NSE IPO - Apply Online, Check Issue Date, Price, Lot Size & Allotment Status

Apply for NSE IPO:

Skip to main content

அஞ்சல் அலுவலகம் சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana): தகுதி மற்றும் வரி நன்மைகள்

6 min readUpdated on 8th Aug, 2025by Team Angel One
சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்.எஸ்.ஒய். (SSY)) பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சேமிப்பு திட்டமாகும். 10 வயதுக்கும் குறைவான ஒரு பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் எஸ்.எஸ்.ஒய். (SSY) கணக்கை திறக்க முடியும்.
Share

பெண் குழந்தைகளின் அதிகாரத்தை நோக்கி வடிவமைக்கப்பட்ட சில அரசாங்க ஆதரவு திட்டங்களில் ஒன்று சுகன்ய சம்ரித்தி யோஜனா. உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால், அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று எஸ்.எஸ்.ஒய். (SSY) கணக்கைத் திறக்கலாம். இந்த தனித்துவமான சேமிப்பு திட்டம் பற்றி, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.

சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) என்றால் என்ன?

சுகன்ய சம்ரித்தி யோஜனா (எஸ்.எஸ்.ஒய். (SSY)) 22 ஜனவரி, 2015 அன்று இந்திய அரசாங்கம் பெட்டி பச்சாவோ பேட்டி பதாவோ (Beti Bachao Beti Padhao - BBBP) முன்முயற்சியின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. எஸ்.எஸ்.ஒய். (SSY) திட்டத்தின் முதன்மை நோக்கம் பெண் குழந்தைகளின் பெற்றோர்களை தங்கள் எதிர்காலத்திற்கு சேமிக்க ஊக்குவிப்பதாகும். கணக்கு முதிர்ச்சியடைந்தவுடன், பெண் குழந்தை தனது உயர்கல்விக்கு நிதியளிக்க அல்லது தனது திருமண செலவுகளை கவனிக்க இதைப் பயன்படுத்தலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனா பெண் குழந்தைகளுக்கு நிதி ரீதியாக சுதந்திரம் அளிக்கும் அதிகாரத்தை அளிக்கிறது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா வயது வரம்பு மற்றும் மெச்சூரிட்டி காலம்

சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை திறப்பதற்கான வயது வரம்பை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஒரு பெண் குழந்தையின் பெற்றோர் எஸ்.எஸ்.ஒய். (SSY) கணக்கை அஞ்சல் அலுவலகத்தில்திறக்கலாம் அல்லது அறிவிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட வணிக வங்கி (Scheduled Commercial Bank - SCB) மூலம் எந்த நேரத்திலும் குழந்தை 10 வயதுக்கு முன்னர் திறக்கலாம்.

21 வயது பெண் குழந்தை அடையும் போது, சுகன்யா சம்ரித்தி கணக்கு முதிர்ச்சியடைகிறது. மெச்சூரிட்டியின் போது, கார்பஸ் வட்டி சம்பாதிப்பதை நிறுத்துகிறது மற்றும் கணக்கு வைத்திருப்பவரால் அதைத் திரும்பப் பெற முடியும். மாற்றாக, 18 வயதுக்கு பிறகு திருமணம் செய்யப்பட்டால் கணக்கில் உள்ள நிதிகளை பெண்ணால் அணுக இயலும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் நன்மைகள்

சுகன்யா சம்ரித்தி யோஜனா பெற்றோர்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சில முக்கிய நன்மைகளின் விரைவான கண்ணோட்டத்தைக் காணலாம்.

  • குறைந்தபட்ச வைப்புத்தொகை

சுகன்யா சம்ரித்தி கணக்குகளுக்கான குறைந்தபட்ச வைப்புத்தொகையானது, ஒரு நிதியாண்டிற்கு ₹250 மட்டுமே. ஒரு நிதியாண்டில் நீங்கள் குறைந்தபட்ச வைப்புத்தொகையை செய்ய தவறினால் ₹50 பெயரளவு அபராதம் விதிக்கப்படும். எந்தவொரு குறிப்பிட்ட நிதி ஆண்டிலும் நீங்கள் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ₹1.5 லட்சம் ஆகும்.

  • முன்கூட்டியே திரும்பப் பணம் எடுக்கும் வசதி

சுகன்ய சம்ரித்தி யோஜனா முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதியைக் கொண்டுள்ளது; உங்கள் பெண் குழந்தையின் கல்விச் செலவுகளை பூர்த்தி செய்ய முந்தைய நிதியாண்டின் இருப்பில் 50% வரை நீங்கள் திரும்பப் பெறலாம். இந்த வசதியைப் பெறுவதற்கு சேர்க்கைக்கான ஆதாரத்தை தயாரிப்பது கட்டாயமாகும்.

  • உத்தரவாதமான பாதுகாப்பு மற்றும் வருமானங்கள்

சுகன்யா சம்ரித்தி யோஜனாவுடன், வருமானங்கள் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன மற்றும் இந்த திட்டம் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால் அபாயம் எதுவும் இல்லை.

  • கணக்கு டிரான்ஸ்ஃபர் வசதி

நீங்கள் அஞ்சல் அலுவலகம் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை ஒரு திட்டமிடப்பட்ட வணிக வங்கிக்கு (Scheduled Commercial Bank) டிரான்ஸ்ஃபர் செய்யலாம் மற்றும் எந்த நேரத்திலும் அதைத் திரும்பவும் மாற்றிக் கொள்ளலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் வரிச் சலுகைகள்

சேமிப்பு திட்டத்தை மிகவும் கவர்ச்சிகரமாக மாற்றுவதற்கு, இந்திய அரசு பல வரி சலுகைகளுடன் சுகன்யா சம்ரித்தி யோஜனாவை வழங்கியுள்ளது:

  • ஒரு நிதியாண்டில் ஒரு எஸ்.எஸ்.ஒய். (SSY) கணக்கிற்காக நீங்கள் செய்யும் எந்தவொரு வைப்புத்தொகையும் வருமான வரிச் சட்டம், 1961 பிரிவு 80C-யின் கீழ் ஒரு விலக்காக கோரப்படலாம். இருப்பினும், நீங்கள் கோரக்கூடிய அதிகபட்ச தொகை ஒரு நிதியாண்டிற்கு ₹1.5 லட்சம் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
  • வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10-யின்படி சுகன்யா சம்ரித்தி கணக்கில் நிதி பெறும் எந்தவொரு வட்டிக்கும் முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
  • மெச்சூரிட்டி அல்லது கணக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்ட நிதிகளுக்கும் முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படுகின்றது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி விகிதம்

இந்திய அரசாங்கம் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை காலாண்டு அடிப்படையில் அறிவிக்கிறது. 2023-2024 நிதியாண்டின் 2வது காலாண்டு (ஜூலை முதல் செப்டம்பர் வரை) வட்டி விகிதம் ஆண்டுக்கு 8% என்று அறிவிக்கப்பட்டுள்ளது; இது மிகவும் பாரம்பரிய சேமிப்பு மற்றும் வைப்புத் திட்டங்களை விட மிக அதிகமாக உள்ளது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டியை கணக்கிடுதல்

சுகன்யா சம்ரித்தி கணக்கில் ஒரு மாதத்தில் உள்ள மிகக்குறைந்த இருப்பிற்கு வட்டி கணக்கிடப்படுகிறது. வட்டி கணக்கீட்டின் நோக்கத்திற்காக, மாதத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி நாட்களுக்கு இடையிலான கணக்கின் இருப்பு கருத்தில் கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் வட்டி கணக்கிடப்பட்டாலும், அது ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியில் மட்டுமே கிரெடிட் செய்யப்படும். கூடுதலாக, வட்டி ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது. ஒரு எஸ்.எஸ்.ஒய். (SSY) கணக்கில் உங்கள் முதலீட்டின் வட்டி தொகையை நீங்கள் துல்லியமாக தீர்மானிக்க விரும்பினால், சுகன்யா சம்ரித்தி யோஜனா கால்குலேட்டரை பயன்படுத்துவது அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஆண்டு முதலீட்டு தொகை, குழந்தையின் வயது மற்றும் கணக்கு திறப்பு ஆண்டு போன்ற சில விவரங்களை உள்ளிட வேண்டும். இந்த கருவி உடனடியாக வருமானத்தின் மதிப்பீட்டை உங்களுக்கு வழங்கும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனாவிற்கு தகுதி வரம்பு

சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை திறப்பதற்கு தகுதி பெறுவதற்கு சில அளவுகோல்கள் உள்ளன. தகுதி வரம்பின் விரைவான கண்ணோட்டம் இங்கே உள்ளது:

  • நீங்கள் பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலராக இருக்க வேண்டும்.
  • பெண் குழந்தை ஒரு இந்திய குடியிருப்பாளராகவும் 10 வயதுக்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.
  • ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கை மட்டுமே நீங்கள் திறக்க முடியும்.
  • ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்திருந்தால் மட்டும் மூன்றாவது கணக்கைத் திறக்கலாம்; இல்லையேல், ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக இரண்டு எஸ்.எஸ்.ஒய். (SSY) கணக்குகளை மட்டுமே நீங்கள் திறக்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்)-யில் எவ்வாறு முதலீடு செய்வது?

சுகன்ய சம்ரித்தி யோஜனாவில் முதலீடு செய்ய, நீங்கள் முதலில் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு கணக்கை திறக்க வேண்டும் அல்லது அறிவிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட வணிக வங்கி (எஸ்.சி.பி. -- SCB). ஒரு கணக்கை திறக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:

  • படிநிலை 1: ஒரு அஞ்சல் அலுவலகம் அல்லது அறிவிக்கப்பட்ட வங்கியின் அருகிலுள்ள கிளையை அணுகவும்.
  • படிநிலை 2: சுகன்யா சம்ரித்தி கணக்கு திறப்பு படிவத்திற்கான கோரிக்கை (படிவம்-1).
  • படிநிலை 3: தேவையான அனைத்து ஆவண சான்றுகளுடன் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
  • படிநிலை 4: முதல் வைப்பு நிதியை செய்யுங்கள். ரொக்கம், டிமாண்ட் டிராஃப்ட் அல்லது காசோலை மூலம் நீங்கள் பணம் செலுத்த தேர்வு செய்யலாம்.

அவ்வளவுதான். நீங்கள் முதல் வைப்பு நிதியை செய்தவுடன், வங்கி அல்லது தபால் அலுவலகம் உங்கள் கணக்கு திறப்பு கோரிக்கையை செயல்முறைப்படுத்தும் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட கணக்கின் விவரங்களைக் கொண்ட ஒரு பாஸ்புக்கை நீங்கள் பெறுவீர்கள்.

சுகன்யா சம்ரித்தி யோஜனாவிற்கு தேவையான ஆவணங்கள்

வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை திறக்க நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல் பின்வருமாறு:

  • பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழின் நகல்
  • பெற்றோர் அல்லது சட்ட பாதுகாவலரின் அடையாளம் மற்றும் முகவரிச் சான்றின் நகல்
  • ஒரே கர்ப்பம் மூலம் பல பெண் குழந்தைகள் பிறந்த விஷயத்தில், அதை சான்றளிக்கும் தகுதிவாய்ந்த மருத்துவரிடமிருந்து ஒரு மருத்துவ சான்றிதழ்

குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் கூடுதலாக வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம், மேலும் சில ஆவண சான்றுகளை சமர்ப்பிக்குமாறு உங்களை கேட்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா மூடல் விதிகள்

சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு பொதுவாக மெச்சூரிட்டியில் மூடப்படுகிறது. ஆனால் சில நிபந்தனைகளின் கீழ் அது முன்கூட்டியே மூடப்படலாம். கணக்கு மூடல் விதிகளை இங்கே பார்க்கலாம்.

மெச்சூரிட்டியின் போது கணக்கு மூடல் 

பெண் குழந்தை 21 வயதை அடைந்ததும் சுகன்யா சம்ரித்தி கணக்கு முதிர்ச்சியடைகிறது. இந்த நேரத்தில், கணக்கு வைத்திருப்பவர் மூடலுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் மற்றும் கணக்கில் உள்ள முழு இருப்பையும் திரும்பப் பெறலாம்.

முன்கூட்டியே கணக்கு மூடல்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளில் ஏதேனும் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே கணக்கை முன்கூட்டியே மூட முடியும்:

  • பெண் குழந்தை வாழ்க்கை-அச்சுறுத்தும் நோய்க்கான மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால்.
  • கணக்கு முதிர்வடைவதற்கு முன்னர் பெண் குழந்தை எந்த நேரத்திலும் இறந்தால்.
  • • பெண் குழந்தையின் குடியிருப்பு நிலை குடியிருப்பில் இருந்து குடியுரிமை இல்லாதவராக மாறினால்.
  • 18 வயது அடைந்த பிறகு பெண் குழந்தை, திருமணம் செய்ய விரும்பினால், முன்கூட்டியே கணக்கு மூடல் கோரிக்கையை முன்மொழியப்பட்ட திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மற்றும் அவரது திருமணத்திற்கு பிறகு 3 மாதங்களில் செய்யலாம்.
  • கணக்கு வழங்கும் அதிகாரம், கணக்கின் தொடர்ச்சி, பெண் குழந்தைக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் என்ற நோக்கத்தில் இருந்தால்.

குறிப்பு: மேலே பட்டியலிடப்பட்டுள்ளவை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் எஸ்.எஸ்.ஒய். (SSY) கணக்கு முன்கூட்டியே மூடப்பட்டால், வைப்புத்தொகை வழக்கமான அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கிற்கு பொருந்தக்கூடிய விகிதத்தில் வட்டியைப் பெறும்.

முடிவுரை

சுகன்யா சம்ரித்தி யோஜனா பெண் குழந்தைகளின் நிதி சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு நல்ல நடவடிக்கையாக உள்ளது. அது வழங்கும் பல நன்மைகளுக்கு நன்றி, இத்திட்டம் ஏற்கனவே நாட்டின் மிகவும் பிரபலமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

FAQs

எஸ்.எஸ்.ஒய். (SSY)திட்டத்தின் விதிகளின்படி, நீங்கள் ஒரு எஸ்.எஸ்.ஒய். (SSY)கணக்கில் இருப்பு மீதான கடனை பெற முடியாது. எஸ்.எஸ்.ஒய். (SSY) திட்டம் கடன் வசதியை வழங்கவில்லை.
கணக்கு மூலதனத்தில் 50% வரை பகுதியளவு திரும்பப் பெறுதல் கிடைக்கிறது. இருப்பினும், பெண் குழந்தைக்கு 18 வயதுக்குப் பிறகுதான் இந்த வசதியை பெற முடியும்.
ஒரு நிதி ஆண்டில் சுகன்யா சம்ரித்தி கணக்கில் நீங்கள் செய்யக்கூடிய வைப்புத்தொகைகளின் எண்ணிக்கைக்கு எந்த வரம்பும் இல்லை. இருப்பினும், அதிகபட்ச வைப்புத்தொகை ஒரு நிதியாண்டிற்கு ₹1.5 லட்சம் வரை என வரையறுக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் அலுவலகமோ அல்லது திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளோ ஒரு எஸ்.எஸ்.ஒய். (SSY) கணக்கை ஆன்லைனில் திறக்க உங்களை அனுமதிக்கவில்லை. ஒரு கணக்கை திறப்பதற்கு, நீங்கள் கட்டாயமாக அஞ்சல் அலுவலகத்தின் கிளைக்கு செல்ல வேண்டும் அல்லது அறிவிக்கப்பட்ட வங்கிக்கு செல்ல வேண்டும்.

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers
+91