Skip to main content

பங்குப் பிரிப்பு (ஸ்டாக் ஸ்பிலிட்) என்றால் என்ன: நிறுவனங்கள் ஏன் தங்கள் பங்குகளைப் பிரிக்கின்றன?

6 min readUpdated on 11th Aug, 2026by Angel One
பங்கு பிரிப்பு பங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், நிறுவன மற்றும் பங்கு மதிப்பு மாறாது. இது முதலீட்டாளர்களைக் கவர்ந்து நிர்வாகத்தை எளிதாக்குகிறது. பங்கு விலையில் இதன் தாக்கம் அறிய தொடரவும்.
Share

பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கு விலை மிகவும் அதிகமாக இருக்கும்போது, அந்தப் பங்குகளை முதலீட்டாளர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலையில் மாற்ற, அந்நிறுவனம் மேற்கொள்ளும் ஒரு கார்ப்பரேட் நடவடிக்கையே பங்குப் பிரிப்பு (ஸ்டாக் ஸ்பிலிட்/சப்டிவிஷன்) ஆகும். பங்குச் சந்தை முதலீட்டில் (மார்க்கெட் கேப்) எவ்வித மாற்றமும் இல்லாமல், புதிய முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் பங்குகளை பிரிக்க இது உதவுகிறது. பங்குப் பிரிப்பு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் முதலீட்டாளர்களை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்ப்போம்.

முக்கிய குறிப்புகள் (கீ டேக்கவேஸ்)

பங்குப் பிரிப்பு என்பது பங்குகள் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, அதற்கேற்ப பங்கு விலையைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாகும். இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் (லிக்விடிட்டி), பங்குகளைக் கட்டுப்படியாகக்கூடிய விலையில் வைத்திருக்கவும், அதிக அளவிலான முதலீட்டாளர்களைக் கவரவும் நிறுவனங்கள் பங்குப் பிரிப்பைப் பயன்படுத்துகின்றன.

பார்வர்டு மற்றும் ரிவர்ஸ் பிரிப்புகள் பங்கு அமைப்பை மாற்றினாலும், அடிப்படை மதிப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

பங்குப் பிரிப்பை மதிப்பிடுவதற்கு முன்பு, முதலீட்டாளர்கள் முக்கிய தேதிகள், வரி விதிகள் மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

பங்குப் பிரிப்பு என்றால் என்ன?

ஒரு நிறுவனம், ஏற்கனவே உள்ள பங்குகளை குறிப்பிட்ட விகிதத்தில் பிரித்து, தனது தற்போதைய பங்குதாரர்களுக்கு கூடுதல் பங்குகளை வழங்கும் நடவடிக்கையே பங்குப் பிரிப்பு ஆகும். இதன் பொருள், தற்போதுள்ள பங்குகளின் எண்ணிக்கை பிரிக்கப்படுவதன் மூலம் அதிகரிக்கிறது. பங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனமும் (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) மற்றும் ஒவ்வொரு பங்குதாரரின் பங்கின் மதிப்பும் மாறாது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, பங்குப் பிரிப்பு ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் நடக்கும். உதாரணமாக, 1:5 என்ற விகிதத்தில் பிரிப்பு நடந்தால், ஒவ்வொரு ஒரு பங்கிற்கும் பங்குதாரர் 5 பங்குகளைப் பெறுவார். பல்வேறு விகிதங்களில் பிரிப்புக்கு முன்னும் பின்னும் பங்குகளின் எண்ணிக்கை, பங்கு விலை மற்றும் முக மதிப்பு (ஃபேஸ் வேல்யூ) ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
 

பிரிப்பக்கு முன்          பிரிப்புக்கு பின்       
ஸ்டாக் ஸ்பிலிட்  பங்குகள் எண்ணிக்கை  பங்கு விலை  முக மதிப்பு  முதலீட்டு மதிப்பு  பங்குகள் எண்ணிக்கை  பங்கு விலை  முக மதிப்பு  முதலீட்டு மதிப்பு 
1:2  10  900  10  9000  20  450  9000 
1:5  10  900  10  9000  50  180  9000 

பங்குப் பிரிப்பின் போதுபங்கின் முக மதிப்பு பிரிப்பு விகிதத்திற்கு ஏற்ப குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

ஒரு நிறுவனம், ஏற்கனவே உள்ள பங்குதாரர்களுக்கு நிலையான விகிதத்தில் கூடுதல் பங்குகளை வழங்குவதன் மூலம், அதன் புழக்கத்தில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது பார்வர்டு ஸ்டாக் ஸ்பிலிட் நிகழ்கிறது. மொத்த பங்குகளின் எண்ணிக்கை உயர்ந்தாலும், பங்கு விலை அதற்கேற்ப சரிசெய்யப்படுவதால் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் மாறாது. உதாரணமாக, 1:5 என்ற பிரிப்பில், ஒவ்வொரு பங்கும் ஐந்து குறைந்த விலை பங்குகளைக் கொண்டதாகப் பிரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை பணப்புழக்கத்தை மேம்படுத்துகிறது, பங்குகள் சில்லறை முதலீட்டாளர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடியதாகத் தோற்றமளிக்க உதவுகிறது மற்றும் பங்குதாரர் மதிப்பை மாற்றாமல் பங்கு விலையை முன்னுரிமை வர்த்தக வரம்பிற்குள் வைக்க உதவுகிறது.

பங்குப் பிரிப்பு எவ்வாறு செயல்படுகிறது?

பங்குப் பிரிப்பு என்பது நிறுவனத்தின் பங்கு அமைப்பை மாற்றும், ஆனால் நிறுவனத்தின் அடிப்படை மதிப்பை மாற்றாது என்பதை புரிந்துகொள்வது அவசியம். இதில், நிறுவனம் 1:2 அல்லது 1:5 போன்ற முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விகிதத்தின்படி ஒவ்வொரு பங்கையும் பிரிப்பதன் மூலம், புழக்கத்தில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, மொத்த சந்தை மூலதனம் மாறாமல் இருப்பதை உறுதிசெய்ய, ஒவ்வொரு பங்கின் விலையும் அதே விகிதத்தில் கீழ்நோக்கி சரிசெய்யப்படுகிறது. உதாரணமாக, ₹1,000 விலை கொண்ட ஒரு பங்கு 1:5 என்ற விகிதத்தில் பிரிப்புக்கு உட்பட்டால், அது தலா ₹200 விலையுள்ள ஐந்து பங்குகளாக மாறும். எனவே, பங்குதாரர்கள் அதிக பங்குகளை வைத்திருப்பார்கள், ஆனால் அவர்களின் முதலீட்டின் ஒட்டுமொத்த மதிப்பு மாறாது.

நிறுவனங்கள் ஏன் தங்கள் பங்குகளை பிரிக்கின்றன?

பங்குப் பிரிப்பு என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதிக முதலீட்டாளர்களுக்கு கட்டுப்படியாகக்கூடியதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றச் செய்யப்படுகிறது. பங்கு விலை மிக அதிகமாக இருக்கும்போது, நிறுவனத்தின் அடிப்படை வலுவாக இருந்தாலும் சில்லறை முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவது கடினமாக இருக்கலாம். பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் விலையைக் குறைப்பதன் மூலமும், நிறுவனம் பணப்புழக்கத்தை மேம்படுத்தி சந்தையில் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கிறது. மேலும், இது மேலாண்மையின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.

பங்குப் பிரிப்பு உங்களை எவ்வாறு பாதிக்கிறது?

நீங்கள் ஏற்கனவே பங்குதாரராக இருந்தால், பங்குப் பிரிப்பு உங்கள் போர்ட்ஃபோலியோ நிர்வாகத்தை எளிதாக்குகிறது மற்றும் பங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் அதிக பணப்புழக்கத்தை வழங்குகிறது. நீங்கள் பங்குதாரர் இல்லையெனில், முன்பை விடக் குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. உதாரணமாக, ஐஆர்சிடிசி-ன் பங்கு விலை ₹4500-ஆக இருந்தபோது, 1:5 என்ற விகிதத்தில் பங்குப் பிரிப்பு நடந்த பிறகு, அதன் விலை ₹900-ஆக மாறியது. இது புதிய முதலீட்டாளர்களுக்கு மலிவானதாகவும், பழைய பங்குதாரர்களுக்கு போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்க நெகிழ்வுத்தன்மையையும் வழங்கியது.

பங்குப் பிரிப்பில் முக்கிய தேதிகள்

  • ரெக்கார்ட் தேதி (ரெக்கார்ட் டேட்): பங்குப் பிரிப்பிற்குத் தகுதியான பங்குதாரர்களைக் கண்டறிய நிறுவனம் தனது பதிவுகளைச் சரிபார்க்கும் தேதி இதுவாகும்.
  • எக்ஸ்-ஸ்பிலிட் தேதி (எக்ஸ்-ஸ்பிலிட் டேட்): பங்குகள் புதிய சரிசெய்யப்பட்ட பிரிப்பு விலையில் வர்த்தகம் செய்யத் தொடங்கும் தேதி இதுவாகும்.

பங்குப் பிரிவினால் ஃபியூச்சர் & ஆப்ஷன்ஸ் (எஃப்&ஓ) ஒப்பந்தத்தின் சரிசெய்தல்

பங்குப் பிரிப்பிற்குப் பிறகு, அந்தப் பங்கை உள்ளடக்கிய சொத்தாகக் கொண்ட எஃப்&ஓ ஒப்பந்தங்களுக்கான மார்க்கெட் லாட் மற்றும் ஸ்ட்ரைக் பிரைஸ் ஆகியவை சரிசெய்தல் காரணியை கணக்கிட்டு மாற்றியமைக்கப்படும். ஏ:பி என்ற பங்குப் பிரிப்பு விகிதத்திற்கான சரிசெய்தல் காரணி (பி/ஏ) என வரையறுக்கப்படுகிறது. 1:5 என்ற விகிதத்தில், சரிசெய்தல் காரணி (5/1) = 5 ஆகும்.

முன்னாள் ஜூப்ளியன்ட் ஃபுட் வொர்க்ஸ் உதாரணமாக, 1:5 விகிதத்தில் பங்குப் பிரிப்பு ஏப்ரல் 2022-ல் நடைபெற்றது.

சரிசெய்தலுக்கு முன்:

கருவி (இன்ஸ்ட்ரூமென்ட்)  பாதுகாப்பு குறியீடு (செக்யூரிட்டி சிம்பிள்)  காலாவதி தேதி (எக்ஸ்பயரி டேட்)  ஸ்ட்ரைக் விலை (₹)  விருப்ப வகை (ஆப்ஷன் டைப்)  நீண்ட நிலை (லாங் பொஷிஷன்)  குறுகிய நிலை (ஷார்ட் பொஷிஷன்) 
ஓ.பி.டி.எஸ்.டி.கே   ஜெ.யு.பில்.எல்.புஃட்   28/ஏப்ரல்/22  2750  பி.இ  125 
ஓ.பி.டி.எஸ்.டி.கே  ஜெ.யு.பில்.எல்.புஃட்  28/ஏப்ரல்/22  2750  சி.இ  125 

சரிசெய்தலுக்கு பின்: 

கருவி (இன்ஸ்ட்ரூமென்ட்)  பாதுகாப்பு குறியீடு (செக்யூரிட்டி சிம்பிள்)  காலாவதி தேதி (எக்ஸ்பயரி டேட்)  ஸ்ட்ரைக் விலை (₹)  விருப்ப வகை (ஆப்ஷன் டைப்)  நீண்ட நிலை (லாங் பொஷிஷன்)  குறுகிய நிலை (ஷார்ட் பொஷிஷன்) 
ஓ.பி.டி.எஸ்.டி.கே  ஜெ.யு.பில்.எல்.புஃட்  28/ஏப்ரல்/22  550  பி.இ  625 
ஓ.பி.டி.எஸ்.டி.கே  ஜெ.யு.பில்.எல்.புஃட்  28/ஏப்ரல்/22  550  சி.இ  625 

பங்குப் பிரிப்பிற்குப் பிறகு ஒரு ஃபியூச்சர் அல்லது ஆப்ஷன்ஸ் ஒப்பந்தத்தின் முதலீட்டு மதிப்பு மாறாது என்பதை நினைவில் கொள்ளவும். 

ரிவர்ஸ் ஸ்டாக் ஸ்பிலிட் என்றால் என்ன?

ரிவர்ஸ் ஸ்டாக் ஸ்பிலிட் என்பது சந்தை மூலதனத்தைப் பாதிக்காமல், பங்கின் முக மதிப்பை அதிகரிப்பதன் மூலம் புழக்கத்தில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் ஒரு நடவடிக்கையாகும். பங்குப் பிரிப்பை போலவே, இதிலும் முதலீட்டாளரின் முதலீட்டு மதிப்பு பாதிக்கப்படாது.

பங்குப் பிரிப்பின் நன்மைகள்

  • பணப்புழக்கத்தை அதிகரிக்கிறது (பூஸ்ட்ஸ் லிக்விடிட்டி): சந்தையில் கிடைக்கும் மொத்த பங்குகளை அதிகரித்து, வர்த்தக அளவை உயர்த்துகிறது.
  • புதிய முதலீட்டாளர்களை வரவேற்கிறது: குறைந்த பங்கு விலை, பெரிய அளவிலான முதலீட்டாளர்களை ஈர்க்கிறது.
  • கட்டுப்படியாகும் உணர்வை உருவாக்குகிறது (கிரியேட்ஸ் ஏ சென்ஸ் ஆஃபார்ட்டபிலிட்டி): பங்குகள் முதலீட்டாளர்களுக்கு மலிவாகத் தோற்றமளிக்க உதவுகிறது.
  • சந்தை மூலதனத்தை மேம்படுத்துகிறது: இது நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்க உதவக்கூடும்.

பங்குப் பிரிப்பின் குறைபாடுகள்

  • நிறுவன மதிப்பில் தாக்கம் இல்லை: நிறுவனத்தின் அடிப்படை மதிப்பு அல்லது நிதி நிலை மாறாது.
  • அதிக ஏற்ற இறக்கம்: பங்கு விலையில் அதிக ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கலாம்.
  • நிதி நெருக்கடியின் அறிகுறி: சில சமயங்களில், இது நிறுவனம் நிதி சிக்கலில் இருப்பதைக் குறிப்பதாக முதலீட்டாளர்கள் தவறாகப் புரிந்துகொள்ளலாம்.

பங்குப் பிரிப்பின் உதாரணம்

இந்தியாவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்) நிறுவனம் 1:2 என்ற விகிதத்தில் பங்குப் பிரிப்பை மேற்கொண்டது. இது பங்குகளை அதிக முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் செய்யப்பட்டது. பிரிப்பிற்குப் பிறகு, எச்.ஏ.எல் பங்குகள் பிஎஸ்இ-யில் அதிக விலையில் திறக்கப்பட்டன மற்றும் தொடர்ந்து வளர்ச்சியைக் கண்டன. பிசிஎல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் 1:10 என்ற விகிதத்தில் பங்குப் பிரிப்பை மேற்கொண்டது.

ஒரு நிறுவனத்தின் வரலாற்றில் பங்குப் பிரிப்புகளைக் கணக்கிடுதல்

ஒரு நிறுவனத்தின் பிரிப்பு வரலாற்றைக் கணக்கிட, கடந்த கால அனைத்து கார்ப்பரேட் நடவடிக்கைகளையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரிப்பு விகிதமும் வரிசையாகப் பயன்படுத்தப்பட்டு, பங்குகளின் எண்ணிக்கை மற்றும் சரிசெய்யப்பட்ட பங்கு விலை ஆகியவற்றில் ஏற்படும் ஒட்டுமொத்த தாக்கம் தீர்மானிக்கப்படுகிறது.

முடிவு

பங்குப் பிரிப்புகள் பங்குகளை அதிக முதலீட்டாளர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றலாம் மற்றும் நிறுவனத்தின் பணப்புழக்கத்தை அதிகரிக்கலாம். இது பங்குகளை மலிவானதாகக் காட்டினாலும், நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பு மாறாது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். பங்குச் சந்தை முதலீட்டைத் தொடங்க, ஏஞ்சல் ஒன் நிறுவனத்தில் ஒரு டிமேட் கணக்கைத் தொடங்குவது ஒரு சிறந்த முதல் படியாக இருக்கலாம்.

FAQs

பங்குப் பிரிப்பு என்றால் என்ன?

இது ஏற்கனவே உள்ள பங்குகளைப் பல பங்குகளாகப் பிரிக்கும் ஒரு நடவடிக்கையாகும்இது பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறதுஆனால் மொத்த மதிப்பு மாறாது. 

நிறுவனங்கள் ஏன் பங்குப் பிரிப்பை செய்கின்றன?

முக்கியமாகப் பங்குகளை மலிவானதாக மாற்றவும்சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இது செய்யப்படுகிறது. 

பங்குப் பிரிப்பு நல்லதா அல்லது கெட்டதா?

இது பொதுவாக முதலீட்டாளர்களுக்கு சாதகமானதுஇது நிறுவனம் தனது எதிர்கால வளர்ச்சியில் நம்பிக்கையுடன் இருப்பதை குறிக்கிறது.

பங்குப் பிரிப்பு பங்குதாரர் மதிப்பை எவ்வாறு பாதிக்கிறது?

பங்குப் பிரிப்பு என்பது பங்குதாரர் மதிப்பைப் பொறுத்தவரை பொதுவாக நடுநிலையானதுஇது நேரடியாக எந்த நிதி லாபத்தையும் அல்லது இழப்பையும் ஏற்படுத்தாது.

பங்குப் பிரிப்பு எனது வரிகளைப் பாதிக்குமா?

பங்குப் பிரிப்பு எந்த வரிக்குரிய நிகழ்வையும் உருவாக்காதுஏனெனில் நீங்கள் அதே மதிப்பின் கூடுதல் பங்குகளை மட்டுமே பெறுகிறீர்கள்.

பங்குப் பிரிப்பு நிறுவனத்தை அதிக அல்லது குறைந்த மதிப்புடையதாக ஆக்குகிறதா?

இல்லை, இது நிறுவனத்தின் அடிப்படை மதிப்பை மாற்றாது.

பரஸ்பர நிதிகள் (மியூச்சுவல் ஃபண்ட்ஸ்) தனிப்பட்ட பங்குகளை போல பிரிகின்றனவா?

ஆம், பரஸ்பர நிதிகள் பங்குப் பிரிப்பிற்கு உட்படுத்தப்படலாம்இருப்பினும் இது தனிப்பட்ட பங்குகளை விடக் குறைவாகவே நடக்கும்.

Open Free Demat Account!

Join our 3.5 Cr+ happy customers

+91

Open Free Demat Account!

Join our 3.5 Cr+ happy customers
+91