Skip to main content

இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி இடையே உள்ள வேறுபாடு

6 min readUpdated on 13th Aug, 2026by Team Angel One
இகேஒய்சி என்பது ஆதார் அடிப்படையிலான ஓடிபி அல்லது பயோமெட்ரிக் சரிபார்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஒரு டிஜிட்டல் முறையாகும். அதேசமயம் சிகேஒய்சி என்பது வாடிக்கையாளரின் ஆவணங்களை ஒருமுறை சரிபார்த்து, அதனை ஒரு மையப் பத
Share

வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் பின்பற்றப்படும் கட்டாய முறை கேஒய்சி ஆகும். இன்றைய காலத்தில் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்ததால், இந்தக் கோரிக்கையைப் பூர்த்தி செய்ய இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி ஆகியவை இரண்டு விருப்பங்களாக உருவெடுத்துள்ளன. இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி இடையே உள்ள வேறுபாடுகளையும், ஒவ்வொரு அணுகுமுறையும் பல்வேறு நிதிச் சேவைகளுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்வோம். இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி இடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது, வாடிக்கையாளர்கள் தங்கள் ஆரம்பக்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் அணுகுமுறையைத் தேர்வு செய்ய உதவுகிறது.

முக்கிய குறிப்புகள்

  • இகேஒய்சி ஆனது ஓடிபி அல்லது பயோமெட்ரிக்ஸ் பயன்படுத்தி டிஜிட்டல் ஆதார் சரிபார்ப்பை செயல்படுத்துகிறது.
  • பல நிறுவனங்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு வாடிக்கையாளர் பதிவை சிகேஒய்சி வைத்திருக்கிறது.
  • சரிபார்ப்பு முறைகள், வேகம் மற்றும் நீண்ட கால பயன்பாடு ஆகியவை சிகேஒய்சி மற்றும் இகேஒய்சி இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் ஆகும்.
  • இரண்டு அணுகுமுறைகளும் வங்கி, பங்குச் சந்தைகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் கணக்கைத் தொடங்கவும், சேவைகளைப் பெறவும் பாதுகாப்பான மற்றும் விரைவான வழிகளை வழங்குகின்றன.

இகேஒய்சி என்றால் என்ன?

எலக்ட்ரானிக் நோ யுவர் கஸ்டமர் (இகேஒய்சி) என்பது ஒரு நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் தகவலைப் பயன்படுத்தும் டிஜிட்டல் சரிபார்ப்பு செயல்முறையாகும். இகேஒய்சி நடைமுறையானது, ஒரு நுகர்வோர் ஒப்புதல் அளித்து, ஒரு வலைத்தளத்தில் தங்கள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்கும்போது தொடங்குகிறது.

ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படுகிறது, அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலகங்களில் கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் எடுக்கப்படுகின்றன. சரிபார்ப்பு வெற்றியடைந்த பிறகு, பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் புகைப்படம் போன்ற அடிப்படை கேஒய்சி தகவல்கள் நிறுவனத்திற்குப் பாதுகாப்பாக அனுப்பப்பட்டு, உடனடியாக சரிபார்ப்பை நிறைவு செய்கின்றன.

இகேஒய்சி ஆனது வங்கிகள், பங்குத் தரகர்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி-கள்) மற்றும் ஃபின்டெக் ஆப்களில் கணக்குகளை விரைவாகவும், காகிதப் பயன்பாடு இன்றியும் தொடங்க இது பெரிதும் உதவுகிறது. மேலும் இது வங்கி, முதலீடு, டிமேட் மற்றும் டிஜிட்டல் வாலெட்ஆகியவற்றில் கணக்குகளை அமைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இகேஒய்சி இன் அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

  • உடனடியாக டிஜிட்டல் சரிபார்ப்பு: வாடிக்கையாளர்கள் பயோமெட்ரிக் அல்லது ஆதார் ஓடிபி-ஐப் பயன்படுத்தி இகேஒய்சி மூலம் சில நிமிடங்களிலேயே அடையாளத்தைச் சரிபார்த்து கணக்கைத் தொடங்கலாம்.
  • ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம்: இந்தச் செயல்முறையானது UIDAI அமைப்போடு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், துல்லியமான தகவல் உறுதி செய்யப்பட்டு, ஆள்மாறாட்டம் போன்ற பிழைகள் தவிர்க்கப்படுகின்றன.
  • காகிதமற்ற நடைமுறை: காகித ஆவணங்கள், படிவங்கள் அல்லது கிளை வருகைகளின் தேவையை நீக்குவதன் மூலம், இகேஒய்சி சரிபார்ப்பு நடைமுறையை முற்றிலும் டிஜிட்டல் மற்றும் வசதியாக ஆக்குகிறது.
  • பாதுகாப்பு: என்கிரிப்ஷன் செய்யப்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், வாடிக்கையாளரின் தரவுகள் பாதுகாப்பாகவும், அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டும் கையாளப்படுகின்றன.
  • நிதிச் சேவைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது: வங்கிகள், பங்குச் சந்தை நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் தளங்கள், காப்பீட்டு வணிகங்கள் மற்றும் ஃபின்டெக் ஆப்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை எளிதில் இணைக்க இந்த முறையைப் பரவலாகப் பயன்படுத்துகின்றன.

சிகேஒய்சி என்றால் என்ன?

சிகேஒய்சி, அல்லது சென்ட்ரல் கேஒய்சி (மத்திய கேஒய்சி), என்பது ஒருவர் சிகேஒய்சி முறையில் தனது ஆவணங்களை (பான் கார்டு, ஆதார் போன்றவற்றை) ஒருமுறை சமர்ப்பித்து சரிபார்த்துக் கொண்டால் போதும். இந்த ஒற்றை பதிவை வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், என்பிஎஃப்சி-கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பங்குத் தரகர்கள் என அனைத்து நிதி நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கூடுதல் வங்கிக் கணக்குகளை உருவாக்கும்போது பல கேஒய்சி சமர்ப்பிப்புகளை அகற்றுவதே சிகேஒய்சி-இன் முக்கிய நோக்கமாகும். ஒரு நுகர்வோர் எந்த ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புடன் சிகேஒய்சி நடைமுறையை முடித்தவுடன், அவர்களின் சரிபார்க்கப்பட்ட அடையாளத் தகவல் சென்ட்ரல் ரெஜிஸ்ட்ரி ஆஃப் செக்யுரிட்டிஷேஷன் அஸெட் ரீகான்ஸ்டரக்ஷன் அண்ட் செக்யுரிட்டி இன்ட்ரெஸ்ட் ஆஃப் இந்தியா (சிஇஆர்எஸ்ஏஐ) ஆல் கட்டுப்படுத்தப்படும் மையப் பதிவேற்றத்திற்குப் பதிவேற்றப்படுகிறது. சரிபார்ப்பிற்குப் பிறகு, வாடிக்கையாளருக்கு தனித்துவமான 14 இலக்க சிகேஒய்சி எண் வழங்கப்படுகிறது.

சிகேஒய்சி ஆனது தொடக்கத்தில் பான் கார்டு, முகவரிச் சான்று மற்றும் புகைப்படம் போன்ற அடிப்படை ஆவணங்கள் பெறப்படுகின்றன. நிதி நிறுவனம் இந்த விவரங்களைச் சரிபார்த்து, சிகேஒய்சி மையத் தரவுத்தளத்தில் பாதுகாப்பாகப் பதிவேற்றம் செய்கிறது. வாடிக்கையாளரின் ஒப்புதலுடன், வேறு எந்த நிதி நிறுவனமும் அந்த 14 இலக்க சிகேஒய்சி எண்ணைப் பயன்படுத்தி ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு முறையும் புதிய நிறுவனத்திற்குச் செல்லும்போது தனித்தனியாக கேஒயசி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, நடைமுறைகளையும் எளிதாக்குகிறது.

சிகேஒயசி இன் அம்சங்கள் மற்றும் நன்மைகள்

சென்ட்ரல் கேஒய்சி பின்வரும் நன்மைகளைக் கொண்டுள்ளது:

ஒரே கேஒய்சி பதிவு: ஒவ்வொரு முறையும் புதிய நிறுவனத்திற்குத் தனித்தனியாக ஆவணங்களைக் கொடுக்க வேண்டிய தேவையை இது முழுமையாக நீக்குகிறது.

14 இலக்க சிகேஒய்சி எண்: பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு தனித்துவமான சிகேஒய்சி எண் ஒதுக்கப்படுகிறது, இது நிறுவனங்கள் சரிபார்க்கப்பட்ட கேஒய்சி தரவை உடனடியாகப் பெற அனுமதிக்கிறது.

பாதுகாப்பான சென்ட்ரல் ரெஜிஸ்ட்ரி: அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரவுத்தளத்தில் தரவுகள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படுகின்றன.

நிறுவனங்கள் முழுவதும் சீரான ஆரம்பக்கால செயல்பாடு: வங்கிகள், என்பிஎஃப்சி-கள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் மிகக் குறுகிய காலத்தில் கணக்கைத் தொடங்க உதவுகிறது.

ஆவணங்கள் குறைப்பு: ஏற்கனவே உள்ள கேஒய்சி தரவுகளைப் பயன்படுத்துவதால் காகிதப் பயன்பாடு குறைகிறது. மேலும், இது நுகர்வோருக்கு மிகவும் வசதியாக அமைகிறது.

மேம்படுத்தப்பட்ட இணக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை: ஒழுங்குமுறை அமைப்புகளின் விதிமுறைகளை நிதி நிறுவனங்கள் எளிதாகவும் துல்லியமாகவும் பின்பற்ற உதவுகிறது. அதே நேரத்தில் மனிதத் தவறுகளைத் தவிர்க்கவும் இது பெரிதும் உதவுகிறது.

இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி இடையே உள்ள முக்கிய வேறுபாடு

இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி ஆகியவை அடையாளச் சரிபார்ப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் நிதி நிறுவனங்களால் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் வேறுபடுகின்றன. சரிபார்ப்பு நுட்பம், வேகம், நடைமுறை மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி ஆகியவற்றை கீழேயுள்ள அட்டவணை ஒப்பிடுகிறது. இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி இடையே உள்ள வேறுபாடானது ஒரு குறிப்பிட்ட ஆரம்பக்காலத் தேவைக்கு எந்த அணுகுமுறை பொருத்தமானது என்பதை விளக்குகிறது.

அளவீடு  இகேஒய்சி   சிகேஒய்சி  
முதன்மை நோக்கம்  விரைவான அடையாளச் சரிபார்ப்பு  ஒற்றை, மீண்டும் பயன்படுத்தக்கூடிய கேஒய்சி பதிவு 
சரிபார்ப்பு முறை  ஆதார் அடிப்படையிலான ஓடிபி அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம்  மையப் பதிவேட்டில் சேமிக்கப்பட்ட ஆவண அடிப்படையிலான சரிபார்ப்பு 
முதன்மை பயன்பாட்டுச் சூழல்கள்  வங்கிக் கணக்குகள், டிமேட் கணக்குகள் மற்றும் ஃபின்டெக் ஆப்கள்  வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகள், என்பிஎஃப்சி-கள், காப்பீடு 
செல்லுபடியாகும் தன்மை  முழு கேஒய்சி (பயோமெட்ரிக் என்றால்); வரையறுக்கப்பட்ட கேஒய்சி (வீடியோ சரிபார்ப்பு இல்லாமல் ஓடிபி அடிப்படையிலானது என்றால்)  பல நிதி நிறுவனங்கள் முழுவதும் செல்லுபடியாகும் 
செயல்முறை  முழுவதுமாக டிஜிட்டல் மற்றும் நிகழ்நேரம்  ஒருமுறை சமர்ப்பிப்பு, பின்னர் நிறுவனங்கள் முழுவதும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது 
ஆவணத் தேவைகள்  ஆதார் மட்டும்  பான், முகவரிச் சான்று, அடையாளச் சான்று 
ஓடிபி அடையாளங்காட்டி  தனிப்பட்ட எண் எதுவும் வழங்கப்படவில்லை  14 இலக்க சிகேஒய்சி எண் 
தொடர்புடைய அரசு அமைப்பு  யுஐடிஆஐ  சிஇஆர்எஸ்ஏஐ 
வேகம்  உடனடி அல்லது கிட்டத்தட்ட உடனடி சரிபார்ப்பு  ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவேற்றப்படுவதால் அதிக நேரம் எடுக்கும் 

மேலும் படிக்க: ஆதார் இ-கேஒய்சி 

இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி: எது சிறந்தது?

இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி எதுவுமே உலகளாவிய ரீதியில் சிறந்தது அல்ல. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் சேவை செய்கிறது. நீங்கள் இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி-ஐ ஒப்பிடும்போது, ஆதார் மூலம் உடனடி அடையாளச் சரிபார்ப்பை அனுமதிப்பதால், இகேஒய்சி ஆனது விரைவான, டிஜிட்டல் ஆரம்பக்கால செயல்பாட்டிற்கு ஏற்றது. சிகேஒய்சிஆனது நீண்ட கால பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானது, ஏனெனில் இது பல நிதி நிறுவனங்களால் பயன்படுத்தக்கூடிய ஒரே கேஒய்சி பதிவை உருவாக்குகிறது.

சிகேஒய்சி-ஐ இகேஒய்சி -உடன் ஒப்பிடும்போது, இகேஒய்சி ஆனது வேகம் மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளிக்கிறது, அதேசமயம் சிகேஒய்சி ஆனது வங்கி, முதலீடு மற்றும் காப்பீட்டுச் சேவைகள் முழுவதும் சீரான தன்மை, இணக்கம் மற்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் திறனை மையமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க:ஆதார் ஆதென்டிகேஷன் VS ஆதார் இகேஒய்சி

வங்கி, பங்குச் சந்தை மற்றும் ஃபின்டெக் ஆகியவற்றில் இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன?

இந்தியாவின் நிதிச் சூழலில், விரைவான மற்றும் தடையற்ற ஆரம்பக்கால செயல்பாடுகளைச் சாத்தியமாக்குவதில் இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லாமல், ஏற்கெனவே சரிபார்க்கப்பட்ட தரவை எதிர்காலச் சேவைகளுக்குப் பயன்படுத்த சிகேஒய்சி வங்கிகளுக்கு உதவுகிறது. அதேசமயம், ஆதார் அடிப்படையிலான ஓடிபி அல்லது பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளை உடனடியாகத் தொடங்குவதற்கு இகேஒய்சி நடைமுறை பயன்படுகிறது.

இகேஒய்சி நடைமுறை பங்குச் சந்தையில் விரைவாக டிமேட் மற்றும் வர்த்தகக் கணக்குகளைத் தொடங்குவதை எளிதாக்குகிறது. இது முதலீட்டாளர்கள் காகித ஆவணங்கள் ஏதுமின்றி உடனடிப் பரிவர்த்தனைகளைத் தொடங்க உதவுகிறது. மாறாக, தரகர்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியோர் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்ட அதே வாடிக்கையாளர் அடையாளத் தரவைப் பயன்படுத்திக் கொள்வதை சிகேஒய்சி உறுதி செய்கிறது.

சிகேஒய்சி நடைமுறை மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் காப்பீட்டுத் துறைகளில் அதிகளவில் பயன்படுகிறது. இது காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்கள் இடையே பயன்படும் வகையில், பொதுவான மற்றும் சீரான ஒரே கேஒய்சி பதிவைப் பராமரிக்க உதவுகிறது.

சிகேஒய்சி நீண்டகால தரவினை நிலைத்தன்மையையும், விதிகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்யும் வேளையில், ஃபின்டெக் ஆப்கள் விரைவான டிஜிட்டல் வாடிக்கையாளர் இணைப்பிற்கு இகேஒய்சி -ஐயே பெரிதும் நம்பியுள்ளன. சிகேஒய்சி மற்றும் இகேஒய்சி ஆகியவை வேகம் மற்றும் மீண்டும் பயன்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபட்டாலும், நிதிச் சேவைகளின் செயல்திறனையும், சட்டப்பூர்வ இணக்கத்தையும் உறுதிப்படுத்த இவை இரண்டும் இணைந்தே செயல்படுகின்றன.

மேலும் படிக்க: டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளுக்கு இடையிலான வித்தியாசம்

முடிவுரை

இகேஒய்சி மற்றும் சிகேஒய்சி ஆகியவை இந்தியாவின் நிதிச் சேவைகளுக்கான டிஜிட்டல் அடையாளச் சரிபார்ப்பு அமைப்பின் அடித்தளமாக விளங்குகின்றன. இவை இரண்டும் வாடிக்கையாளர் சரிபார்ப்பு என்ற ஒரே இலக்கைக் கொண்டிருந்தாலும், நிதி அமைப்பில் வெவ்வேறான செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

இகேஒய்சி நிதிச் சேவைகளுக்கான விரைவான டிஜிட்டல் அணுகலை வழங்கும் வேளையில், சிகேஒய்சி வாடிக்கையாளர்களின் நீண்டகால நிதிச் சேவைகளில் சீரான தன்மையையும், தொடர்ச்சியையும் உறுதி செய்கிறது. இவை இரண்டும் இணைந்து செயல்படுவது, நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர் வசதியையும் ஒழுங்குமுறை விதிமுறைகளையும் சரியாகச் சமநிலைப்படுத்த உதவுகிறது.

FAQs

ஆதார் இகேஒய்சி-ஐ அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், பங்குத் தரகர்கள் அல்லது ஃபின்டெக் ஆப்களில் ஓடிபி அல்லது பயோமெட்ரிக் பயன்படுத்தி ஆன்லைனில் செய்யலாம். இந்தச் செயல்முறை எந்தவொரு ஆவணங்கள் இல்லாமலும் அடையாளத்தை உடனடியாக உறுதிப்படுத்துகிறது.

சிகேஒய்சி விவரங்களைத் திருத்த, துணை ஆவணங்களுடன் சிகேஒய்சி மாற்றப் படிவத்தை வங்கி, என்பிஎஃப்சி அல்லது மியூச்சுவல் ஃபண்ட் தளத்திற்கு அனுப்பவும். இதனையடுத்து நிறுவனம் மையப் பதிவேட்டில் உள்ள விவரங்களை புதுப்பிக்கிறது.

நீங்கள் எந்தவொரு நிதி நிறுவனத்துடனும் முழு கேஒய்சி செயல்முறையை முடித்தவுடன், அவர்கள் உங்கள் தரவை சிஇஆர்எஸ்ஏஐ-க்குச் சமர்ப்பிப்பார்கள். அதன் பிறகு சிஇஆர்எஸ்ஏஐ உங்களுக்கு 14 இலக்க எண் கொண்ட எஸ்எம்எஸ்/ஈமெயிலை உங்களுக்கு அனுப்பும்.

சிகேஒய்சி அமைப்பில் பதிவு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு 14 இலக்க சிகேஒய்சி எண் வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கான தனித்துவமான அடையாளமாகச் செயல்படுகிறது. மேலும், ஒரே கேஒய்சி நடைமுறையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய அவசியமின்றி, ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளரின் தரவை நிதி நிறுவனங்கள் எளிதாகப் பெற்றுக் கொள்ள இது உதவுகிறது.

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers

+91

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers
+91