Skip to main content

உள்நோக்கிய வர்த்தக உத்தியும் அதன் தற்சார்புப் பொருளாதாரம் குறித்த முழு விபரம்!

6 min readUpdated on 12th Aug, 2026by Team Angel One
உள்நோக்கிய வர்த்தக உத்தி என்பது ஒரு நாடு தனது உள்நாட்டு தொழில்கள், உற்பத்தி மற்றும் சந்தையைப் பாதுகாத்து வளர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையாகும். ஒருவேளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் அதிக வரி விதிப்பது போன்றவை நடைமுறையில் உ
Share

இதுகுறித்து மிகவும் எளிமையாக உங்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்றால் இந்த உதாரணம் உங்களுக்குச் சிறந்ததாக அமையும்.

நீங்கள் ஒரு வீடு கட்டப் போவதாக வைத்துக் கொள்வோம். உங்களுக்கு இரண்டு தேர்வுகள் நிச்சயம் இருக்கும். உலகிலேயே சிறந்த விற்பனையாளர்களிடமிருந்து செங்கற்கள், சிமெண்ட் மற்றும் தளபாடங்களை வாங்கலாம் அல்லது உங்கள் சொந்த நிலத்திலேயே எல்லாவற்றையும் நீங்களே தயாரிக்க முடிவு செய்யலாம்.

ஒருவேளை இரண்டாவது வழி ஆரம்பத்தில் கடினமாகவும் அதிக விலை கொண்டதாகவும் இருக்கும், ஆனால் ஒருநாள் உங்களிடம் விற்க மறுக்கக்கூடிய ஒரு அண்டை நாட்டை நீங்கள் நம்பியிருக்க வேண்டியதில்லை என்பதை இது உறுதி செய்கிறது. இதைத் தான் பொருளாதாரத்தில் சொந்த நிலத்தில் தயாரிக்கும் அணுகுமுறை அதாவது உள்நோக்கிய வர்த்தக உத்தி என்று அழைக்கப்படுகிறது.

குறிப்பாக பத்தாண்டுகளுக்கு மேலாக இந்திய பொருளாதாரத்தின் மைய கோட்பாடாக இருந்தது உள்நோக்கிய வர்த்தக உத்தி. ஆம் கடந்த 1950 முதல் 1991 ஆம் ஆண்டு வரை இந்தியா பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்த முறையைப் பின்பற்றியது. ஊசிகள் முதல் விமானங்கள் வரை எல்லாவற்றையும் அதன் சொந்த எல்லைகளுக்குள் தயாரிப்பதை ஒரு வழியாக நம்பியது. பெரும்பாலும் இன்பேர்ட் சம்ஸ்டுடியூசன் என்று அழைக்கப்படும் இறக்குமதி உத்தியானது உள்நாட்டு தொழில்களை வெளிநாட்டு போட்டியில் இருந்து பாதுகாத்தது.

1990களில் உலகமயமாக்கல் ஒரு போக்காக மாறியிருந்தாலும், இப்போது நிலைமைகள் மீண்டும் மாறத் தொடங்கியுள்ளன. "ஆத்மநிர்பார் பாரத்" (தற்சார்பு இந்தியா) எழுச்சியுடன், உள்நோக்கிய வர்த்தக உத்தியைப் புரிந்துகொள்வது என்பது வெறும் வரலாற்றுக் கல்வி மட்டுமல்லாமல், இது பாதுகாப்பு மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் உள்ள தற்போதைய சந்தைப் போக்குகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு திறவுகோலாகவும் உள்ளது.

முக்கிய அம்சங்கள்

  • இறக்குமதி மாற்று: வெளிநாட்டு இறக்குமதிகளை உள்நாட்டு உற்பத்தியால் மாற்றுவது, அதன் மூலம் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது மற்றும் உள்ளூர் திறனை உருவாக்குவது என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
  • புதிதாக வளரும் தொழில்துறை பாதுகாப்பு: வளர்ந்து வரக்கூடிய இளம், போராடும் உள்நாட்டு நிறுவனங்கள், போதுமான போட்டித்திறனைப் பெறும் வரை, நன்கு நிறுவப்பட்ட உலகளாவிய ஜாம்பவான்களிடமிருந்து அவற்றைப் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நவீன மறுமலர்ச்சி: உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம் போன்ற கொள்கைகள், உள்நோக்கிய உத்தியின் நவீன, இலக்கு சார்ந்த வடிவமாகும்.
  • முதலீட்டுக் கோணம்: அதிக இறக்குமதி வரிகளால் பாதுகாக்கப்படும் துறைகள் (பாதுகாப்பு மற்றும் மின்னணுவியல் போன்றவை) போட்டியில்லாமையால் பெரும்பாலும் பங்கு விலையின் மதிப்பேற்றத்தைக் காண்கின்றன.

உள்நோக்கிய வர்த்தக உத்தி என்றால் என்ன?

உள்நோக்கிய வர்த்தக உத்தி என்பது உள்நாட்டு வளர்ச்சிக்காக சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு பொருளாதாரக் கொள்கையாகும். குறிப்பாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சுற்றி வேலி போடுவதாகக் கருதலாம். இதற்காக அரசாங்கம் பல்வேறு விதிமுறைக் கொண்டுள்ளது. இதோ அவை என்னென்ன? என்பது குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

  • அதிக வரிச் சுங்க வரிகள்: இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிக விலை கொண்டதாக மாற்றுவது (எ.கா. இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களுக்கு 100% வரி).
  • கட்டுப்பாடுகள்: வெளிநாட்டுப் பொருட்கள் நாட்டிற்குள் நுழையும் அளவைக் கட்டுப்படுத்துதல்.
  • மானியங்கள்: உள்ளூர் தொழிற்சாலைகள் மலிவான பொருட்களை உற்பத்தி செய்ய அவர்களுக்குப் பணம் வழங்குதல்.

வெளிநாட்டுப் பொருட்கள் அதிக விலை கொண்டவையாகவோ அல்லது கிடைக்காதவையாகவோ இருப்பதால், இந்திய நுகர்வோர் இந்தியப் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இந்தியத் தொழிற்சாலைகள் வளரும், அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும், இறுதியில் பொருளாதாரம் செழிக்கும். இது ஏற்றுமதி சந்தைகளைப் பின்தொடர்வதைக் காட்டிலும் உள்நாட்டுச் சந்தையில் கவனம் செலுத்துகிறது.

உள்நோக்கிய வர்த்தக உத்தியின் நன்மைகள்:

ஒரு நாடு ஏன் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேர்வு செய்யும்? குறிப்பாக வளரும் நாடுகளுக்கு, கட்டாயப்படுத்தக்கூடிய மூலோபாய காரணங்கள் உள்ளன.

  1. பொருளாதார சுதந்திரம்: உள்நோக்கிய வர்த்தக உற்பத்தியில் ஏற்படக்கூடிய நன்மைகளில் ஒன்றாக உள்ள இறையாண்மை. நீங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கும் உங்களது சொந்த ஆயுதங்கள், உணவு மற்றும் ஆற்றலை நீங்களே உருவாக்கினால், ஒரு போர் நேரிடும் போது அல்லது புவிசார் அரசியல் நெருக்கடியின் போது நீங்கள் மற்ற நாடுகளை நம்பி இருக்கத் தேவையில்லை. எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இந்த "மூலோபாய சுயாட்சி" (strategic autonomy) காரணமாகவே இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் விவசாயத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
  2. "புதிதாக வளரும் தொழில்துறைகளை" வளர்ப்பது: ஒரு பச்சிளம் குழந்தையை ஒரு பெரிய வீரர் இருக்கும் மல்யுத்த மேடையில் இடுவதை கற்பனை செய்து பாருங்கள். குழந்தை ஒவ்வொரு முறையும் தோற்கும். வளரும் நாடுகளில் உள்ள உள்நாட்டுத் தொழில்கள் குழந்தைகளைப் போன்றது; உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்கள் வீரர்கள் போன்றது. உள்நோக்கிய வர்த்தக உத்தி, அந்தக் குழந்தை வளரும் வரை வீரரை மேடைக்கு வெளியே வைத்திருக்கும் நடுவராக செயல்படுகிறது.
  3. அந்நியச் செலாவணியைச் சேமித்தல்: இறக்குமதிக்காக டாலர்களை செலவிடாமல் இருந்தால், ஒரு நாடு அதன் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கிறது. டாலர்கள் குறைவாக இருந்த 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது இந்தியாவிற்கு மிக முக்கியமானது.

இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்:

இந்த உத்திக்கான ஒரு சிறந்த ஆய்வு நிலை இந்தியா ஆகும். கடந்த 1991க்கு முந்தைய காலகட்டத்தில், இந்தியா ஒரு கடுமையான உள்நோக்கிய பாதையைப் பின்பற்றியது. ஆனால் இதில் நல்ல விஷயங்கள் மற்றும் மிகவும் மோசமான பாதிப்புகளும் ஏற்பட்டது.

நல்ல விஷயங்கள் என்னவென்றால், ஒரு பெரிய தொழில் தளத்தை உருவாக்கினோம். வெளியில் உள்ளவர்களை நம்பியிருக்க முடியாததால், எஃகு ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இஸ்ரோ, ஐஐடி போன்ற நிறுவனங்கள் உருவாகின. அதே சமயம், இந்து வளர்ச்சி விகிதத்திற்கு (வளர்ச்சி 3.5% ஆக தேக்கம்) வழிவகுத்தது. எவ்வித போட்டியும் இல்லாத காரணத்தினால், இந்திய நிறுவனங்கள் அலட்சியமாக மாறின. கார்கள் (அம்பாசடர் போன்றவை) 30 ஆண்டுகளாக மேம்படவில்லை, ஏனெனில் அவர்களுக்கு போட்டியாளர்கள் இல்லை.

நவீன காலகட்டம் (2020க்குப் பிறகு): தற்போது ஒரு "ஸ்மார்ட்" உள்நோக்கிய உத்தியைக் காண்கிறோம். அரசாங்கம் கண்மூடித்தனமாக இறக்குமதியைத் தடை செய்யவில்லை, ஆனால் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க PLI (உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு) திட்டத்தைப் பயன்படுத்துகிறது.

மின்னணுவியல்: நாங்கள் 100% மொபைல் போன்களை இறக்குமதி செய்து வந்தோம். இப்போது, முடிக்கப்பட்ட போன்களுக்கான இறக்குமதி வரிகள் மற்றும் உள்ளூர் உற்பத்திக்கான மானியங்களால் இந்தியா ஒரு முக்கிய மொபைல் ஏற்றுமதியாளராக உள்ளது.

பாதுகாப்பு: சில ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கான தடைகள் நேரடியாக HAL மற்றும் மஸகன் டாக் போன்ற இந்தியப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர் புத்தகப் பெருக்கத்திற்கு வழிவகுத்தன.

முதலீட்டாளர்களுக்கான உள்நோக்கிய வர்த்தக உத்திகளுடன் தொடர்புடைய அபாயங்கள்:

உள்நாட்டிலேயே வெற்றியாளர்களை உருவாக்கும் அதே வேளையில், பொருளாதாரம் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அபாயங்களையும் உருவாக்குகிறது.

  1. செயல்திறன் குறைவு மற்றும் அதிக செலவுகள்: பாதுகாக்கப்பட்ட தொழில்கள் பெரும்பாலும் சோம்பேறியாக மாறும். அதன் வெளிநாட்டுப் போட்டியாளருக்கு அரசாங்கம் 50% வரி விதித்துள்ளது என்று ஒரு நிறுவனத்திற்குத் தெரிந்தால், அது புதுமைப்படுத்தவோ அல்லது விலைகளைக் குறைக்கவோ எந்த ஊக்கமும் இருக்காது. ஒரு முதலீட்டாளராக, பாதுகாப்பு அகற்றப்படும் தருணத்தில் சரிந்து போகக்கூடிய திறனற்ற நிறுவனங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
  2. பழிவாங்கல் அபாயம்: வர்த்தகம் என்பது இருவழிப் பாதை. இந்தியா அமெரிக்கப் பொருட்களைத் தடுத்தால், அமெரிக்கா இந்திய ஐடி சேவைகளைத் தடுக்கலாம். இந்த "வர்த்தகப் போர்" சூழ்நிலை, பல முதலீட்டாளர் போர்ட்ஃபோலியோகளில் விருப்பமான ஐடி மற்றும் ஃபார்மா போன்ற ஏற்றுமதி சார்ந்த துறைகளை பாதிக்கலாம்.
  3. தாங்கிப்பிடிக்கப்படும் முதலாளித்துவம்: உள்நோக்கிய உத்திகள் பெரும்பாலும் அரசாங்க உரிமங்கள் மற்றும் அங்கீகாரங்களைக் கோருகின்றன. இது தயாரிப்புத் தரத்தை விட லாபி செய்யும் சக்தியை வெற்றியைச் சார்ந்து இருக்கும் ஒரு முறைக்கு வழிவகுக்கும்.

உள்நோக்கிய உத்திகளின் நிஜ உலக எடுத்துக்காட்டுகள் சில..

  1. இந்தியா (லைசன்ஸ் ராஜ்): 1991 வரை, ஒரு கணினி அல்லது வெளிநாட்டு காரை இறக்குமதி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இது வலுவாக இருந்தாலும் காலாவதியான உள்நாட்டுச் சந்தையை உருவாக்கியது. கடந்த 1991 சீர்திருத்தங்களுக்குப் பிறகு, திறனற்ற பல இந்திய நிறுவனங்களைப் பாதித்தது, ஆனால் இறுதியில் இன்ஃபோசிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற உலகளாவிய ஜாம்பவான்கள் உருவாக வழிவகுத்தது.
  2. இன்று மின்சார வாகனம் துறை: தற்போது, டெஸ்லா போன்ற இறக்குமதி செய்யப்பட்ட EV-களுக்கு இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க கட்டாயப்படுத்த, இந்தியா அதிக வரிகளை (100% வரை) விதிக்கிறது. இது ஒரு உன்னதமான உள்நோக்கிய வர்த்தக உத்தியாகும்.

விளைவு: இது டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கிறது, உலகளாவிய ஜாம்பவான்கள் நுழைவதற்கு முன்பு அவர்கள் சந்தைப் பங்கை ஈட்ட அனுமதிக்கிறது.

உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் உள்நோக்கிய உத்திகளை எவ்வாறு இணைப்பது?

ஒரு முதலீட்டாளராக, நீங்கள் கொள்கையை மதிப்பிடாமல், அதிலிருந்து லாபம் ஈட்டுகிறீர்கள். தற்சார்புக்கான அரசாங்கத்தின் உந்துதல் தெளிவான முதலீட்டு கருப்பொருள்களை உருவாக்குகிறது.

1. பாதுகாக்கப்பட்ட துறைகளைக் கண்டறிதல்: அரசாங்கம் இறக்குமதி வரிகளை உயர்த்தியுள்ள துறைகளைத் தேடுங்கள்.

  • பாதுகாப்பு

HAL, BEL மற்றும் பாரத் ஃபோர்ஜ் போன்ற நிறுவனங்கள் ஆயுதங்களுக்கான "எதிர்மறை இறக்குமதிப் பட்டியலின்" நேரடிப் பயனாளிகள்.

  • உற்பத்தி 

PLI திட்டத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் (Amber Enterprises, Dixon Tech) இறக்குமதியை மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட மானியங்களால் பயனடைகின்றன.

2. இறக்குமதியைச் சார்ந்திருக்கும் துறைகளைத் தவிர்ப்பது

மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை அதிகம் நம்பியிருக்கும் நிறுவனங்களில் எச்சரிக்கையாக இருங்கள். உள்ளூர் மூலப்பொருட்களைக் கட்டாயப்படுத்த அரசாங்கம் தங்கள் மூலப்பொருட்களுக்கான வரிகளை உயர்த்தினால், அவர்களின் இலாப வரம்புகள் வீழ்ச்சியடையும்.

3. "சீனா பிளஸ் ஒன்" என்ற கருத்து

இது உலகளாவிய உள்நோக்கிய உத்தியாகும், அங்கு நிறுவனங்கள் சீனாவை நம்புவதை நிறுத்த விரும்புகின்றன. இந்திய சிறப்பு இரசாயனம் மற்றும் ஜவுளி நிறுவனங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்த உள்நோக்கிப் பார்க்கும்போது பயனடைகின்றன.

முடிவுரை

உள்நோக்கிய வர்த்தக உத்தி என்பது ஒரு இருமுனை வாள். 20-ஆம் நூற்றாண்டில் ஜப்பானும் தென் கொரியாவும் செய்தது போல புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால், அது தொழில் வல்லரசுகளை உருவாக்க முடியும். தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அது அதிக விலையுள்ள, குறைந்த தரமான பொருட்களின் பொருளாதாரத்தை உருவாக்குகிறது. நவீன இந்திய முதலீட்டாளருக்கு, பாடம் தெளிவாக உள்ளது: "ஆத்மநிர்பார்" உந்துதல் என்பது அடிப்படையில் ஒரு இலக்கு உள்நோக்கிய உத்தியாகும். அடுத்த தசாப்தத்தின் வெற்றியாளர்கள், போட்டியில் இருந்து மறைந்துகொள்வதற்காக மட்டுமல்லாமல், உலகத் தரம் வாய்ந்த திறன்களை உருவாக்க இந்த பாதுகாப்பைப் பயன்படுத்தும் உள்நாட்டு உற்பத்தியாளர்களாகவே இருக்க வாய்ப்புள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

மேலும் படிக்க: வர்த்தகப் பங்கு வர்த்தகம் என்றால் என்ன?

FAQs

உள்நோக்கிய முதலீடு பொதுவாக ஒரு பொருளாதாரத்தில் பாயும் வெளிநாட்டு மூலதனத்தைக் குறிக்கிறது. இருப்பினும், வர்த்தக உத்தியின் பின்னணியில், உள்நோக்கிய கொள்கையின் ஒரு எடுத்துக்காட்டு, சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களை இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க ஊக்குவிக்க, இறக்குமதி செய்யப்பட்ட மொபைல் போன்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகும்.

உள்நாட்டுச் சந்தைக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு கொள்கை உத்தியாகும். உலகிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்யப் பொருட்களை உற்பத்தி செய்வதில் பொருளாதாரம் கவனம் செலுத்துகிறது, இறக்குமதியை உள்நாட்டில் வளர்க்கப்பட்ட பொருட்களுடன் மாற்றுகிறது.

இது வெளிநாட்டு நாடுகளின் சார்பைக் குறைக்கவும், அந்நியச் செலாவணி கையிருப்பைச் சேமிக்கவும், வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் சர்வதேசப் போட்டியில் இருந்து உள்நாட்டு வேலைகளைப் பாதுகாப்பதே உள்நாக்கிய முதலீடு உத்தியின் நோக்கமாக உள்ளது.

உள்நோக்கிய முதலீடு (உள்நாட்டுத் தொழிற்சாலைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது) தொழில்நுட்பத்தை மாற்றுதல், வேலைகளை உருவாக்குதல் மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றைச் செய்கிறது. இது பெரும்பாலும் உள்நோக்கிய வர்த்தக உத்தியின் நோக்கம் ஆகும், இது வெளிநாட்டு நிறுவனங்களை வெறும் விற்பனையைச் செய்வதைச் விட நாட்டிற்குள் முதலீடு செய்ய கட்டாயப்படுத்துகிறது.

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers
+91