Skip to main content

பத்திரங்களின் வரிவிதிப்பு: பல்வேறு வகையான பாண்டுகளுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது?

6 min readUpdated on 4th Aug, 2026by Angel One
இந்தியாவில் பாண்டுமீதான வரி விதிப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்: வட்டி வருமானம் முதல் கேப்பிட்டல் கெயின்ஸ் வரை பல்வேறு வகையான பாண்டு வகைகள் மற்றும் அவற்றின் வரி விதிப்புகள் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம்.
Share

தனிநபர் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் இருவருக்குமே பாண்டுகள் நீண்ட காலமாக ஒரு விருப்பமான நிதிச் சாதனமாக இருந்து வருகிறது. இந்த பிக்ஸ்டு வருமானம் சாதனங்கள் ஸ்திரத்தன்மையை வழங்குவதோடு, மற்ற முதலீட்டு விருப்பங்களுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைந்தவையாகவும் இருக்கின்றன.

இருப்பினும், சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து தப்பிக்க Bonds-களில் முதலீடு செய்து நிம்மதி அடையும் முதலீட்டாளர்கள், அவற்றின் வரி விதிப்பு முறையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையில், இந்தியாவில் பாண்டுகள் மீதான வரி விதிப்பு மற்றும் அவற்றில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய அம்சங்கள்

  • பாண்டு மூலம் ஈட்டப்படும் வட்டிக்கு, முதலீட்டாளரின் வருமான வரி படிநிலையின் படி வரி விதிக்கப்படுகிறது; அதே நேரத்தில் கேப்பிட்டல் கெயின்ஸ் வரி என்பது பாண்டு வகை மற்றும் அது கைவசம் வைக்கப்பட்டிருக்கும் கால அளவைப் பொறுத்தது.
  • பட்டியலிடப்பட்ட பாண்டுகள் மற்றும் பட்டியலிடப்படாத பாண்டுகள் ஆகிய இரண்டும், திருத்தப்பட்ட நீண்ட கால மற்றும் குறுகிய கால கேப்பிடல் கெயின்ஸ் விதிகளின் கீழ் வருகின்றன.
  • வரி விலக்கு பத்திரங்களில் வட்டி வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது, ஆனால் கேப்பிட்டல் கெயின்ஸ்-க்கு வரி விதிக்கப்படலாம்.
  • TDS, வரி விலக்குகள் மற்றும் பாண்டு வகைகளைப் புரிந்துகொள்வது, வரிக்குப் பிந்தைய வருவாயை மேம்படுத்த உதவுகிறது.

பாண்டுகள் என்றால் என்ன?

ஒரு பாண்டு என்பது ஒரு நிறுவனமோ அல்லது அரசாங்கமோ முதலீட்டாளராகிய உங்களிடமிருந்து பணத்தைக் கடனாகப் பெறும் ஒரு கடன் கருவி ஆகும். இதற்கு பதிலாக, அவர்கள் அசல் தொகைக்கு வட்டி வழங்குகிறார்கள்.

பாண்டு வாங்கும் போதே அதன் முதிர்வுத் தேதி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். நீங்கள் பாண்டுகள் மூலம் வட்டி மற்றும் Capital Gains ஆகிய இரு வழிகளில் வருமானம் ஈட்டலாம். வட்டி என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட அசல் தொகையின் சதவீதத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படும் தொகையாகும். கேப்பிட்டல் கெயின்ஸ் என்பது முதிர்வுக்குப் பின் பாண்டுகளை விற்பனை செய்வதன் மூலம் ஈட்டப்படும் லாபமாகும்.

இந்தியாவில் பாண்டுகள் மீதான வரி விதிப்பு

இந்தியாவில் பாண்டுபாண்டுகளுக்கு இரண்டு முக்கிய காரணிகளின் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது, அதாவது பாண்டின் வகை மற்றும் அதன்வைத்திருக்கும் காலம். பாண்டு மீதான வட்டி மற்றும் கேப்பிட்டல் கெயின்ஸ் ஆகிய இரண்டிற்கும் பின்வருமாறு வரி விதிக்கப்படுகிறது:

  • வட்டி: பாண்டு வட்டி உங்கள் ஒட்டுமொத்த வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அதற்குரிய வரி விகிதத்தில் வரி விதிக்கப்படும். நீங்கள் உங்கள் பான் கார்டைச் சமர்ப்பித்தால், பெரும்பாலான Bonds-களுக்கு 10% TDS பிடிக்கப்படும். TDS பிடித்தத்தைத் தவிர்க்க Form 15G/15H சமர்ப்பிக்காத பட்சத்தில் இது பொருந்தும்.
  • கேப்பிட்டல் கெயின்ஸ்: பாண்டுகள் மீதான கேப்பிட்டல் கெயின்ஸ்-க்கான வரி விதிப்பு, அந்த பாண்டின் வகையைப் பொறுத்தது.
  • பட்டியலிடப்படாத பத்திரங்கள்: பட்டியலிடப்படாத பத்திரங்கள் மூலம் கிடைக்கும் லாபம் STCG ஆகக் கருதப்பட்டு, வைத்திருக்கும் காலம் எவ்வளவாக இருந்தாலும் உங்கள் வரி படிநிலை விகிதத்தின் படி வரி விதிக்கப்படும். இதற்கு பணவீக்க சரிசெய்தல் பலன்கள் கிடைக்காது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு LTCG என்ற முந்தைய சட்டம் இப்போது பெரும்பாலான பட்டியலிடப்படாத பத்திரங்களுக்கு பொருந்தாது.
  • பட்டியலிடப்பட்ட பத்திரங்கள்: நீண்டகால மூலதன ஆதாயம் (LTCG) வரி நிலையான 12.5% என்ற விகிதத்தில் விதிக்கப்படுகிறது (Indexation கிடையாது). ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவான காலம் கைவசம் வைத்திருந்தால், அந்த லாபம் STCG-க்கு உட்பட்டு உங்கள் வருமான வரி படிநிலையின் படி வரி விதிக்கப்படும்.

இந்தியாவில் உள்ள பாண்டுகள் வகைகள் மற்றும் அவற்றின் வரி விதிப்பு

1. வரி விதிக்கப்படும் சாதாரண பத்திரங்கள்

பெயரே குறிப்பிடுவது போல, இவை வரிக்குரிய பாண்டுகள் ஆகும். இந்த வரி விதிக்கப்படும் சாதாரண பத்திரங்கள் மூலம் ஈட்டப்படும் வட்டிக்கு முதலீட்டாளரின் வருமான வரி படிநிலையின் படி வரி விதிக்கப்படுகிறது மற்றும் இந்த பாண்டுகளுக்கு விதிக்கப்படும் கேப்பிட்டல் கெயின்ஸ் வரி அதன் வைத்திருக்கும் காலத்தை பொறுத்தது.

உதாரணமாக, நீங்கள் 10% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகள் முதிர்வுக் காலம் கொண்ட ஒரு வரி விதிக்கப்படும் பட்டியலிடப்பட்ட பத்திரத்தில் ₹5,00,000 முதலீடு செய்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த சூழ்நிலையில், நீங்கள் ஆண்டுக்கு ₹50,000 வட்டியாகப் பெறுகிறீர்கள், இது உங்கள் மொத்த வருமானத்துடன் சேர்க்கப்பட்டு வருமான வரி படிநிலையின் படி வரி விதிக்கப்படும்.

கேப்பிட்டல் கெயின்ஸ் விஷயத்தில், பட்டியலிடப்பட்ட பாண்டுகளுக்கான வரி விதிப்பு வைத்திருக்கும் காலத்தை பொறுத்து மாறுபடும். பாண்டின் முதிர்வு மதிப்பு ₹6,00,000 ஆக இருந்தால், அதன் கேப்பிட்டல் கெயின்ஸ் ₹1,00,000 ஆகும். இது ஒரு வருடத்திற்கும் மேலாக கைவசம் வைக்கப்பட்டிருந்த ஒரு பட்டியலிடப்பட்ட பாண்டு என்பதால், இந்த ₹1,00,000 லாபத்திற்கு பணவீக்கம் சரிசெய்தல் பலன் இல்லாமல் 10% வரி விதிக்கப்படுகிறது.

2. வரி விலக்கு பத்திரங்கள்

பொதுத்துறை நிறுவனங்களும் (PSUs) அரசாங்கமும் வரி விலக்கு பத்திரங்களை வெளியிடுகின்றன. இந்த பாண்டுகள் மூலம் திரட்டப்படும் தொகை ரயில்வே, நெடுஞ்சாலைகள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்ற திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பாண்டுகள் மூலம் ஈட்டப்படும் வட்டிக்கு வரி கிடையாது. இருப்பினும், இந்த பாண்டுககளிலிருந்து கிடைக்கும் கேப்பிட்டல் கெயின்ஸ்-க்கு, அதன் வைத்திருக்கும் காலத்தை பொறுத்து LTCG அல்லது STCG ஆக வரி விதிக்கப்படும்.

3. வரி சேமிப்பு பத்திரங்கள்

பெயரே குறிப்பிடுவது போல, இந்த பாண்டுகள் முதலீட்டாளர்கள் வரி சேமிக்க உதவுகின்றன. வரி சேமிப்பு பத்திரங்கள் இந்திய அரசால் வெளியிடப்படுகின்றன. இந்த பாண்டுகளுக்கான வட்டி விகிதம் இந்திய அரசால் தீர்மானிக்கப்படுகிறது மற்றும் இவை 5 ஆண்டுகள் குறைந்தப்பட்ச லாக்-இன்-பீரியட் உடன் வருகின்றன.

வரி சேமிப்பு பத்திரங்களின் வட்டி வருமானத்திற்கு முதலீட்டாளரின் வருமான வரி படிநிலையின் படி வரி விதிக்கப்படும். இந்த பாண்டுகளுக்கு லாக்-இன்-பீரியட் இருப்பதால், இதன் கேப்பிட்டல் கெயின்ஸ் பொதுவாக LTCG ஆகக் கருதப்பட்டு, வைத்திருக்கும காலத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்படும்.

Section 80CCF-ன் கீழ், வரி சேமிப்பு பத்திரங்களில் நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு ₹20,000 வரை வரி விலக்கு கோரலாம். இந்த வரி சேமிப்பு பத்திரங்கள் நீண்ட கால மூலதனச் சொத்துக்களைக் கொண்ட நபர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Section 54EC-ன் படி, உங்களிடம் கட்டிடங்கள், நிலம் அல்லது இரண்டுமே நீண்ட கால சொத்துக்களாக இருந்தால், பின்வரும் நிபந்தனைகளின் கீழ் அந்த சொத்துக்களை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் கேப்பிட்டல் கெயின்ஸ் வரியைச் சேமிக்கலாம்:

  • நீண்ட கால சொத்துக்களிலிருந்து கிடைக்கும் கேப்பிட்டல் கெயின்ஸ், சொத்து மாற்றப்பட்ட தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் வரி சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
  • இந்த லாபங்கள் National Highway Authority of India (NHAI), Rural Electrification Corporation (REC), Indian Railway Finance Corporation (IRFC) அல்லது Power Finance Corporation Limited (PFC) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட பாண்டுகளில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
  • அதிகப்பட்ச முதலீட்டுத் தொகை ₹50 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

4. பூஜ்ய-கூப்பன்பத்திரங்கள்

ஒரு பாண்டு மூலம் ஈட்டப்படும் வட்டி 'கூப்பன்' என்று அழைக்கப்படுகிறது. பூஜ்ய-கூப்பன் பத்திரங்கள்

என்பவை வட்டி வழங்காத பாண்டுகள் ஆகும். ஆனால் இந்த பாண்டுகள் தள்ளுபடி விலையில் வெளியிடப்படுகின்றன. இருப்பினும், முதிர்வின் போது, முதலீட்டாளருக்கு பாண்டின் முழு பேஸ் மதிப்பு தொகையும் கிடைக்கும்.

உதாரணமாக, நீங்கள் ₹25,000 பேஸ் மதிப்பு கொண்ட ஒரு பூஜ்ய-கூப்பன் பத்திரத்தில் முதலீடு செய்துள்ளீர்கள். அதன் வெளியீட்டு விலை ₹10,000 ஆகும். இதன் பொருள் உங்களுக்கு ₹15,000 தள்ளுபடி கிடைத்துள்ளது.

பாண்டு முதிர்ச்சியடையும் போது, நீங்கள் முழுத் தொகையான ₹25,000-ஐப் பெறுவீர்கள். இதில் வட்டி எதுவும் இல்லாததால், அதற்கான வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை. இந்த பாண்டுகளில் நீங்கள் பெறும் கேப்பிட்டல் கெயின்ஸ்-க்கு அதன் வைத்திருக்கும் காலத்தின் படி வரி விதிக்கப்படும். கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (REC), NABARD போன்றவை இந்த வகையான பாண்டுகளை வெளியிடுகின்றன.

5. சவரன்கோல்டு பாண்டு (SGB)

அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற இந்த பாண்டுகள், முதலீட்டாளர்கள் பிசிக்கல் தங்கம் வாங்காமலேயே தங்கத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கின்றன. SGB-க்கள் ரிவர்ஸ் பாங்க் ஆப் இந்தியா (RBI)-ஆல் வெளியிடப்படுகின்றன மற்றும் இவை தங்கத்தின் கிராம்களில் மதிப்பிடப்படுகின்றன.

SGB-க்கள் கேப்பிட்டல் கெயின்ஸ்-ஐ மட்டுமல்லாமல், நிறுத்தாமல், ஆரம்ப முதலீட்டிற்கு ஆண்டுக்கு 2.5% நிலையான வட்டியையும் வழங்குகின்றன, இது அரையாண்டிற்கு ஒருமுறை செலுத்தப்படுகிறது. இந்த பாண்டுகள் தங்கத்தின் விலைக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை.

இந்த பாண்டுகள் 8 ஆண்டுகள் முதிர்வுக் காலத்தைக் கொண்டுள்ளன. இருப்பினும், நீங்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, வட்டி செலுத்தப்படும் தேதிகளில் மட்டுமே இந்த பாண்டிலிருந்து வெளியேறலாம். வரி விதிப்பைப் பொறுத்தவரை, பின்வரும் விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்:

  • இந்த கோல்டு பாண்டுகள் மூலம் ஈட்டப்படும் வட்டிக்கு உங்கள் வருமான வரி படிநிலையின் படி வரி விதிக்கப்படும்.
  • இந்த பாண்டுகள் மூலம் ஈட்டப்படும் கேப்பிட்டல் கெயின்ஸ் அதன் வைத்திருக்கும் காலத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்படும். முதிர்வு காலம் வரை வைத்திருந்தால், இந்த பாண்டுகளில் இருந்து கிடைக்கும் கேப்பிட்டல் கெயின்ஸ்-க்கு வரி விலக்கு அளிக்கப்படும். இருப்பினும், வாங்கிய தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகும் 8 ஆண்டுகளுக்கு முன்னரும் விற்கப்பட்டால், பணவீக்கச் சரிசெய்தல் பலனுடன் 20% விகிதத்தில் LTCG வரி விதிக்கப்படும்.

இந்தியாவில் பாண்டுகள் மீதான வரி விதிப்பைத் தெளிவாகப் புரிந்துகொள்ள கீழே உள்ள அட்டவணை உதவும்:

பாண்டுகளின் வகை  வட்டி மீதான வரி விதிப்பு  Capital Gains மீதான வரி விதிப்பு 
வரி விதிக்கப்படும் சாதாரண பத்திரங்கள்   வருமான வரி படிநிலையின் படி வரி விதிக்கப்படும் 

பட்டியலிடப்பட்ட பத்திரங்கள்: LTCG-க்கு Indexation பலன் இன்றி 10% வரி விதிக்கப்படும். STCG-க்கு வருமான வரி படிநிலையின் படி வரி விதிக்கப்படும்.

பட்டியலிடப்படாத பத்திரங்கள்: LTCG-க்கு பலன் இன்றி 20% வரி விதிக்கப்படும். STCG-க்கு பணவீக்கச் சரிசெய்தலின் படி வரி விதிக்கப்படும்.

வரி விலக்கு பத்திரங்கள்  வட்டி வருமானத்திற்கு வரி இல்லை  வைத்திருக்கும் காலத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்படும். 
வரி சேமிப்பு பத்திரங்கள்   வருமான வரி படிநிலையின் படி வரி விதிக்கப்படும்  வைத்திருக்கும் காலத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்படும். Section 80CCF-ன் கீழ் ₹20,000 வரை முதலீட்டு வரி விலக்கு கோரலாம். 
பூஜ்ய-கூப்பன் பத்திரங்கள்   வட்டி இல்லை, வரி இல்லை  வைத்திருக்கும் காலத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்படும். 
சவரன் கோல்டு பாண்டு (SGB)  வருமான வரி படிநிலையின் படி வரி விதிக்கப்படும்  முதிர்வு காலம் வரை வைத்திருந்தால் வரி விலக்கு அளிக்கப்படும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனால் 8 ஆண்டுகளுக்கு முன்பு விற்றால், Indexation பலனுடன் 20% LTCG வரி விதிக்கப்படும்.

பாண்டுகள் மீதான TDS

இந்தியாவில் பாண்டுகள் வரி விதிப்பின் கீழ், பாண்டுகள் மூலம் ஈட்டப்படும் வட்டி வருமானம், வருமான வரிச் சட்டம் 1961-ன் Section 193-ன் படி மூலத்தில் வரி கழித்தல் (TDS)-க்கு உட்பட்டது. வட்டித் தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டினால், பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பாண்டுகள் இரண்டிற்குமே வட்டிச் செலுத்தலின் போது பொதுவாக 10% என்ற விகிதத்தில் TDS பிடிக்கப்படுகிறது.

ஒரு முதலீட்டாளரின் வருமானம் வரிக்குரிய வரம்பை விடக் குறைவாக இருந்தால், அவர்கள் TDS பிடிக்கப்படுவதைத் தவிர்க்க Form 15G/15H சமர்ப்பிக்கலாம். பிடிக்கப்பட்ட இந்தத் தொகை முதலீட்டாளரின் Form 26AS-ல் பிரதிபலிக்கும் மற்றும் வருமான வரித் தாக்கல் செய்யும் போது இறுதி வரிப் பொறுப்புக்கு எதிராக இதைச் சரிசெய்து கொள்ளலாம்.

ஒரு முதலீட்டாளரின் மொத்த வருமானம் வரிக்குரிய வரம்பிற்கு உட்பட்டதாக இருந்தால், அவர்கள் TDS பிடித்தத்தைத் தவிர்க்க உரியப் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம். சவரன் கோல்டு பாண்டுகள் வட்டிக்கு TDS கிடையாது.

முடிவுரை

பாண்டுகள் நிலையான வருவாயை வழங்குகின்றன மற்றும் இவை ஆபத்து குறைந்த முதலீடுகளாகும். இருப்பினும், Bonds-ல் உள்ள வரிகளைக் கவனிப்பது முக்கியம், ஏனெனில் இது உங்களது இறுதி வருவாயைப் பாதிக்கலாம். ஏதேனும் முடிவு எடுப்பதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரிடம் பேசுங்கள்.

பங்குகள், பரஸ்பர நிதிகள் போன்ற பிற முதலீட்டு விருப்பங்களை ஆராய Angel One செயலியைப் பயன்படுத்தவும். இன்றே Angel One-ல் இலவசமாக ஒரு டிமாட் கணக்கைத் தொடங்குங்கள்.

FAQs

வரி விலக்கு பத்திரங்கள் முற்றிலும் வரி இல்லாதவையா?

இல்லை, வரி விலக்கு பத்திரங்கள்களில் வட்டி வருமானத்திற்கு வரி இல்லை, ஆனால் அவற்றை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் கேப்பிட்டல் கெயின்ஸ், அதன் வைத்திருக்கும் காலத்தின் அடிப்படையில் வரிக்கு உட்பட்டதாக இருக்கலாம்.

அரசு Bonds-களில் செய்யக்கூடிய அதிகப்பட்ச முதலீடு ஏதேனும் உள்ளதா?

பாண்டுகளில் குறைந்தப்பட்ச முதலீடு ₹1,000 ஆகும் மற்றும் அதிகப்பட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. இருப்பினும், உங்கள் முதலீட்டு நோக்கத்தைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்யுங்கள்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு நான் SGB-யிலிருந்து வெளியேறினால் என்ன நடக்கும்?

நீங்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆனால் 8 ஆண்டுகள் முழு முதிர்வுக்கு முன் SGB-யிலிருந்து வெளியேறினால், விற்பனையின் மூலம் கிடைக்கும் நீண்டகால மூலதன ஆதாயம் (LTCG)-க்கு பணவீக்கச் சரிசெய்தல் பலனுடன் 20% வரி விதிக்கப்படலாம்.

வரி விலக்கு பத்திரங்கள் மீதான கேப்பிட்டல் கெயின்ஸ் வரி என்ன?

வரி விலக்கு பத்திரங்கள் மீதான கேப்பிட்டால் கெயின்ஸ் அதற்குரிய வைத்திருக்கும் காலத்தின் படி வரி விதிக்கப்படும். இதன் LTCG-க்கு பணவீக்கச் சரிசெய்தல் பலன் இன்றி 10% வரி விதிக்கப்படும். STCG-க்கு வருமான வரி படிநிலையின் படி வரி விதிக்கப்படும்.

பாண்டுகள் முதலீட்டில் முதலீட்டாளர்கள் தங்கள் வரிச் சுமையை எவ்வாறு குறைக்கலாம்?

முதலீட்டாளர்கள் தற்போதைய நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் தகுதியைப் பெறுவதற்கு பாண்டுகளைப் போதுமான காலம் கைவசம் வைத்திருப்பதன் மூலம் வரிகளைக் குறைக்கலாம். வரி விலக்கு அல்லது வரி சேமிப்பு பத்திரங்களை தேர்ந்தெடுப்பதும் வரிக்குப் பிந்தைய வருவாயை மேம்படுத்தும்.

பாண்டுகளில் முதலீடு செய்யும் போது முதலீட்டு பல்வகைப்படுத்தல் எவ்வாறு உதவுகிறது?

முதலீட்டு பல்வகைப்படுத்தல் என்பது பல்வேறு வகையான பாண்டுகள் மற்றும் வெளியீட்டாளர்களிடையே அபாயத்தைப் பரவலாக்குகிறது. இது முதலீட்டாளர்கள் வரிக்குரிய மற்றும் வரி இல்லாத வருமானத்தை மிகவும் திறம்படச் சமநிலைப்படுத்த அனுமதிக்கிறது.

பாண்டுகளில் வருவாயை எவ்வாறு அதிகப்படுத்துவது?

பொருத்தமான முதிர்வு காலம், கிரெடிட் குவாலிட்டி மற்றும் வரி விதிப்பு முறை ஆகியவற்றைக் கொண்ட பாண்டுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வருவாயை அதிகப்படுத்தலாம். பாண்டுகளை கைவசம் வைத்திருப்பதும், வரி விதிப்பைப் புரிந்து கொள்வதும் ஒட்டுமொத்த லாபத்தை மேம்படுத்த உதவுகிறது.

Open Free Demat Account!

Join our 3.5 Cr+ happy customers

+91

Open Free Demat Account!

Join our 3.5 Cr+ happy customers
+91