Skip to main content

பிசிக்கல் கோல்டு என்றால் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

6 min readUpdated on 17th Aug, 2026by Angel One
Share

தங்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக நாணயமாகவும், கமாடிட்டியாகவும், இன்வெஸ்டிங்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரச் சிக்கல் ஏற்படும் நேரங்களில் இது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் விளங்குகிறது. தங்கம் மார்க்கெட்டில் நல்ல மார்க்கெட் லிக்யூடிட்டி உள்ளது. பிசிக்கல் கோல்டு (தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள்) மற்றும் பங்குச் சந்தை வர்த்தக நிதி போன்ற பல்வேறு வழிகளில் இன்வெஸ்டர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

பிசிக்கல் கோல்டு என்றால் என்ன?

இந்தியாவில் தங்கம் மிகவும் பிரபல முதலீட்டு ஆப்ஷன்களில் ஒன்றாகும். இது உணர்வுப்பூர்வமாகவும், சமூக ரீதியாகவும் மதிப்புமிக்க ஒரு சொத்தாகும். இந்தியாவில் தங்கம் என்பது தங்க நாணயங்கள், கட்டிகள், நகைகள் மற்றும் பிஸ்கட் வடிவில் பிசிக்கல் ஃபார்மில் வாங்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் இது சொந்தப் பயன்பாட்டிற்காகவே வாங்கப்படுகிறது.

வங்கிகள், நகைக்கடைகள் அல்லது வேறு எந்த வியாபாரிகளிடமிருந்தும் நேரடியாக தங்கத்தை வாங்கலாம்.

இதில் இடைத்தரகர்களோ அல்லது ஒப்பந்தங்களோ இருக்காது. இதனால் பிசிக்கல் கோல்டு வாங்கும் போது எதிர்தரப்பு அபாயம் (கவுண்டர்பார்ட்டி ரிஸ்க்) இல்லை. உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் தங்கத்தை எளிதாக பணமாக மாற்றிக் கொள்ளலாம். அவசர காலங்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சொத்து இது. தங்கத்தை வாங்கும் போது ரகசியமாக வைத்திருந்தாலும், இன்கம் டேக்ஸ் நோக்கத்திற்காக அனைத்து பில்களையும், ரசீதுகளையும் பத்திரமாக வைத்துக்கொள்வது நல்லது.

தங்கத்தின் மீதான கேப்பிடல் கெயின்ஸ் டேக்ஸ் என்பது அந்த சொத்தை எவ்வளவு காலம் வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து அமையும். வாங்கிய நாளிலிருந்து 36 மாதங்களுக்குள் தங்கம் விற்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தச் சூழ்நிலையில் STCG ஆனது தனிநநபரின் வருமான வரி ஸ்லாப் ரேட்டின்படி வசூலிக்கப்படும். ஒருவேளை வாங்கிய 36 மாதங்களுக்குப் பிறகு தங்கம் விற்கப்பட்டால், நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு இன்டெக்சேனுடன் 20% வரியும், இன்டெக்சேஷன் இல்லாமல் 10% வரியும் வசூலிக்கப்படும்.

பிசிக்கல் கோல்டில் இன்வெஸ்ட் செய்வதில் சில குறைபாடுகள்

பிசிக்கல் கோல்டில் இன்வெஸ்ட் செய்வதில் சில குறைபாடுகளும் உள்ளன. தங்க பிஸ்கட்கள் 10 கிராம்களில் கிடைப்பதால், குறைந்தபட்ச இன்வெஸ்டிங் பொதுவாக அதிகமாக இருக்கும். தங்கத்தை வாங்கிய பிறகு அது திருடப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அதைப் பாதுகாக்க, நாம் சேஃப்டி லாக்கர்களில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும். இதனால் சேமிப்பு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும்.

நகைகளுக்கான மேக்கிங் சார்ஜ்கள் பொதுவாக அதிகமாக இருக்கும். தங்கத்தை வாங்கும் போது அதன் தூய்மைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும், தங்கத்தின் விலை ஒரு டீலரிடம் இருந்து மற்றொரு டீலருக்கு மாறும். 30 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்கம் வாங்கும் போது வெல்த் டேக்ஸ் விதிக்கப்படுகிறது. மேலும், சவரன் கோல்டு பாண்ட் அல்லது கோல்டு ஈடிஎஃப்-ஐ ஒப்பிடும்போது தங்கத்திற்கு ரீசேல் வேல்யூ சற்று குறைவு.

பிசிக்கல் கோல்டில் இன்வெஸ்ட் செய்வதன் நன்மைகள்

  • உங்கள் முதலீட்டின் பிசிக்கல் ஓனர்ஷிப்: இன்வெஸ்டர்கள் தங்கள் முதலீட்டை பிசிக்கல் ஃபார்மில் வைத்திருக்க ஆப்ஷன் உள்ளது. அவை நகைகள், கட்டிகள் அல்லது நாணயங்களாக இருக்கலாம். எனவே, இது பாதுகாப்பான முதலீட்டு வகைகளில் ஒன்றாகும்.
  • பணவீக்கம் மற்றும் கரன்சி மதிப்பு குறைவு: தங்கத்திலான முதலீடுகள் பணவீக்கம் மற்றும் கரன்சி மதிப்பு குறைவிலிருந்து உங்கள் செல்வத்தைப் பாதுகாக்க உதவும்.
  • முழுமையான வெல்த் கண்ட்ரோல்: கையில் பிசிக்கல் கோல்டு வைத்திருப்பது இன்வெஸ்டர்களுக்கு எப்போது வாங்குவது மற்றும் விற்பது என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது. இந்தச் சொத்துக்கான பொறுப்பு இன்வெஸ்டருடையது. எனவே, இன்வெஸ்டரிடம் முழுமையான கட்டுப்பாடு இருக்கும்.

கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடெட் ஃபண்டுகள் என்றால் என்ன?

கோல்டு ஈடிஎஃப்கள் என்பவை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும், இவை கோல்டு புல்லியனில் இன்வெஸ்ட் செய்து தங்கத்தின் விலையைப் பின்பற்றுகின்றன. இவை 99.5 சதவீதம் தூய்மையான தங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன. கோல்டு ஈடிஎஃப்கள் என்பவை பிசிக்கல் கோல்டுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய டிமெட்டீரியலைஸ்டு வடிவமாகும்.

ஒரு கிராம் தங்கம் என்பது ஒரு யூனிட் கோல்டு ஈடிஎஃப்-க்கு சமம் என்பதால், குறைந்தபட்ச இன்வெஸ்டிங் ஒரு கிராம் தங்கமாகும். கோல்டு ஈடிஎஃப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது, இது இன்வெஸ்டர்கள் மார்க்கெட்டில் பங்கேற்கும் அதே நேரத்தில் தங்கத்தின் மீது வெளிப்பாட்டைப் பெற அனுமதிக்கிறது. கோல்டு ஈடிஎஃப் இந்திய மற்றும் சர்வதேச பிளாட்ஃபார்ம்களில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ போன்ற எக்ஸ்சேஞ்ச்களில் ஈடிஎஃப்களை வாங்கி விற்கலாம்.

இந்த ஈடிஎஃப்களை வர்த்தகம் மற்றும் டீமேட் அக்கவுண்ட் மூலம் வர்த்தகம் செய்யலாம். இதன் விளைவாக, வாங்குதலும் விற்பனையும் தங்கமாக இல்லாமல் பணமாகவே செய்யப்படுகிறது. கோல்டு ஈடிஎஃப் விலை இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும், இதனால் டீலிங் செய்யும் போது சரியான வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. இந்த ஃபண்டுகளுக்கான செலவு விகிதம் அதிகபட்சமாக 1% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புரோக்கரேஜ் மற்றும் டிரான்ஸ்பாக்ஷன் கட்டணங்கள் போன்ற பிற செலவுகளும் உள்ளன. சில அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனிகளில் மட்டுமே இன்வெஸ்டர்கள் தங்கள் கோல்டு ஈடிஎஃப்களை தங்கமாகப் பெற்றுக் கொள்ள முடியும். இன்வெஸ்டரிடம் 1 கிலோ தங்கம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பில் ஈடிஎஃப்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதால், கோல்டு ஈடிஎஃப்களில் மார்க்கெட் லிக்யூடிட்டி அதிகமாக உள்ளது. மேலும் டிமெட்டீரியலைஸ்டு வடிவத்தில் இருப்பதால் திருடப்படும் அபாயம் இல்லை மற்றும் கூடுதல் ஸ்டோரேஜ் செலவுகளும் இல்லை. ஒவ்வொரு டீலரிடமும் மாறுபடும் பிசிக்கல் கோல்டு போலல்லாமல், ஈடிஎஃப்கள் இந்தியா முழுவதும் நிலையான விலையில் வழங்கப்படுகின்றன.

கோல்டு ஈடிஎஃப் ரிட்டர்ன்கள், முதலீட்டின் ஹோல்டிங் காலத்தைப் பொறுத்து வரி விதிக்கப்படுகின்றன. குறுகிய காலத்தில் (மூன்று ஆண்டுகள் முடிவதற்குள்) மூலதன ஆதாயத்திற்கு இன்வெஸ்டரின் இன்கம் டேக்ஸ் ஸ்லாப் ரேட்டின்படி வரி விதிக்கப்படுகிறது. நீண்ட காலத்தில் (மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு) மூலதன ஆதாயத்திற்கு இன்டெக்சேஷன் பலனுடன் 20% மற்றும் இன்டெக்சேஷன் பலன் இல்லாமல் 10% வரி விதிக்கப்படுகிறது.

முடிவுரை

பூமித்தாயின் மிகவும் மதிப்புமிக்க கமாடிட்டி மற்றும் சொத்து தங்கம் ஆகும். இது நீண்ட காலமாக நாணயத் தரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தங்க உலோகத்திற்கான தேவை கடந்த காலங்களில் அதிகரித்துள்ளது. தற்போதும் கூட, தங்கம் அதன் அனைத்து வடிவங்களிலும் மிகவும் விரும்பத்தக்கதாக வளர்ந்து வருகிறது. பிசிக்கல் கோல்டு மற்றும் கோல்டு ஈடிஎஃப் தொடர்ந்து பணவீக்கத்தை விஞ்சிய ஒரே சொத்துகளாக இருப்பதால் அவற்றுக்கு அதிக தேவை உள்ளது. எனவே, இது ஒரு சிறந்த பணவீக்க ஹெட்ஜ் ஆகும்.

பிசிக்கல் கோல்டு மற்றும் கோல்டு ஈடிஎஃப் இரண்டும் அவற்றுக்கே உரிய நன்மைகள் மற்றும் தீைகளைக் கொண்டுள்ளன. பிசிக்கல் கோல்டு பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் கோல்டு ஈடிஎஃப் மிகவும் பாதுகாப்பானது. மற்ற அனைத்து வகையான தங்கத்தோடு ஒப்பிடும்போது இதில் மார்க்கெட் லிக்யூடிட்டி அதிகம். வர்த்தகம் என்று வரும்போது, கோல்டு ஈடிஎஃப் மிகவும் வெளிப்படையானவை. மறுபுறம், பிசிக்கல் கோல்டில் கவுண்டர்பார்ட்டி ரிஸ்க் இல்லை. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் இன்வெஸ்டர்கள் தங்கள் தேவைகள் மற்றும் இலக்குகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

நிதி நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு முதலீட்டுத் தொகுப்பில் தங்கம் 10% முதல் 20% வரை இருக்க வேண்டும். இது பல்வகைப்படுத்தப்பட்ட முதலீட்டு தொகுப்புக்கு உதவுவதோடு, பணவீக்கம், கரன்சி ரிஸ்க் மற்றும் மார்க்கெட் ஏற்ற இறக்கங்களுக்கு எதிரான ஒரு பஃபராகவும் செயல்படும்.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் மற்றும் நேஷனல் கமாடிட்டி அண்ட் டெரிவேடிவ்ஸ் எக்ஸ்சேஞ்ச் போன்ற எக்ஸ்சேஞ்ச்கள் மூலம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற கமாடிட்டிகளில் வர்த்தகம் மூலம் நீங்கள் இன்வெஸ்ட் செய்யலாம். இது பல்வகைப்படுத்தப்பட்ட முதலீட்டு தொகுப்பு, பணவீக்கத்திற்கு எதிரான ஹெட்ஜிங் மற்றும் உலகளாவிய விலை போக்குகளை வழங்குகிறது.

ஏஞ்சல் ஒன் (Angel One) மூலம், ஒற்றை டிரேடிங் அக்கவுண்ட் மூலம் ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் கான்ட்ராக்ட்ஸ் வழியாக நீங்கள் கமாடிட்டி டிரேடிங்கை தடையின்றி செய்யலாம். உலோகங்கள், எரிசக்தி மற்றும் விவசாய-கமாடிட்டி மார்க்கெட்டின் போக்குகளைப் புரிந்துகொள்ள எங்கள் பிளாட்ஃபார்ம் லைவ் கமாடிட்டி விலைகள், ஆழமான ரிசர்ச் அறிக்கைகள் மற்றும் கல்வி வளங்களை வழங்குகிறது

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers
+91