Skip to main content

பேங்கில் ஆன்லைன் மூலம் எஸ்எஸ்ஒய் அக்கவுண்ட் திறப்பது எப்படி?

6 min readUpdated on 17th Aug, 2026by Team Angel One
சுகன்யா சம்ரித்தி யோஜனாவுக்குப் பிறப்புச் சான்றிதழ் கேஒய்சி மற்றும் முகவரிச் சான்று தேவைப்படுகிறது. இதன் மூலம் எளிதாக அக்கவுண்ட் திறக்கலாம்.
Share

பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்' திட்டத்தின் கீழ் 2015-ஆம் ஆண்டு பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்புக்காக 'சுகன்யா சம்ரித்தி யோஜனா' (எஸ்எஸ்ஒய்) தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஜனவரி 22, 2015 அன்று பெண் குழந்தைகளைக் பாதுகாக்கவும், அவர்களின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளை எளிதாக்கவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. மற்ற பாரம்பரிய சேமிப்புத் திட்டங்களை விட இது அதிக லாபம் தரக்கூடியது. அரசாங்கத்தால் நடத்தப்படும் சிறிய சேமிப்புத் திட்டங்களில் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்குத் தற்போது மற்ற பல பாரம்பரியத் திட்டங்களை விட சற்று கூடுதலான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும், இதற்கு வருமான வரிச் சலுகையும் உண்டு. அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன்/நேரடியாக கணக்கைத் தொடங்கலாம்.

முக்கிய குறிப்புகள்

  • எஸ்எஸ்ஒய் அக்கவுண்ட்டில் குறைந்தபட்சம் ₹250 முதல் அதிகபட்சம் ₹1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். 21 ஆண்டுகள் நிறைவடையும் வரை வட்டி சேர்ந்து கொண்டே இருக்கும்.
  • ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஒரு எஸ்எஸ்ஒய் அக்கவுண்ட் மட்டுமே திறக்க முடியும். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு அக்கவுண்ட்கள் வரை அனுமதிக்கப்படும்.
  • இந்தத் திட்டம் இந்தியாவில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். குழந்தை பிறந்து 10 வயதுக்குள் இந்த அக்கவுண்ட் திறக்கப்பட வேண்டும்.
  • பெண் குழந்தைக்கு 18 வயது கடந்த பிறகு, கல்வி அல்லது திருமணம் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்காக மட்டுமே பணத்தில் பாதியை எடுக்க முடியும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) என்றால் என்ன?

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது பெண் குழந்தைகளின் எதிர்கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டமாகும். பெண் குழந்தைக்கு 10 வயது ஆவதற்கு முன்பு திறக்கப்படும் இந்த அக்கவுண்ட்டில், பெற்றோர்கள் ஆண்டுதோறும் ₹250 முதல் ₹1.5 லட்சம் வரை இன்வெஸ்ட் செய்யலாம். அரசாங்கம் நிர்ணயிக்கும் வட்டி விகிதம், வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி-ன் கீழ் வரிச் சலுகைகள் இதில் கிடைக்கும். இந்த அக்கவுண்ட் ஆனது 21 ஆண்டுகள் கழித்தோ அல்லது பெண் குழந்தைக்கு 18 வயதுக்குப் பின் திருமணம் நடக்கும்போதோ முதிர்ச்சி அடையும்.

எஸ்எஸ்ஒய் அக்கவுண்ட்டை ஆன்லைனில் திறக்க முடியுமா?

சுகன்யா சம்ரித்தி அக்கவுண்ட்டை ஆன்லைனில் திறக்க முடியுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது, அதற்குப் பதில் 'ஆம்' என்பதே ஆகும். நெட் பேங்கிங் அல்லது மொபைல் ஆப்ஸைப் பயன்படுத்தி, ஃபார்ம்களை நிரப்பி, ஆவணங்களை அப்லோட் செய்வதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பேங்குகள் வழியாக இதைத் தொடங்கலாம்.

இருப்பினும், சில பேங்குகள் ஒருமுறை நேரில் வந்து சரிபார்க்கச் சொல்லலாம் அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கேட்கலாம். ஆனால் போஸ்ட் ஆபீஸில் எஸ்எஸ்ஒய் அக்கவுண்ட் திறக்க வேண்டுமென்றால், நேரில் செல்வது வழக்கமாகத் தேவைப்படுகிறது.

இதையும் படியுங்கள்: சுகன்யா சம்ரித்தி யோஜனாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

சுகன்யா சம்ரித்தி யோஜனா வழங்கும் வங்கிகள்

அங்கீகரிக்கப்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் பேங்குகள் மற்றும் இந்தியா போஸ்ட் ஆபீஸ்களில் சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) அக்கவுண்ட்களைத் திறக்கலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா பேங்க் மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை முக்கிய பொதுத்துறை வங்கிகளாகும். எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்சிஸ் பேங்க் மற்றும் கோடக் மஹிந்திரா பேங்க் போன்ற தனியார் வங்கிகளும் இந்த வசதியை வழங்குகின்றன.

அக்கவுண்ட் திறக்க, பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கேஒய்சி விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சில வங்கிகள் ஆன்லைனில் தொடங்க அனுமதித்தாலும், இறுதிச் சரிபார்ப்புக்கு அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியிருக்கலாம்.

பேங்கில் ஆன்லைன் மூலம் எஸ்எஸ்ஒய் அக்கவுண்ட் திறப்பதற்கான ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி

வங்கியில் ஆன்லைன் மூலம் எஸ்எஸ்ஒய் அக்கவுண்ட் திறப்பது எளிதான செயல்முறையாகும். எனினும் சில ஸ்டெப்களுக்கு ஆஃப்லைன் சரிபார்ப்பு தேவைப்படலாம். கீழே உள்ள ஸ்டெப்களைப் பின்பற்றுங்கள்:

  1. நெட் பேங்கிங்/ஆப்-பில் லாகின் செய்யவும்: உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ நெட் பேங்கிங் போர்ட்டல் அல்லது மொபைல் ஆப்புக்குச் செல்லவும்.
  2. எஸ்எஸ்ஒய் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்: “அரசுத் திட்டங்கள்” அல்லது “சிறு சேமிப்புத் திட்டங்கள்” பகுதிக்குச் சென்று சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்: பெண் குழந்தை மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் விவரங்களைச் சரியாக என்டர் செய்யவும்.
  4. ஆவணங்களை அப்லோட் செய்யவும்: அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட கேஒய்சி ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.
  5. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்: ஃபார்மை சரிபார்த்து ஆன்லைனில் சப்மிட் செய்யவும்.
  6. சரிபார்ப்பை முடிக்கவும்: ஆவணங்களைச் சரிபார்க்கத் தேவைப்பட்டால் அலுவலகத்திற்கு நேரில் செல்லவும்.
  7. தொடக்க டெபாசிட் செய்யவும்: அக்கவுண்ட்டை ஆக்டிவேட் செய்ய குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்யவும்.

இதையும் பார்க்கவும்: டீமேட் அக்கவுண்டுக்கான கேஒய்சி செயல்முறையை எளிதாக முடிப்பது எப்படி?

சுகன்யா சம்ரித்தி யோஜனாவுக்குத் தேவையான ஆவணங்கள்

எஸ்எஸ்ஒய் அக்கவுண்ட்டை ஆன்லைனில் திறக்க, நீங்கள் போஸ்ட் ஆபீஸ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிக்குச் செல்ல வேண்டியிருக்கும் (எ.கா. எஸ்பிஐ, எச்டிஎஃப்சி அல்லது ஐசிஐசிஐ). விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:

  1. பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்

    இது மிக முக்கியமான ஆவணமாகும். பிறப்புச் சான்றிதழ் எதைக் காட்டுகிறது என்றால்:

    • குழந்தையின் பிறந்த தேதி (10 வயதுக்குள் இருக்க வேண்டும்).
    • விண்ணப்பதாரருக்கும் (பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்) குழந்தைக்கும் உள்ள உறவுமுறை.
    • முனிசிபல் கார்ப்பரேஷன் அல்லது தொடர்புடைய உள்ளூர் அதிகாரியிடமிருந்து பிறப்புச் சான்றிதழைப் பெறலாம்.
  2. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாளச் சான்று

    அக்கவுண்ட் திறக்கும் நபர் (பொதுவாகத் தாய் அல்லது தந்தை) அடையாளச் சான்றை வழங்க வேண்டும். பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்:

    • ஆதார் கார்டு
    • பான் கார்டு
    • பாஸ்போர்ட்
    • வாக்காளர் அடையாள அட்டை
    • டிரைவிங் லைசென்ஸ்

    ஐடி கார்டு செல்லுபடியாகும் வகையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், காலாவதியாகியிருக்கக் கூடாது. நகல் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றாலும், சரிபார்ப்பிற்காக எப்போதுமே ஒரிஜினல் ஆவணத்தைக் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

  3. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முகவரிச் சான்று

    அடையாளச் சான்றுடன், முகவரிச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும். பின்வருவனவற்றில் எது வேண்டுமானாலும் கொடுக்கலாம்:

    • ஆதார் கார்டு
    • பாஸ்போர்ட்
    • யூட்டிலிட்டி பில்கள் (மின்சாரம், தண்ணீர், காஸ்) 3 மாதங்களுக்கு மேற்பட்டதாக இருக்கக்கூடாது
    • ரேஷன் கார்டு
    • முகவரியுடன் கூடிய பேங்க் பாஸ்புக்

    சில பேங்குகள் ஆதாரை ஐடி மற்றும் முகவரிச் சான்று இரண்டிற்குமே ஏற்றுக்கொள்ளும், ஆனாலும் முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

  4. போட்டோக்கள்

    பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களைச் சமர்ப்பிக்கவும்:

    • பெண் குழந்தை
    • பெற்றோர் அல்லது பாதுகாவலர்

    பொதுவாக இரண்டு முதல் நான்கு போட்டோக்கள் போதுமானவை, ஆனால் பேங்க் அல்லது போஸ்ட் ஆபீஸைப் பொறுத்து எண்ணிக்கை மாறுபடலாம்.

அறிந்து கொள்ளுங்கள்: சுகன்யா சம்ரித்தி யோஜனாவுக்குத் (எஸ்எஸ்ஒய்) தேவையான ஆவணங்கள்

சுகன்யா சம்ரித்தி யோஜனா முதிர்வு மற்றும் பணம் எடுத்தல்

எஸ்எஸ்ஒய் ஆன்லைன் அக்கவுண்ட் திறக்கும் செயல்முறையில், அதன் முதிர்வு மற்றும் பணம் எடுக்கும் விதிகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும். அக்கவுண்ட் தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் கழித்து முதிர்ச்சி அடையும், அதே நேரத்தில் முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும்.

முதிர்வு காலம் முடியும் வரை வட்டி சேர்ந்து கொண்டே இருக்கும். குழந்தைக்கு 18 வயது கடந்த பிறகு கல்வி அல்லது திருமணத்திற்காக 50% வரை பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. 18 வயதுக்குப் பின் திருமணம் அல்லது அவசர காலங்களில் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் முன்கூட்டியே அக்கவுண்ட்டை மூட அனுமதிக்கப்படுகிறது.

கூடுதல் ஆவணங்கள் (தேவைப்பட்டால்)

சில சந்தர்ப்பங்களில், நீங்கள் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம். சில உதாரணங்கள் இங்கே:

  1. தத்தெடுப்புச் சான்றிதழ்

    பெண் குழந்தை தத்து எடுக்கப்பட்டிருந்தால், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் தத்தெடுப்புச் சான்றிதழை வழங்க வேண்டும்.

  2. காப்பாளர் சான்றிதழ்

    பெற்றோர் அல்லாமல் வேறு யாராவது (தாத்தா, பாட்டி அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் போன்றவர்கள்) அக்கவுண்ட் திறந்தால், சட்டப்பூர்வ உரிமையை நிரூபிக்க காப்பாளர் சான்றிதழ் தேவைப்படலாம்.

ஆவணங்களைச் சமர்ப்பிப்பது எப்படி?

இதோ ஸ்டெப்-பை-ஸ்டெப் செயல்முறை:

  1. போஸ்ட் ஆபீஸ் அல்லது பேங்கிலிருந்து எஸ்எஸ்ஒய் விண்ணப்பப் படிவத்தைப் பெறவும் அல்லது டவுன்லோட்ஸ் செய்யவும்.
  2. பெயர், முகவரி, வயது மற்றும் டெபாசிட் தொகை போன்ற விவரங்களை கவனமாக நிரப்பவும்.
  3. மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை (ஜெராக்ஸ் காப்பிகள்) இணைக்கவும்.
  4. தொடக்க டெபாசிட்டுடன் (குறைந்தபட்சம் ₹250) படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
  5. பேங்க் அல்லது போஸ்ட் ஆபீஸ் ஆவணங்களைச் சரிபார்த்து அக்கவுண்ட்டைத் திறக்கும்.
  6. அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆனதும் உங்களுக்கு பாஸ்புக் வழங்கப்படும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டியைக் கணக்கிடுவது எப்படி?

சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டியானது கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படுகிறது. அரசாங்கம் நிர்ணயித்த விகிதத்தில் ஆண்டுதோறும் வட்டி கூட்டப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படுகிறது, ஆனால் 21 ஆண்டுகள் கழித்து அக்கவுண்ட் முதிர்ச்சி அடையும் வரை வட்டி சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படும் இன்வெஸ்ட்மென்ட் தனித்தனியாக வட்டி ஈட்டி காலப்போக்கில் சேர்ந்து, இறுதித் தொகையை அதிகரிக்கிறது.

வருமானத்தை மதிப்பிடுவதற்கு, ஆண்டு டெபாசிட், இன்வெஸ்ட்மென்ட் காலம் மற்றும் வட்டி விகிதத்தை என்டர் செய்து எஸ்எஸ்ஒய் கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, தொடர்ந்து ஆண்டுதோறும் பணம் செலுத்துவது நீண்ட கால கூட்டு வட்டி மூலம் கணிசமாக வளர்ந்து, எஸ்எஸ்ஒய்-ஐ ஒரு சிறந்த சேமிப்புக் கருவியாக்குகிறது.

முடிவுரை

செயல்முறையைப் புரிந்து கொண்டு தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்தால், சுகன்யா சம்ரித்தி யோஜனா அக்கவுண்ட் திறப்பது எளிதாகிவிடும். சரியான ஆவணங்களை வைத்திருப்பது விரைவான சரிபார்ப்பு மற்றும் தடையற்ற அக்கவுண்ட் ஆக்டிவேஷனை உறுதி செய்கிறது. ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் முறையில் முறையான வழியைப் பின்பற்றுவதன் மூலம் தாமதத்தைத் தவிர்த்து, செயல்முறையை எளிதாக முடிக்கலாம். பெண் குழந்தையின் நீண்ட கால நிதிப் பாதுகாப்பிற்காக இந்தத் திட்டம் நம்பகமான தேர்வாகத் தொடர்கிறது.

FAQs

சுகன்யா சம்ரித்தி யோஜனாவைத் தொடங்க, போஸ்ட் ஆபீஸ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பேங்குக்குச் சென்று, விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, அக்கவுண்ட் திறக்க குறைந்தபட்சம் ₹250 டெபாசிட் செய்ய வேண்டும்.

இந்தியாவில் வசிக்கும் மற்றும் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்காக, பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் சுகன்யா சம்ரித்தி யோஜனா அக்கவுண்ட்டைத் திறக்கலாம்.

அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸுக்குச் சென்று, எஸ்எஸ்ஒய் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாதுகாவலரின் கேஒய்சி ஆவணங்களைச் சமர்ப்பித்து, குறைந்தபட்சம் ₹250 டெபாசிட் செய்து பாஸ்புக்கைப் பெறலாம்.

பெண் குழந்தைக்கு 10 வயது நிறைவடைவதற்கு முன்பு சுகன்யா சம்ரித்தி யோஜனா அக்கவுண்ட் திறக்கப்பட வேண்டும். அதன் பிறகு 21 ஆண்டுகள் முதிர்வு காலம் வரை இந்தத் திட்டம் தொடரும்.

ஒரு பெண் குழந்தைக்கு ஒரே ஒரு கணக்கு மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். அதே குழந்தையின் பெயரில் இரண்டாவது கணக்கைத் தொடங்க முடியாது. முதல் பிரசவத்தில் இரட்டைக் பெண் குழந்தைகள் பிறந்தால் இரண்டு கணக்குகளும், இரண்டாவது பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் பிறந்தால் இந்த விதிமுறைகளில் தளர்வு அளிக்கப்பட்டு, மொத்தம் மூன்று கணக்குகள் வரை திறக்க அனுமதிக்கப்படும்.

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers
+91