெளிப்படையானது மற்றும் நகலெடுக்கக்கூடியது — விதிகள் ஆவணப்படுத்தப்பட்டு பயனர் மற்றும் பங்குச்சந்தையின் ஆய்வுக்குக் கிடைக்கின்றன (உதாரணமாக, மூவிங் ஆவரேஜ் கிராஸ்ஓவர் உத்தி). இவற்றுக்கு பங்குச்சந்தை அங்கீகாரம் பெறுவது எளிது.
  • பிளாக் பாக்ஸ் அல்கோக்கள்: அடிப்படை தர்க்கம் தனியுரிமையானது மற்றும் பயனருக்கு வெளிப்படுத்தப்படுவதில்லை. பிளாக் பாக்ஸ் உத்திகளை வழங்கும் வழங்குநர்கள், வாடிக்கையாளர்களுக்குச் சட்டப்பூர்வமாக வழங்கும் முன், செபி-யில் பதிவுசெய்யப்பட்ட ஆராய்ச்சி ஆய்வாளர்களாக பதிவு செய்ய வேண்டும். அல்காரிதத்தின் தர்க்கத்தில் ஏதேனும் பொருள்முறை மாற்றம் இருந்தால் அதற்குப் புதிய பங்குச்சந்தை அங்கீகாரம் தேவை.

அல்காரிதம் வழங்குநர்களின் பதிவு செய்யும் முறை

  • அனைத்து அல்காரிதம் வழங்குநர்களும், தரகர்கள் அவர்களை இணைப்பதற்கு முன், பங்குச்சந்தைகளுடன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • இது சரிபார்க்கப்படாத நிறுவனங்கள் சில்லறை வர்த்தகர்களுக்கு அல்காரிதமிக் வர்த்தக தீர்வுகளை வழங்குவதைத் தடுக்கிறது.

தரகர் உள்கட்டமைப்பு வழியாக மட்டுமே வரிசைப்படுத்தல்

  • தரகர்கள் மற்றும் பங்குச்சந்தைகளால் வரையறுக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கண்காணிக்கப்பட்ட அணுகல் வழிமுறைகள் மூலம் இயங்க API அணுகல் அவசியம்.
  • அல்காரிதம் வரிசைப்படுத்தல், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளைக் கொண்ட, அங்கீகரிக்கப்பட்ட தரகர்-இணைக்கப்பட்ட உள்கட்டமைப்பு மூலம் இயங்க வேண்டும்.
  • அனைத்து சில்லறை அல்கோ உத்திகளும், கிளையண்டால் உருவாக்கப்பட்டதா? அல்லது விற்பனையாளரால் வழங்கப்பட்டதா? என்பது முக்கியமல்ல, அவை NSE-ன் செயல்பாட்டு தரநிலைகளின்படி இந்திய சர்வர்களில் ஹோஸ்ட் செய்யப்பட வேண்டும்.
  • தரகர் அமைப்புகள் பதிவுகளை, வர்த்தகத்திற்கு முந்தைய இடர் சோதனைகளை மற்றும் தணிக்கை தயார்நிலையை ஆதரிக்க வேண்டும்.

தரகர் பொறுப்பு மற்றும் கண்காணிப்பு

  • பொருந்தக்கூடிய அல்காரிதமிக் உத்திகளுக்கான இணக்கத்தன்மையைக் கண்காணிப்பதற்கும் எளிதாக்குவதற்கும் தரகர்கள் பொறுப்பாவார்கள்.
  • பங்குச்சந்தையால் அங்கீகரிக்கப்பட்ட அல்காரித்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
  • தரகர்கள் API பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டும், பதிவுகளை வைத்திருக்க வேண்டும் மற்றும் தணிக்கை தடயங்களை பராமரிக்க வேண்டும்.
  • அல்காரிதம் தொடர்பான புகார்கள் மற்றும் சிக்கல்களைத் தரகர்களே கையாள வேண்டும்.

தரகர்களுக்கான கட்டாய இடர் தணிப்பு கட்டுப்பாடுகள் என்னென்ன?

  • அதிகப்படியான ஆர்டர்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த ஆர்டர் த்ரோட்லிங் வரம்பு.
  • பழுதடைந்த அல்காரிதம்களை உடனடியாக நிறுத்த கில் ஸ்விட்ச் (Kill switch) வழிமுறைகள்.
  • அங்கீகரிக்கப்பட்ட அல்காரிதமிக் செயல்பாட்டிற்கு வலுவான அங்கீகாரம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட API அணுகல் நடவடிக்கைகள் தேவை.
  • அனைத்து API அணுகலுக்கும் இரு-காரணி அங்கீகாரம் (2FA) கட்டாயமாகும். OAuth-அடிப்படையிலான அங்கீகாரம் தேவை; பாதுகாப்பற்ற, திறந்த API-கள் அனுமதிக்கப்படாது.
  • ஒவ்வொரு புதிய வர்த்தக நாள் தொடங்குவதற்கு முன்பே அனைத்து API அமர்வுகளும் வெளியேற வேண்டும்.
  • NSE-ன் செயல்பாட்டு சுற்றறிக்கையின்படி, தரகர்கள் அனைத்து API-அடிப்படையிலான ஆர்டர்கள் மற்றும் வர்த்தகங்களின் விரிவான தணிக்கை தடயத்தை குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குப் பராமரிக்க வேண்டும்.
  • API-க்கான கட்டுப்படுத்தப்பட்ட அணுகலுக்கு நிலையான, வொயிட்லிஸ்ட் செய்யப்பட்ட IP முகவரிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

சுய-வளர்ச்சி அல்காரிதம்கள் (தரகர்கள்)

  • சில்லறை வர்த்தகர்கள் சுய பயன்பாட்டிற்காக அல்லது உடனடி குடும்ப உறுப்பினர்களுக்காக (சுய, வாழ்க்கைத் துணை, சார்ந்திருக்கும் குழந்தைகள் மற்றும் சார்ந்திருக்கும் பெற்றோர்கள் என வரையறுக்கப்படுகிறது) சுய-வளர்ச்சி அல்காரிதம்களைப் பயன்படுத்தலாம்.
  • NSE, முன்கூட்டியே எழுத்துப்பூர்வ அனுமதி அல்லது தரகருக்கு 2FA-சரிபார்க்கப்பட்ட கோரிக்கையுடன் இந்த குடும்ப உறுப்பினர்களிடையே ஒரு நிலையான IP-ஐப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
  • OPS வரம்பு என்பது ஒரு பரிவர்த்தனைக்கு, ஒரு கிளையண்டிற்கு வினாடிக்கு 10 ஆர்டர்கள் என வரையறுக்கப்படுகிறது.
  • இந்த வரம்பிற்கு கீழே உள்ள வர்த்தகச் செயல்பாட்டிற்குப் பங்குச்சந்தையிடம் தனிப்பட்ட உத்தி பதிவு தேவையில்லை, இருப்பினும் இத்தகைய அனைத்து API-அடிப்படையிலான செயல்பாடுகளும் அல்கோ ஆர்டர்களாகவே வகைப்படுத்தப்படுகின்றன மற்றும் தணிக்கை நோக்கங்களுக்காகத் தரகர்-நிலை கண்காணிப்பு மற்றும் குறிச்சொல்லுக்கு உட்பட்டவை.
  • ஒரு சில்லறை வர்த்தகரின் செயல்பாடு 10 OPS வரம்பைத் தாண்டியதும், அது தொடர்ந்து இயங்குவதற்கு முன், தரகர் மூலம் பங்குச்சந்தையிடம் உத்தி முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

பிளாக் பாக்ஸ் அல்காரிதம்களுக்கான விதிமுறைகள்

  • தகுதியான பிளாக் பாக்ஸ் உத்திகளை வழங்கும் வழங்குநர்கள், பொருந்தக்கூடிய ஆராய்ச்சி ஆய்வாளர் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகளுக்கு இணங்க வேண்டியிருக்கலாம்.
  • அல்காரிதத்தின் தர்க்கத்தில் ஏதேனும் பொருள்முறை மாற்றம் ஏற்பட்டால் அதற்குப் புதிய பங்குச்சந்தை அங்கீகாரம் தேவை.
  • அங்கீகரிக்கப்படாத அல்லது ஆவணப்படுத்தப்படாத மாற்றங்கள் மூலம் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இது வழிவகுக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கான வெளிப்படுத்தல்கள்

  • API-கள் மற்றும் வழங்கப்பட்ட மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்பு தொடர்பான விவரங்களை தரகர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
  • அபாயங்கள், லேட்டன்சி சிக்கல்கள் மற்றும் செயல்பாட்டு வரம்புகள் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
  • அல்காரிதமிக் வர்த்தகம் தொடர்பான அனைத்து செலவுகளும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.

செயல்படுத்தும் தேதிகள்

புதிய ஒழுங்குமுறை அமைப்பைச் செயல்படுத்த செபி ஒரு கட்டம் வாரியான காலவரிசையை அமைத்துள்ளது:

  • அக்டோபர் 31, 2025 (மைல்கல் 1): தரகர்கள் குறைந்தபட்சம் ஒரு சில்லறை அல்கோ தயாரிப்பு மற்றும் ஒரு உத்திக்காவது பங்குச்சந்தைகளில் பதிவு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • நவம்பர் 30, 2025 (மைல்கல் 2): ஜனவரி 2026 இணக்கச் சரிபார்ப்பிற்கு முன்னதாக, 2025-ன் பிற்பகுதியில் தரகர்கள் உத்திகளின் பதிவை படிப்படியாக முடிக்க எதிர்பார்க்கப்பட்டது.
  • ஜனவரி 3, 2026 (மைல்கல் 3): புதிய கட்டமைப்பு செயல்பாட்டைப் பயன்படுத்தி, குறைந்தபட்சம் ஒரு முழுமையான போலி வர்த்தக அமர்வில் (mock trading session) தரகர்கள் பங்கேற்க வேண்டும்.
  • ஜனவரி 5, 2026: மேற்கூறிய மைல்கற்களை எட்டத் தவறிய தரகர்கள், புதிய சில்லறை வாடிக்கையாளர்களை API-அடிப்படையிலான அல்கோ வர்த்தகத்திற்காகச் சேர்ப்பதில் இருந்து தடை செய்யப்பட்டனர்.
  • ஏப்ரல் 1, 2026: முழுமையான அல்கோ வர்த்தகக் கட்டமைப்பு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பங்குத் தரகர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது.

இந்த மாற்றங்கள் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டன?

ஒழுங்குபடுத்தப்படாத அல்காரிதமிக் வர்த்தகம் தொடர்பான வளர்ந்து வரும் கவலைகளின் காரணமாகவே புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

  • சில்லறை தானியக்கத்தின் எழுச்சி: சில்லறை பங்கேற்பாளர்களிடையே API-அடிப்படையிலான மற்றும் தானியங்கி வர்த்தக தீர்வுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
  • கண்காணிப்பின்மை: சில்லறை அல்காரிதம்களின் வரிசைப்படுத்தலைக் கண்காணிப்பதில் விழிப்புணர்வு இல்லை.
  • சந்தை கையாளுதல் அபாயங்கள்: தவறாக வடிவமைக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்படாத அல்காரிதம்கள் அசாதாரண வர்த்தகச் செயல்பாட்டை உருவாக்கலாம்.
  • நேர்மை மற்றும் சம வாய்ப்பு: நிறுவன பங்கேற்பாளர்கள் ஏற்கனவே கடுமையான விதிமுறைகளுடன் செயல்பட்டு வருகின்றனர்.
  • முதலீட்டாளர் பாதுகாப்பு: சில்லறை வர்த்தகர்கள் பெரும்பாலும் அல்காரிதமிக் ஆபத்து குறித்து அறியப்படவில்லை.
  • ஒழுங்குமுறை முன்னுதாரணம்: ஜூலை 2025-ல், SEBI, ஒரு உலகளாவிய உரிமையாளர் வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட், தவறான அல்காரிதமிக் வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, அதன் சந்தை அணுகலைத் தற்காலிகமாக கட்டுப்படுத்தியது மற்றும் முறையற்ற ஆதாயமாக சுமார் ₹4,843 கோடியை முடக்கியது, பின்னர் அந்த மாத இறுதியில் கட்டுப்பாடுகளை ஓரளவு நீக்கியது.

மாற்றங்களின் தாக்கம்

புதிய விதிகள் கட்டமைப்பு சீர்திருத்தங்களையும் அதிகரித்த இணக்கத் தரங்களையும் வழங்குகின்றன.

  1. சில்லறை வர்த்தகர்களுக்கு:
    • அல்காரிதமிக் வர்த்தகத்தில் அதிகரித்த பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை.
    • வெளிப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறை கண்காணிப்பு மூலம் மேம்படுத்தப்பட்ட முதலீட்டாளர் விழிப்புணர்வு.
  2. தரகர்களுக்கு:
    • அங்கீகாரங்கள், கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான அதிகரித்த பொறுப்பு.
    • அதிகரித்த இணக்கம், தணிக்கை மற்றும் இடர் மேலாண்மை தேவைகள்.
  3. அல்கோ தள வழங்குநர்களுக்கு:
    • பொருந்தக்கூடிய பதிவு, உள்வாங்கல் மற்றும் பங்குச்சந்தை இணக்கத் தேவைகள்.
    • இணக்கமான மற்றும் தரகர்-ஆதரவு சூழலில் செயல்படுவதற்கான தேவை.
  4. சந்தை சுற்றுச்சூழல் அமைப்புக்கு:
    • குறிச்சொல் (tagging), கண்காணிப்பு மற்றும் தணிக்கைகள் மூலம் அதிகரித்த வெளிப்படைத்தன்மை.
    • குறைக்கப்பட்ட கணினி அழுத்தம் மற்றும் அசாதாரண வர்த்தக நடத்தை.

SEBI-ன் அல்கோ வர்த்தக விதிகள் வெவ்வேறு பங்குதாரர்களை எவ்வாறு பாதிக்கின்றன?

அல்கோ வழங்குநர்கள்: அல்காரிதமிக் உத்திகளை வழங்குவதற்கு முன், பொருந்தக்கூடிய பங்குச்சந்தை பதிவு மற்றும் உள்வாங்கல் தேவைகளைப் பின்பற்ற வேண்டும்.

தகுதியான பிளாக் பாக்ஸ் உத்திகளை வழங்கும் வழங்குநர்கள், பொருந்தக்கூடிய ஆராய்ச்சி ஆய்வாளர் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகளுக்கு இணங்க வேண்டியிருக்கலாம்.

உத்தி மாற்றங்களுக்குப் புதிய அங்கீகாரம் தேவை, இது இணக்க மற்றும் ஆவணப்படுத்தல் தேவைகளை அதிகரிக்கும்.

அனைத்து அல்காரிதமிக் வர்த்தகச் செயல்பாடுகளையும் அங்கீகரிக்க, கண்காணிக்க மற்றும் தணிக்கை செய்ய வேண்டும்.

செபி அல்கோ வர்த்தக விதிகள், இடர் கட்டுப்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் வெளிப்படுத்தல்களின் இணக்கத்திற்குப் பொறுப்பாவார்கள்.

இதையும் வாசிக்கவும்: ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸில் அல்கோ வர்த்தகத்தின் முக்கியத்துவம்

முடிவுரை:

செபி அல்கோ வர்த்தகத்திற்கான புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பு, இந்தியாவில் தானியங்கி வர்த்தகத்திற்கு மிகவும் பொறுப்பான மற்றும் வெளிப்படையான அணுகுமுறையை நோக்கிய ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. கட்டமைக்கப்பட்ட அங்கீகார செயல்முறைகள், வலுவான தரகர் கண்காணிப்பு, கண்காணிப்புத் தேவைகள் மற்றும் அல்காரிதம் வழங்குநர்களுக்கான தெளிவான பொறுப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்த கட்டமைப்பு செயல்பாட்டு மற்றும் சந்தை அபாயங்களைக் குறைக்க முயல்கிறது, அதே நேரத்தில் புதுமைக்கான அணுகலைப் பாதுகாக்கிறது. சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு, இந்தத் தேவைகளைப் புரிந்துகொள்வது பெருகிய முறையில் முக்கியமானது, ஏனெனில் அல்காரிதமிக் வர்த்தகம் இனி ஒரு தொழில்நுட்ப அம்சமாக மட்டும் பார்க்கப்படாமல், வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை மற்றும் இடர் மேலாண்மை தரநிலைகளுக்குள் செயல்பட வேண்டிய ஒரு செயலாகக் கருதப்படுகிறது.

முதலீடு செய்ய விரும்புகிறீர்களா? ஏஞ்சல் ஒன் (Angel One) உடன் டிமேட் அக்கவுண்ட் (Demat Account) திறக்கவும் மற்றும் தடையின்றி வர்த்தகம் செய்யத் தொடங்குங்கள்.

FAQs

சில்லறை வர்த்தகர்கள் இந்தியாவில் அல்கோ வர்த்தகத்தை இன்னும் பயன்படுத்த முடியுமா?

ஆம், சில்லறை வர்த்தகர்கள் தரகர்-அங்கீகரிக்கப்பட்ட தளங்களுடன் அல்காரிதமிக் வர்த்தகத்தைப் பயன்படுத்துவது இன்னும் சாத்தியமாகும். தானியங்கி வர்த்தகச் செயல்பாடு, பொருந்தக்கூடிய தரகர், பங்குச்சந்தை, கண்காணிப்பு மற்றும் இடர் கட்டுப்பாட்டுத் தேவைகளுக்குள் இயங்க வேண்டும்.

தரகர்கள் செபி அல்கோ வர்த்தக விதிகளை எவ்வாறு கடைபிடிக்கிறார்கள்?

தரகர்கள் கண்காணிப்பு அமைப்புகள், வர்த்தகத்திற்கு முந்தைய இடர் கட்டுப்பாடுகள் மற்றும் அல்காரிதமிக் செயல்பாட்டிற்கான தணிக்கை பதிவுகளைப் பராமரிப்பதன் மூலம் இணங்குகிறார்கள். அவர்கள் பங்குச்சந்தையில் பதிவுசெய்யப்பட்ட அல்காரிதம்களை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும், IP வொயிட்லிஸ்டிங் மற்றும் கில் ஸ்விட்ச்களைச் செயல்படுத்த வேண்டும், ஐந்து வருட API ஆர்டர் தணிக்கை தடயத்தைப் பராமரிக்க வேண்டும், மேலும் உள்வாங்கல் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஒரு அல்கோ வழங்குநர் பதிவு செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

பதிவுசெய்யப்படாத அல்கோ வழங்குநர்கள் தரகர் API-கள் மூலம் அல்காரிதமிக் உத்திகளை வழங்க முடியாது. பங்குச்சந்தை எம்பனல்மென்ட் (empanelment) அல்லது தேவையான பதிவுகளைச் செய்யத் தவறினால் அபராதம், விளக்கம் கோரும் நோட்டீஸ்கள் அல்லது எம்பனல்மென்ட் நீக்கம் ஏற்படலாம்.

செபி-ன் புதிய விதிகளுக்குப் பிறகு இந்தியாவில் அல்கோ வர்த்தகம் லாபகரமானதா?

லாபம் உத்தி வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டுத் தரத்தைப் பொறுத்தது. செபி அல்கோ வர்த்தக விதிகள் வருவாயைக் கட்டுப்படுத்தாது, ஆனால் அல்காரிதம்கள் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான சூழலில் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதை உறுதி செய்கின்றன.

சில்லறை வர்த்தகர்கள் தங்கள் அல்கோக்களைப் பதிவு செய்ய வேண்டுமா?

வினாடிக்கு 10 தானியங்கி ஆர்டர்களுக்குக் குறைவாக (பரிவர்த்தனைக்கு, கிளையண்டிற்கு) இடும் சில்லறை வர்த்தகர்கள் தங்கள் உத்தியைத் தனித்தனியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த வரம்பைத் தாண்டினால், தரகர் மூலம் உத்தி பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்து API-அடிப்படையிலான செயல்பாடுகளும் தரகர் கண்காணிப்பு மற்றும் குறிச்சொல் தேவைகளுக்கு உட்பட்டவை.

எனது அல்கோ வர்த்தக உத்தியை மற்றவர்களுக்கு விற்க முடியுமா?

அல்காரிதமிக் வர்த்தக உத்தியை விற்பனை செய்வது பொதுவாகப் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை மற்றும் பங்குச்சந்தை தேவைகளுக்கு இணங்க வேண்டும். மற்றவர்களுக்கு வழங்கப்படும் உத்திகள் அவற்றின் கட்டமைப்பைப் பொறுத்து கூடுதல் பதிவு, வெளிப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு கடமைகளை ஈர்க்கலாம்.

அல்கோ வர்த்தகத்தின் நன்மைகள் என்ன?

அல்கோ வர்த்தகம் முன் வரையறுக்கப்பட்ட நிபந்தன்களின் அடிப்படையில் ஆர்டர்களைத் தானாகவே செயல்படுத்த உதவுகிறது, இது செயல்பாட்டு வேகத்தை மேம்படுத்தவும், கைமுறை பிழைகளைக் குறைக்கவும் மற்றும் வர்த்தகத்தின் போது உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்து நிலைத்தன்மையை பராமரிக்கவும் உதவுகிறது.

இந்தியாவில் அல்கோ வர்த்தகத்தை நான் எவ்வாறு தொடங்குவது?

அல்கோ வர்த்தகத்தைத் தொடங்க, முதலீட்டாளர்களுக்கு பொதுவாகத் தரகர்-ஆதரவு தானியங்கி கருவிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட API-அடிப்படையிலான அமைப்புகளுக்கான அணுகல் தேவைப்படுகிறது, மேலும் வரிசைப்படுத்துவதற்கு முன் பொருந்தக்கூடிய இணக்கம், இடர் கட்டுப்பாடுகள் மற்றும் செயல்பாட்டுத் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் அல்கோ வர்த்தகம் சட்டப்பூர்வமானதா?

ஆம், பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் நடத்தப்படும்போது இந்தியாவில் அல்கோ வர்த்தகம் சட்டப்பூர்வமானது. சந்தைப் பங்கேற்பாளர்கள் தானியங்கி உத்திகள் அனுமதிக்கப்பட்ட சேனல்கள் வழியாக இயங்குவதையும், பொருந்தக்கூடிய இடங்களில் அங்கீகாரம் மற்றும் கண்காணிப்புத் தேவைகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers

+91

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers
+91