நவம்பர் 2019 முதல் நவம்பர் 2020 வரை நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இரண்டும் முறையே 7.57% மற்றும் 8.23% வளர்ச்சி அடைந்துள்ளன. கோவிட்-19 தொற்றுநோய் போன்ற எதிர்பாராத இக்கட்டான சூழலில் இந்த உயர்வு ஆச்சரியமானது. பொதுவாக, பொருளாதார மந்தநிலை காலங்களில் மார்க்கெட் விலை கடுமையாக குறையும் என்று எதிர்பார்க்கப்படும். ஆனால், அனைத்து கணக்குகளையும் மீறி, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மார்க்கெட் தொடர்ந்து வலுவான ஏற்றத்தைக் கண்டு வருகிறது.
தொற்றுநோய்க்கு முன்பு, இந்தியாவின் பொருளாதார நிலை தற்போதைய நிலையை விட மிகவும் நிலையாக இருந்தது. அப்போது, கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதம் 3.6% பணவீக்கம் உடன் 7.2% ஆக இருந்தது. லாக்டவுன் தொடங்கியதிலிருந்து, க்யூ1-ல் ஜிடிபி 23.9% மற்றும் க்யூ2-ல் 7.5% குறைந்தது. இந்த அளவீடுகள் அனைத்தும் சேர்ந்து குறியீடுகளின் மதிப்பைக் குறைத்திருக்க வேண்டும்.
இருப்பினும், நிலைமை இதற்கு நேர்மாறாக இருந்தது. ஸ்டாக் மார்க்கெட் டில் முதலீட்டாளர்கள் மற்றும் மூலதனத்தின் அதிகரிப்பு காரணமாகவே இதுபோன்ற போக்கு ஏற்படுகிறது. முதலீட்டாளர்களின் இந்த வருகை அதிகரிப்புக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். முதலீட்டாளர்கள் கம்பெனிகளின் ஃபண்டமெண்டல்ஸ் அடிப்படையில் முதலீடு செய்கிறார்களா அல்லது ஃபோமோ காரணமாக முதலீடு செய்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. ஃபோமோ என்றால் என்ன மற்றும் சமீபத்திய மார்க்கெட் போக்குகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஃபோமோ என்றால் என்ன?
ஃபோமோ என்பது “தவறவிட்டுவிடுவோமோ என்ற அச்சம்” என்பதன் சுருக்கமாகும். அதாவது, ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்ற பயத்தினால் சில செயல்களைச் செய்வது ஃபோமோ ஆகும். உதாரணமாக, ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயத்தின் காரணமாக, முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட பங்கில் முதலீடு செய்யலாம். இந்த ஃபோமோ கருத்து பல முதலீட்டாளர்களை முறையான திட்டமிடல் இல்லாமல் முதலீடு செய்யத் தூண்டுகிறது. பைனான்சியல் மார்க்கெட்டில், மார்க்கெட்டில் ஒரு பெரிய ஏற்றத்தைத் தவறவிட்ட பிறகு முதலீட்டாளர்கள் வருத்தப்படும்போதும் ஃபோமோ தெளிவாகத் தெரியும். எந்தவொரு வாய்ப்பையும் இழக்கக்கூடாது என்ற அவசரம் காரணமாக, பல முதலீட்டாளர்கள் அதிக யோசனை இல்லாமல் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கிறார்கள்.
ஸ்டாக் ஃபண்டமெண்டல்ஸ் என்றால் என்ன?
கிட்டத்தட்ட ஒவ்வொரு முதலீட்டாளரும் ஒரு பங்கின் ஃபண்டமெண்டல்ஸை சரிபார்க்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பங்கின் ஃபண்டமெண்டல்ஸ் என்பது அந்த பங்குடன் தொடர்புடைய அனைத்து தரவுகளையும் குறிக்கும். ஒரு பங்கின் உண்மையான மதிப்பிலிருந்து அதன் தற்போதைய விலை எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முதலீட்டாளர்கள் இந்தத் தரவைப் பார்ப்பார்கள். இது போன்ற தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வது, சரியான முதலீட்டைச் செய்ய முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது. ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் முக்கியமாக சில அளவுகோல்களில் கவனம் செலுத்துகிறது:
- பணப்புழக்கம்
- மூலதன மேலாண்மை
- சொத்துக்களின் மீதான வருமானம்
- லாப வரலாறு
இந்த காரணிகள் மற்றும் பல காரணிகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. முதலீட்டாளர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட கம்பெனியுடன் சேர்த்து முழு தொழில்துறையையும் மார்க்கெட்டையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறார்கள். இறுதியில், எந்த பங்குகள் சரியான விலையில் உள்ளன, எந்த பங்குகள் அதிக விலை அல்லது குறைந்த விலையில் விற்கப்படுகின்றன என்பதை அடையாளம் காண்பதே இதன் நோக்கமாகும். பங்குகளைப் பற்றிய ஆழமான புரிதலுடன், சரியான முடிவை எடுப்பது எளிதாகிறது.
ஃபோமோ மார்க்கெட்டை இயக்குகிறதா?
தற்போதைய காலகட்டத்தில், மார்க்கெட் ஏற்றம் பற்றிய பேச்சுதான் ஸ்டாக் மார்க்கெட்டில் எல்லா இடங்களிலும் உள்ளது. மார்ச் 2020 இல், மிகக் குறைந்த விலைகள் பதிவாகின. இருப்பினும், அதிலிருந்து பல்வேறு துறைகளில் உள்ள பங்குகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கோவிட்-19 க்கு முன்பும் பின்பும் உள்ள விலைகள் பற்றிய சில மார்க்கெட் போக்குகள் இங்கே உள்ளன. இந்த மதிப்புகள் பல்வேறு குறியீடுகளில் குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட சதவீத மாற்றங்களைக் குறிக்கின்றன.
|
இன்டெக்ஸ் |
சதவீத மாற்றம் |
|
|
மார்ச் 24, 2020 |
ஜனவரி 14, 2020 |
|
|
லாக்டவுன் 1.0 |
ப்ரீ-கோவிட் உயர் |
|
|
நிஃப்டி 50 |
100 |
26 |
|
நிஃப்டி 100 |
101 |
28 |
|
நிஃப்டி 200 |
106 |
30 |
|
நிஃப்டி 500 |
110 |
33 |
|
நிஃப்டி நெக்ஸ்ட் 50 |
107 |
34 |
|
நிஃப்டி மிட்கேப் 100 |
142 |
52 |
|
நிஃப்டி ஸ்மால்கேப் 100 |
186 |
55 |
இந்த குறியீடுகளின் விலை உயரக் காரணம், ஒவ்வொரு குறியீட்டின் கீழும் உள்ள பங்குகளில் முதலீடு அதிகரித்ததே ஆகும். ஸ்டாக் மார்க்கெட்டுக்குள் நுழையும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை இது குறிக்கிறது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்களிடம் உபரி பணத்தை வைத்துள்ளனர். இருப்பினும், அத்தகைய முதலீட்டாளர்களின் பொருளாதார நடத்தை முழுமையாகப் பகுத்தறிவுடன் இல்லை. இந்த முதலீட்டாளர்களில் பெரும்பாலோர் ஃபண்டமெண்டல்ஸ் ஆஃப் ஸ்டாக்ஸ்-ஐ ஆய்வு செய்யாமல் ஃபோமோ காரணமாக செயல்படுகிறார்கள்.
மாரத்தான் ட்ரெண்ட்ஸ்
பிஎம்எஸ் நிறுவனத்தின் சிஇஓ அதுல் சூரி அவர்களின் கூற்றுப்படி, “நாம் பல வருடப் போக்குகளுக்காக இங்கே இருக்கிறோம், எந்தவொரு முதலீட்டாளரின் வாழ்நாளிலும் இதுபோன்ற ஒன்று அல்லது இரண்டு பெரிய போக்குகளை உங்களால் பெற முடிந்தால், செல்வம் பெருகும் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும்”. உலகளாவிய மார்க்கெட் லிக்யூடிட்டி மீது அனைவரின் பார்வையும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்டாக் மார்க்கெட்டை இயக்கும் இறுதி காரணி லிக்யூடிட்டிதானே தவிர வேறு எதும் பெரிய அளவில் இல்லை. முதலீட்டாளர்களிடம் ஃபோமோ இன் தாக்கம் இருந்தாலும், அதிகரித்து வரும் போக்குகளுக்கு லிக்யூடிட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. டிசம்பர் 2020 இல், நிஃப்டி கிட்டத்தட்ட 400 புள்ளிகள் சரிந்தது. இதற்கிடையில், எஃப்ஐஐ ₹300 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (FII) முதலீட்டு வரவுகள் தான் மார்க்கெட்டை இயக்குகிறது என்பதை இது காட்டுகிறது.
மறுபுறம், சில முதலீட்டாளர்களும் நிபுணர்களும் நீண்ட காலத்திற்கு மார்க்கெட் தொடர்ந்து உயரும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இந்த பொருளாதார மந்தநிலைகள் மற்றும் பிற தடைகள் மார்க்கெட்டில் தற்காலிக வீழ்ச்சியை ஏற்படுத்தும் மைல்கற்கள் மட்டுமே. முந்தைய மந்தநிலைகளைப் போலல்லாமல், கோவிட்-19 தொற்றுநோய் பலரை முதலீட்டுத் துறைக்குள் நுழைய வைத்து குறைந்த விலையில் பல கம்பெனி பங்குகளை வாங்கச் செய்தது.
பல முதலீட்டாளர்களுக்கு செல்வம் ஈட்ட இது ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்பட்டது. உலகளாவிய லாக்டவுன் மற்றும் பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும் ஈக்விட்டி குறியீடுகள் எவ்வாறு புதிய உச்சத்தைத் தொடர்ந்தன என்பதற்கு இதுவே தெளிவான விளக்கமாகும்.
சுருக்கமாக
தொற்றுநோய் காலத்தில், பல புதிய மற்றும் ஆரம்பநிலை முதலீட்டாளர்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் நுழைந்துள்ளனர். பொருளாதாரம் சரிந்ததால், மார்ச் 2020 இல் ஸ்டாக் விலைகள் புதிய சரிவைச் சந்தித்தன. எதிர்காலத்தில் மார்க்கெட் உயரும் என்று எதிர்பார்த்த பல முதலீட்டாளர்களுக்கு இது ஒரு முதலீட்டு வாய்ப்பாகக் கருதப்பட்டது.
இந்த எண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, பகுதியளவு ஃபோமோ காரணமாகவும் தூண்டப்பட்டது. ஃபண்டமெண்டல்ஸ் மற்றும் ஃபோமோ ஆகியவற்றின் கலவையால், ஸ்டாக் மார்க்கெட் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொடுகிறது. ஏஞ்சல் ஒன் (Angel One) வழங்கும் ஸ்மார்ட் மணி மூலம் இலவச ஸ்டாக் மார்க்கெட் கோர்ஸ் ஆன்லைனில் கற்றுக் கொள்ளுங்கள்.
இன்றைய ஷேர் மார்க்கெட் விலைகளைப் பாருங்கள்.
இந்திய பங்குச் சந்தையானது மூலதன உருவாக்கம், செல்வம் ஈட்டுதல் மற்றும் கம்பெனி வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலீட்டாளர்களுக்கு, நாட்டின் மிகவும் வெற்றிகரமான கம்பெனிகளில் ஈக்விட்டி வைத்திருப்பதன் மூலம் காலப்போக்கில் பணத்தை வளர்க்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
சக்திவாய்ந்த டிரேடிங் பிளாட்பார்ம், ஏஆர்கியூ பிரைம் ஸ்மார்ட் பரிந்துரைகள், ஐபிஓ அணுகல் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான ஆலோசனைகளுடன் பங்குச் சந்தையை ஏஞ்சல் ஒன் உங்கள் விரல் நுனிக்கு கொண்டுவருகிறது. நீங்கள் சிறிய அளவில் தொடங்கினாலும் அல்லது நீண்ட கால முதலீட்டு தொகுப்பு உருவாக்கினாலும், பங்குச் சந்தை செல்வத்தை உருவாக்குவதற்கான சக்திவாய்ந்த கருவியாக இருக்கும்.
