Skip to main content

பங்குச்சந்தையில் ஒரு தொழிலை உருவாக்குவது எப்படி?

6 min readUpdated on 13th Aug, 2026by Team Angel One
பங்குச்சந்தையில் ஒரு தொழிலை உருவாக்க, வர்த்தகம், முதலீடு மற்றும் சந்தையின் இயக்கம் பற்றிய அடிப்படைகளைக் கற்றுக்கொள்வது அவசியமாகும். பணிக்கு ஏற்ப, என்ஐஎஸ்எம் போன்ற சான்றிதழ்கள் மற்றும் நிதிசார்ந்த கல்வித் தகுதிகள் தொடர்பான பட்டங்கள் தேவைப்படலாம்.
Share

வரி இணக்கத்தை உறுதிப்படுத்த, ஜிஎஸ்டி-யின் கீழ் ஒரு டிஜிட்டல் ஆவணமான ஈ-வே பில், ₹50,000-க்கும் அதிகமான மதிப்புள்ள அல்லது மாநில விதிமுறைகளுக்குட்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்திற்குத் தேவையாகும். இருப்பினும், பரிவர்த்தனை ரத்து செய்யப்படும் சந்தர்ப்பங்கள், பொருட்கள் திட்டமிட்டபடி கொண்டு செல்லப்படாத சூழல் அல்லது தவறான தகவல்கள் உள்ளிடப்படும் நிலைகள் ஏற்படலாம்.

இத்தகைய சூழ்நிலைகளில் தவறான பயன்பாடு மற்றும் அபராதங்களைத் தவிர்க்க, ஈ-வே பில் ரத்து செய்யப்பட வேண்டும். இருப்பினும், வெளிப்படைத்தன்மையைப் பேண, குறிப்பிட்ட சூழ்நிலைகளிலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளும் மட்டுமே ஈ-வே பில்லை ரத்து செய்ய முடியும் என ஜிஎஸ்டி சட்டங்கள் கூறுகின்றன. வணிகங்கள், டிரான்ஸ்போர்ட்டர்கள் மற்றும் வரி நிபுணர்கள் அபராதங்கள் (₹10,000 வரை அல்லது ஏய்க்கப்பட்ட வரித் தொகை, இதில் எது அதிகமோ அது), செயல்பாட்டுத் தடைகள் ஆகியவற்றைத் தவிர்க்க ஈ-வே பில்லை எப்போது, எப்படி ரத்து செய்வது என்பதை அறிவது முக்கியம்.

இதையும் படிக்கவும்: ஈ-வே பில் என்றால் என்ன?

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • பொருட்கள் கொண்டு செல்லப்படவில்லை என்றாலோ அல்லது வழங்கப்பட்ட விவரங்கள் தவறாக இருந்தாலோ, ஈ-வே பில் உருவாக்கக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மட்டுமே அதை ரத்து செய்ய முடியும்.
  • போக்குவரத்தின் போது தகுதியான அதிகாரியால் ஈ-வே பில் சரிபார்க்கப்பட்ட பிறகு ரத்து செய்ய அனுமதி இல்லை.
  • கடந்த 180 நாட்களுக்குள் தேதியிடப்பட்ட இன்வாய்ஸ்களுக்கு மட்டுமே ஈ-வே பில்களை உருவாக்க முடியும்.
  • செல்லுபடியாகும் காலநீட்டிப்பு, ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து 360 நாட்களுக்கு மட்டுமே வரம்பிடப்பட்டு, சரியான நேரத்தில் செயல்படுவதை உறுதி செய்கிறது.

ஈ-வே பிலை எப்போது ரத்து செய்ய முடியும்?

ஈ-வே பிலை ரத்து செய்வதற்கான காலக்கெடு உருவாக்கப்பட்டதிலிருந்து சரியாக 24 மணி நேரம் மட்டுமே. வாகனம் அல்லது டிரான்ஸ்போர்ட்டர் மாற்றங்கள் போன்ற பின்னாளைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் இந்தக் காலக்கெடு பொருந்தும். இந்த 24 மணி நேர அவகாசம் முடிந்ததும், போர்ட்டலில் ரத்து செய்யும் வசதி தானாகவே முடங்கிவிடும். எனவே, சாதாரண வழிகளில் அதை உருவாக்கியவரால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாது.

உருவாக்கியவர் ரத்து செய்வதற்கான காலக்கெட்டைத் தவறவிட்டால், பொருட்கள் விநியோகிக்கப்படுவதற்கு முன்போ அல்லது பில் உருவாக்கப்பட்டு 72 மணி நேரத்திற்குள்ளோ (எது முந்தையதோ) அந்த பில்லை நிராகரிக்கப் பெறுநருக்கு கூடுதல் அவகாசம் உள்ளது. இருப்பினும், இது அசல் உருவாக்கியவரால் செய்யப்பட்ட ரத்து அல்ல, மாறாக ஒரு நிராகரிப்பு மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், சோதனைச் சாவடிகளிலோ அல்லது போக்குவரத்தின் போதோ வரி அதிகாரி ஈ-வே பில்லைச் சரிபார்த்துவிட்டால், ரத்து செய்யும் வசதி நிரந்தரமாக முடக்கப்படும். சரிபார்ப்பு என்பது ஒரு அதிகாரப்பூர்வ பதிவை உருவாக்குகிறது. சரிபார்ப்பிற்குப் பிறகு ரத்து செய்வதை அனுமதிப்பது தணிக்கைப் பதிவை பாதிக்கும் மற்றும் வரி ஏய்ப்புக்கான கவனத்தை ஈர்க்கும். இத்தகைய சூழ்நிலைகளில், பில் தானாகவே காலாவதியாகும் வரை காத்திருப்பது அல்லது 72 மணி நேரத்திற்குள் அதை நிராகரிக்குமாறு பெறுநரைக் கேட்பது மட்டுமே ஒரே வழியாகும்.

ரத்து செய்வதற்கான செல்லுபடியாகும் காரணங்கள்:

  • இரட்டை உருவாக்கம் (டூப்ளிகேட் ஜெனரேஷன்): கணினி கோளாறுகள் அல்லது ஆபரேட்டர் தவறுகளால் ஒரே சலான் அனுப்பலுக்கு தற்செயலாக பல ஈ-வே பில்கள் உருவாக்கப்படும் போது.
  • தரவு உள்ளீட்டு தவறுகள்: தவறான ஜிஎஸ்டிஐஎன், தயாரிப்பு குறியீடு, வாகன எண் அல்லது இலக்கு முகவரி போன்ற தவறான தகவல்கள் உள்ளிடப்பட்டு, அவற்றை பார்ட்-பி மாற்றங்கள் மூலம் திருத்த முடியாத சூழலில், பில்லை ரத்து செய்து சரியான தகவல்களுடன் மீண்டும் உருவாக்க வேண்டும்.
  • ஆர்டர் ரத்து: வாங்குபவர் ஆர்டரை ரத்து செய்யும் போது அல்லது இருப்பு இல்லாமை, சந்தை நிலைமைகள் அல்லது லாஜிஸ்டிக்ஸ் சிக்கல்கள் காரணமாக சரக்கு அனுப்புதல் ரத்து செய்யப்படும் போது.
  • பொருட்கள் நகராமை: சரக்கு அனுப்புவது காலவரையின்றி தாமதமானாலோ அல்லது கைவிடப்பட்டாலோ.

ஈ-வே பில் ரத்து செய்யும் செயல்முறை:

ஈ-வே பில் 2.0 போர்ட்டலின் அறிமுகத்துடன் (மேம்படுத்தப்பட்ட அமைப்பு நம்பகத்தன்மைக்காக 1 ஜூலை 2025 அன்று தொடங்கப்பட்டது), ரத்து செய்வதை அசல் ஈ-வே பில் 1.0 போர்ட்டலிலோ அல்லது புதிய ஈ-வே பில் 2.0 போர்ட்டலிலோ மேற்கொள்ளலாம். இரு அமைப்புகளிடையேயும் நிகழ்நேரத் தரவு ஒத்திசைவு உறுதி செய்யப்படுகிறது.

ஈ-வே பிலை ரத்து செய்வதற்கான வழிமுறைகள்:

  1. உங்கள் பதிவுசெய்யப்பட்ட ஜிஎஸ்டிஐஎன் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி ewaybillgst.gov.in (ஈ-வே பில் 1.0) அல்லது ewaybill2.gst.gov.in (ஈ-வே பில் 2.0) போர்ட்டலுக்குச் செல்லவும்.
  2. 1 ஏப்ரல் 2025 முதல் அனைத்து வரி செலுத்துவோருக்கும் பன்முக அங்கீகாரம் (மல்டி-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் - எம்.எஃப்.ஏ) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ஓடிபி பெற உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்யவும்.
  3. டேஷ்போர்டு மெனுவிலிருந்து, "இ-வே பில்" டேப்பைத் தேர்ந்தெடுக்கவும் (தேவைப்பட்டால் "கன்சாலிடேட்டட் இடபுள்யூபி).
  4. கீழ்தோன்றும் மெனுவிலிருந்து "கேன்சல்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. 12 இலக்க ஈ-வே பில் எண்ணை உள்ளிட்டு "கோ" என்பதைக் கிளிக் செய்யவும். கணினி சரிபார்ப்பிற்காக பில் விவரங்களை மீட்டெடுக்கும்.
  6. உருவாக்கப்பட் பில் தகவல்களைச் (அனுப்புநர், பெறுநர், பொருட்களின் விவரம், மதிப்பு, வாகன விவரங்கள்) சரிபார்க்கவும். ரத்து செய்வதற்கு முன் இது சரியான பில் தானா என்பதை உறுதிப்படுத்தவும்.
  7. "குட்ஸ்நாட் ட்ரான்ஸ்போர்ட்டட்," "ஆர்டர் கேன்சல்டு," "ராங் என்ட்ரி," அல்லது "டூப்ளிகேட் ஜெனரேஷன்" போன்ற உங்களின் ரத்துக்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும். காரணத்தைப் பதிவு செய்வது தணிக்கைப் பதிவுகளுக்கு உதவும்.
  8. ரத்து செய்வதை முடிக்க "சப்மிட்" என்பதைக் கிளிக் செய்யவும். போர்ட்டலில் உறுதிப்படுத்தல் தோன்றும், மேலும் நிலை ரத்து செய்யப்பட்டதாகப் புதுப்பிக்கப்படும்.
  9. ரத்து செய்யப்பட்ட விவரம் உங்கள் போர்டல் கணக்கு வரலாற்றில் "கேன்சல்டு இ-வே பில்ஸ்" என்பதன் கீழ் பதிவாகும்.
  10. ஜிஎஸ்டி இணக்கப் பதிவுகளுக்காகவும், அதிகாரிகள் விசாரணை நடத்தும் பட்சத்திலும் ரத்து செய்யப்பட்டதற்கான உறுதிப்படுத்தலைப் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கவும்.

ரத்து செய்த பிறகு, தேவைப்பட்டால் புதிய பில்லை உருவாக்கவும். நிலையை "கேன்சல்டு இ-வே பில்ஸ்" என்பதன் கீழ் கண்காணிக்கலாம்.

ஈ-வே பில் ரத்து செய்வதற்கான கட்டுப்பாடுகள்:

ஈ-வே பில் ரத்து செய்வது ஜிஎஸ்டி விதிகளால் குறுகிய வரம்பிற்கு உட்பட்டது மற்றும் சில சூழ்நிலைகளில் செயல்படுத்த முடியாது:

  • அதிகாரி சரிபார்ப்பு ரத்து செய்வதைத் தடுக்கும்: போக்குவரத்தின் போது தகுதியான ஜிஎஸ்டி அதிகாரியால் ஈ-வே பில் சரிபார்க்கப்பட்டாலோ அல்லது தடுக்கப்பட்டாலோ, உருவாக்கியவர் அதை ரத்து செய்யும் உரிமையை முற்றிலும் இழக்கிறார். சரிபார்ப்பிற்குப் பிறகு ரத்து செய்ய முயல்வது கணக்கை ஆய்வுக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்.
  • 24 மணி நேரத்திற்குப் பிறகு ரத்து செய்ய முடியாது: உருவாக்கப்பட்டதிலிருந்து 24 மணி நேர அவகாசம் இறுதியானது, இதில் எவ்வித மாற்றமும் இல்லை. பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், இந்த காலம் முடிந்ததும் போர்ட்டலின் ரத்து இடைமுகம் தானாகவே மூடப்படும்.
  • புதுப்பிக்கப்பட்ட பில்களும் 24 மணி நேர வரம்பைக் கொண்டிருக்கும்: வாகன மாற்றங்கள், டிரான்ஸ்போர்ட்டர் மாற்றங்கள் அல்லது டிரான்ஸ்ஷிப்மென்ட் ஆகியவற்றிற்காக ஈ-வே பில் புதுப்பிக்கப்பட்டால் (பார்ட் பி புதுப்பிப்புகள்), 24 மணி நேர ரத்து செய்வதற்கான காலக்கெடு மீண்டும் தொடங்காது. மாற்றப்படும் வாகன விவரங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த பில்களுக்கு, 24 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் உருவாக்குவது மட்டுமே ஒரே வழி; ரத்து செய்யும் வசதி இருக்காது.
  • பெறுநரின் நிராகரிப்பு என்பது ரத்து செய்வது ஆகாது: ஈ-வே பில்லை உருவாக்கியவருக்கு மட்டுமே அதை ரத்து செய்யும் விருப்பம் உள்ளது. பெறுநர்கள் அதை 72 மணி நேரத்திற்குள் நிராகரிக்க மட்டுமே முடியும், இது ஏற்றுக்கொள்ளப்படாமையைப் பதிவு செய்கிறது, ஆனால் பில்லைச் செல்லாததாக்காது.
  • பார்ட் ஏ விவரங்களை உருவாக்கிய பிறகு திருத்த முடியாது: பார்ட் ஏ-வில் உள்ள பிழைகளை (அனுப்புநர், பெறுநர், இன்வாய்ஸ் எண், மதிப்பு, ஆவண வகை) 24 மணி நேரத்திற்குள் கூட திருத்த முடியாது. ரத்து செய்துவிட்டு மீண்டும் உருவாக்குவதே ஒரே தீர்வு. பார்ட் ஏ தரவு நேரடியாக ஜிஎஸ்டி மறுசீரமைப்பு மற்றும் ஜிஎஸ்டிஆர் தாக்கல் செய்வதில் தொடர்பு கொண்டுள்ளதால் இந்த கட்டுப்பாடு உள்ளது.
  • ஒருங்கிணைக்கப்பட்ட ஈ-வே பில்களுக்கு கடுமையான விதிகள் உள்ளன: ஒரு வாகனத்திற்கு பல இன்வாய்ஸ்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட ஈ-வே பில்களை (கன்சாலிடேட்டட் இ-வே பில்ஸ் - சி.இ.டபுள்யூ.பிஎஸ்) 24 மணி நேரத்திற்குப் பிறகு ரத்து செய்ய முடியாது. ஒரு சிஇடபிள்யூபி-யை ரத்து செய்வதற்கு, அதில் உள்ள அனைத்து தனிப்பட்ட ஈ-வே பில்களையும் ரத்து செய்ய வேண்டியிருக்கும், இது செயல்பாட்டு ரீதியாக சிக்கலானது.
  • ரத்து செய்யாததன் சட்டரீதியான விளைவுகள்: செல்லாத ஈ-வே பில்லை ரத்து செய்யத் தவறி, பின்னர் அதைச் சரக்கு போக்குவரத்திற்குப் பயன்படுத்துவது அல்லது பயன்படுத்த அனுமதிப்பது, வணிகத்திற்கு அபராதம், சரக்குகளைப் பறிமுதல் செய்தல் மற்றும் வரி அதிகாரிகளின் தீவிர ஆய்வுக்கு வழிவகுக்கும்.

ஈ-வே பில்களை ரத்து செய்யும்போது ஏற்படும் பொதுவான சிக்கல்கள்:

ஈ-வே பிலை ரத்து செய்யும்போது வணிகங்கள் எதிர்கொள்ளும் சில தடைகள்:

  • போர்ட்டல் பிழைகள்/டைம்அவுட்கள் (போர்டல் எரர்ஸ்/ டைம்அவுட்ஸ்): கேச் நினைவகத்தை அழித்து, சீரான இணையத்தைப் பயன்படுத்தவும். விவரங்களை மீண்டும் சரிபார்த்து, நெரிசல் இல்லாத நேரங்களில் மீண்டும் முயலலாம்.
  • அதிகாரி சரிபார்ப்பு கட்டுப்பாடு: போக்குவரத்தின் போது வரி அதிகாரிகளால் ஈ-வே பில் சரிபார்க்கப்பட்டாலோ அல்லது 24 மணி நேர அவகாசம் முடிந்திருந்தாலோ ரத்து செய்ய அனுமதி இல்லை.
  • ஜிஎஸ்டிஐஎன் முடக்கம்: ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குத் தாக்கல் செய்யாவிட்டால், ஜிஎஸ்டிஐஎன் முடக்கப்படலாம். படிவங்களைத் தாக்கல் செய்யும் வரை அல்லது பார்ம் இடபிள்யூபி-05 பூர்த்தி செய்யும் வரை ஈ-வே பில்களை உருவாக்குவது அல்லது ரத்து செய்வது வரம்பிடப்படும்.
  • தவறான ரத்து விவரங்கள்: செல்லுபடியாகும் ரத்துக்கான காரணத்தை தேர்ந்தெடுக்க தவறுவது அல்லது தவறான ஈடபிள்யூபி எண்ணை உள்ளிடுவது நிராகரிப்பிற்கு வழிவகுக்கும்.
  • இரட்டை ஈ-வே பில் குழப்பம்: ஒரே இன்வாய்ஸுக்கு உருவாக்கப்பட்ட இரட்டை ஈ-வே பில்களில், செயல்படும் 12 இலக்க ஈடபிள்யூபி எண்ணை அடையாளம் காணாமல் ரத்து செய்ய முயல வேண்டாம். இது போர்ட்டல் பிழைகளுக்கு வழிவகுக்கும்.
  • லாக் இன் சிக்கல்கள்: ஜிஎஸ்டிஐஎன் சான்றுகளைச் சரிபார்க்கவும்; ஓடிபி மூலம் கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்.

ஈ-வே பில்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பது எப்படி?

சரியான காரணம் இருந்தால் குறுகிய காலக்கெடுவிற்குள் காலநீட்டிப்பு பெறலாம்:

  • காலாவதியாவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்.
  • காலாவதியான 8 மணி நேரம் வரை.

நீட்டிக்கப்பட்ட செல்லுபடியாகும் காலம், நிலையான கால அளவுக்குப் பதிலாக, பயணிக்க வேண்டிய மீதமுள்ள தூரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது (ஒவ்வொரு 200 கி.மீ அல்லது அதன் பகுதிக்கு ஒரு நாள்).

தொடர்புடைய தரப்பினர் (அனுப்புநர், பெறுநர் அல்லது தற்போதைய டிரான்ஸ்போர்ட்டர்) ஜிஎஸ்டி போர்ட்டலில் லாக் இன் செய்து, "எக்ஸ்டென்டட் இடபுள்யூபி" என்பதைத் தேர்ந்தெடுத்து, ஈ-வே பில் எண்ணை உள்ளிட்டு, காரணத்தைக் குறிப்பிட்டு (எ.கா. வாகனக் கோளாறு, போக்குவரத்து நெரிசல் அல்லது வானிலை தாமதம்) மற்றும் தற்போதைய இருப்பிடம், கூடுதல் தூரம் போன்ற பார்ட்-பி தகவல்களை வழங்குவதன் மூலம் நீட்டிப்பைக் கோரலாம். தாமதங்களின் போது ஈ-வே பில் ரத்து செய்வதற்கான கால வரம்பு சிக்கல்களைத் தவிர்க்க இது உதவுகிறது. நீட்டிப்புகள் ஆரம்பத்தில் உருவாக்கப்பட் தேதியிலிருந்து 360 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சரக்கு போக்குவரத்து தொடங்கும் முன், காலாவதியாவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ (360 நாட்கள் வரை) நீட்டிக்கவும். போர்ட்டலில் லாக் இன் செய்து, "எக்ஸ்டென்டட் இடபுள்யூபி" பகுதிக்குச் சென்று, எண்ணையும் புதிய தேதியையும் உள்ளிடவும். சரியான நேரத்தில் சமர்ப்பித்தால் உடனடியாக ஒப்புதல் கிடைக்கும்.

இருப்பினும், ரத்து செய்வதைப் போலல்லாமல், காலநீட்டிப்பு உடனடியாக நடைமுறைக்கு வராது, ஏனெனில் ஒப்புதல் நேரங்கள் மாறக்கூடும். மேலும் காலாவதியான 8 மணி நேரத்திற்குப் பிறகு, சரியான காரணங்கள் இருந்தாலும் நீட்டிப்பு அனுமதிக்கப்படாது.

முடிவுரை:

ஜிஎஸ்டி போர்ட்டல் வழிமுறைகள் மூலம் 24 மணி நேரத்திற்குள் ஈ-வே பில் ரத்து செய்வதைக் கற்றுக்கொள்வது ஜிஎஸ்டி இணக்கத்தை உறுதிசெய்கிறது மற்றும் ₹10,000 அபராதம் அல்லது சரக்குகள் பறிமுதல் செய்யப்படுவததைத் தடுக்கிறது. கால வரம்புகள், செல்லுபடியாகும் காரணங்கள் மற்றும் சரிபார்ப்பிற்குப் பிறகு ரத்து செய்ய முடியாது போன்ற முக்கிய விதிகள் சிக்கல்களைத் தவிர்க்க உதவும். தடையற்ற லாஜிஸ்டிக்ஸுக்கு பில் உருவாக்குதல் மற்றும் நீட்டிப்பதில் எப்போதும் துல்லியத்திற்கு முன்னுரிமை அளிக்கவும்.

FAQs

செல்லாத ஈ-வே பில்லை ரத்து செய்யத் தவறினால், ₹10,000 (பிரிவு 122) முதல் சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டால் செலுத்த வேண்டிய வரியில் 200% வரை (பிரிவு 129) அபராதம் விதிக்கப்படலாம். ஈ-வே பில் ரத்து செய்வது இத்தகைய தவறான பயன்பாட்டைத் தடுக்கிறது.

எஸ்ஏபி அமைப்பானது ஈ-வே பில் ஏபிஐ-யுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது கணினியிலிருந்தே நேரடியாக ரத்து செய்ய அனுமதிக்கிறது. எனவே ஜிஎஸ்டி போர்ட்டல் இணைப்பு மூலம் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்வதற்கான பரிவர்த்தனையைப் பயன்படுத்தவும். காலக்கெடு முடிந்தால் புதிய ஒன்றை உருவாக்கி, எஸ்ஏபி-ஜிஎஸ்டி மாட்யூல் ஆவணங்களைப் பார்க்கவும்.

ewaybillgst.gov.in இல் லாக் இன் செய்து, இ-வேபில் இன் கீழ் கேன்சல் என்பதைத் தேர்ந்தெடுத்து, 12 இலக்க எண், காரணம் ஆகியவற்றை உள்ளிட்டு 24 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்கவும். உறுதிப்படுத்தல் நிலையைப் புதுப்பிக்கும்.

சரிபார்க்கப்படாவிட்டால் உருவாக்கப்பட்டதிலிருந்து சரியாக 24 மணி நேரம் மட்டுமே கால வரம்பாகும். 24 மணி நேரத்திற்குப் பிறகு ரத்து செய்ய அனுமதி இல்லை. ஈ-வே பில் உருவாக்கப்பட்ட பிறகு அதைத் திருத்த முடியுமா?

Open Free Demat Account!

Join our 3.8 Cr+ happy customers
+91