விற்கப்படாத பங்குகள் மற்றும் பேக்ஸ்டாப் உலகத்திற்குள் செல்வதற்கு முன், ஸ்டாக் மார்க்கெட் மற்றும் முதலீட்டுத் துறையில் உள்ள பல்வேறு வகையான பங்குகளைப் பற்றி, குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட, வெளியிடப்பட்ட, சந்தா கட்டப்பட்ட மற்றும் விற்கப்படாத பங்குகள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
1. அங்கீகரிக்கப்பட்ட பங்கு முதலீடு (ஆத்தரைஸ்டு ஷேர் கேபிடல்)
இது முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ஒரு நிறுவனம் ஒப்புக்கொண்ட மொத்த முதலீட்டைக் குறிக்கிறது. இவை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நிறுவனத்தின் மெமோராண்டம் ஆஃப் அசோசியேஷன் (எம்.ஓ.ஏ.) அங்கீகரிக்கப்பட்ட பங்குகளின் தொகையைக் காட்டுகிறது.
2. வெளியிடப்பட்ட பங்கு முதலீடு (இஷ்யூட் ஷேர் கேபிடல்)
வெளியிடப்பட்ட பங்குகள் என்பது அங்கீகரிக்கப்பட்ட பங்குகளின் ஒரு பகுதியாகும், அவை பொதுமக்களுக்கு விற்கப்பட்டுள்ளன. வெளியிடப்பட்ட பங்குகளை வழங்கும் செயல்முறை வெளியீடு, ஒதுக்கீடு அல்லது பங்கீடு என அழைக்கப்படுகிறது.
3. சந்தா கட்டப்பட்ட முதலீடு (சப்ஸ்கிரைப்ட் கேபிடல்)
சந்தா கட்டப்பட்ட முதலீடு என்பது வெளியிடப்பட்ட பங்கு மூலதனத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இது பொதுமக்கள் வாங்கிய பங்குகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. வெளியிடப்பட்ட அனைத்து பங்குகளையும் பொதுமக்கள் வாங்குவது கட்டாயமல்ல. ஏபிசி (ஏ.பி.சி) என்ற நிறுவனம் பப்ளிக் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். இது ஒரு தொடக்கப் பொதுப் பங்களிப்பில் (ஐபிஓ) தலா ரூ.100 விலையில் மொத்தம் 20,000 பங்குகளை வெளியிடத் திட்டமிடுகிறது. (ஐபிஓ) முடிந்ததும், பொதுமக்கள் இந்தப் பங்குகளில் 16,000 பந்துகளை வாங்குகிறார்கள். வெளியிடப்பட்ட பங்குகள் = 20,000, சந்தா கட்டப்பட்ட பங்குகள் = 16,000, விற்கப்படாத பங்குகள் = 4,000. ஏபிசி நிறுவனம் இந்த கூடுதல் பங்குகளை விற்க விரும்பினால், அவை முழுமையாக விற்றுவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இரண்டாவது சுற்று விற்பனையிலிருந்து ஏபிசி நிறுவனம் எந்த இழப்பையும் சந்திக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, அது மற்ற சில பணக்கார முதலீட்டாளர்கள் அல்லது நிறுவனங்களுடன் (எக்ஸ்.வை.இசட்) ஒரு ஒப்பந்தத்தில் நுழைந்து அவர்களுக்கு ஒரு பேக்ஸ்டாப்பை வழங்குகிறது.
பேக்ஸ்டாப் என்றால் என்ன?
பேக்ஸ்டாப் என்பது ஒரு நிதி ஏற்பாடாகும், இதில் முதன்மை நிதி ஆதாரம் தேவையான தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால் ஒரு இரண்டாம் நிலை நிதி ஆதாரம் உருவாக்கப்படுகிறது. விற்கப்படாத பங்குகளை வாங்குவதற்கான வாங்கும் தரப்பினருக்கான காப்பீட்டுக் கொள்கையாக இதைக் கருதலாம், இது ஒரு அண்டர்ரைட்டர் அல்லது இன்வெஸ்ட்மென்ட் பேங்க் மூலம் விற்கப்படாத பங்குகளின் மீதமுள்ள பகுதியை வாங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது (இதன் மூலம் 'வழங்கும் நிறுவனம்' என குறிப்பிடப்படுகிறது). விற்கப்படாத பங்குகள் மீது செய்யப்படும் பரிவர்த்தனைகளின் போது மட்டுமே, இது ஒரு கடைசி நிலை சப்போர்ட் வகையாகவும் கருதப்படுகின்றது.
வெளியிடும் நிறுவனம் அல்லது வாங்கும் தரப்பு அத்தகைய விற்கப்படாத பங்குகள் மீது பரிவர்த்தனை செய்யும் போது வழங்கும் நிறுவனத்துடன் பேக்ஸ்டாப் ஒப்பந்தத்தில் நுழைகிறது. வழங்கப்பட்ட அனைத்து பங்குகளும் வழக்கமான முதலீட்டு வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்று தீர்ந்துவிட்டால், விற்கப்படாத பங்குகளை வாங்குவதற்கு வழங்கும் நிறுவனத்தைக் கடமைப்படுத்தும் ஒப்பந்தம் செல்லாது என்று கருதப்படும், ஏனெனில் வாங்குவதற்கான வாக்குறுதியைச் சுற்றியுள்ள நிபந்தனைகள் இனி இருக்காது.
பேக்ஸ்டாப் அர்த்தம்
ஸ்டாக் மார்க்கெட் மற்றும் முதலீட்டுத் துறையில், பேக்ஸ்டாப் என்ற சொல் விற்கப்படாத பங்குகளின் விற்பனையில் வழங்கப்படும் விற்கப்படாத பங்குகள் அல்லது செக்யூரிட்டிகளுக்கான கடைசி வடிவ சப்போர்ட்டைக் குறிக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, விற்கப்படாத பங்குகள் என்பது வெளியிடப்படாமல் விடப்பட்ட பங்குகளாகும். அத்தகைய பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் (வாங்கும் தரப்பு) வாங்குவதற்கு முன் வழங்கும் நிறுவனத்திடமிருந்து பேக்ஸ்டாப்பைக் கோரலாம்.
அதற்கு மாற்றாகவும் சாத்தியமாகும், அதாவது, வெளியிடும் நிறுவனம் அவற்றை விற்க விரும்பினால், அவர்கள் வழங்கும் நிறுவனத்திடமிருந்து பேக்ஸ்டாப்பைப் பெறலாம். பேக்ஸ்டாப் விற்கப்படாத பங்குகளுக்கான கட்டணத்திற்கான உத்தரவாதத்தை வழங்குகிறது.
பேக்ஸ்டாப் எப்படி வேலை செய்கிறது?
ஒரு நிறுவனம் அதிக நிதியை திரட்ட விரும்புகிறது என்று வைத்துக்கொள்வோம், அவ்வாறு செய்ய அதன் விற்கப்படாத பங்குகளை பொதுமக்களுக்கு வழங்குகிறது. பின்னர் நிறுவனம் குறிப்பிட்ட பங்குகளுக்கு பேக்ஸ்டாப் பெற ஒரு அண்டர்ரைட்டர் அல்லது இன்வெஸ்ட்மென்ட் பேங்க்கிற்கு (வழங்கும் நிறுவனம்) செல்கிறது. இந்த விற்கப்படாத பங்குகளின் ஒரு பகுதி பொதுமக்களால் எடுக்கப்படவில்லை என்றால், வழங்கும் நிறுவனம் இந்த மீதமுள்ள பங்குகளை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலே உள்ள உதாரணத்தை மேலும் தொடர்வோம். தலா ரூ.100 மதிப்பிலான 4,000 விற்கப்படாத பங்குகள் எங்களிடம் உள்ளன. நிதி பற்றாக்குறை காரணமாக, நிறுவனம் இந்த விற்கப்படாத பங்குகளை பொதுமக்களுக்கு விற்க விரும்புகிறது. எனவே, நிறுவனம் வழங்கும் நிறுவனத்திடம் சென்று அவர்களுடன் பேக்ஸ்டாப் ஒப்பந்தத்தில் நுழைகிறது. இந்தப் பங்குகளின் விற்பனையில் சம்பந்தப்பட்ட எந்தவொரு ரிஸ்க்கும் வழங்கும் நிறுவனத்தால் முழுமையாக ஏற்கப்படுகிறது.
இந்த 4,000 பங்குகளில், 3,000 பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்பட்டன, மேலும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மீதமுள்ள 1,000 பங்குகள் வழங்கும் நிறுவனத்தால் வாங்கப்படுகின்றன. பேக்ஸ்டாப் ஒப்பந்தத்தின் கீழ் வழங்கும் நிறுவனத்தால் வாங்கப்படும் எந்தவொரு பங்குகளும் வழங்கும் நிறுவனத்திற்கு சொந்தமானவை மற்றும் அதன் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. வழங்கும் நிறுவனம் விற்கப்படாத பேக்ஸ்டாப் பங்குகளை வாங்கியவுடன், வெளியிடும் நிறுவனம் அந்தப் பங்குகளின் மீதான உரிமையின் அனைத்து உரிமைகோரல்களையும் இழக்கிறது.
இந்தப் பங்குகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் வெளியிடும் நிறுவனம் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது. வழங்கும் நிறுவனம் இந்தப் பங்குகளின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது மற்றும் ஒட்டுமொத்தமாகச் செயல்பாட்டை நிர்வகிக்கும் விதிமுறைகளின்படி இந்தப் பங்குகளை அவர்கள் விரும்பும் விதத்தில் நடத்தலாம் அல்லது டிரேடு செய்யலாம். சூழலைப் பொறுத்து பேக்ஸ்டாப் வெவ்வேறு வடிவங்களை எடுக்கலாம். இது வழக்கமாக இருக்கும் மூன்று சாத்தியமான வடிவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- எழுத்துறுதி செயல்பாட்டில் மீதமுள்ள பங்குகளை வாங்கும் உத்தரவாத ஏற்பாடு. (அண்டர்ரைட்டிங்கில் பேக்ஸ்டாப்)
- பிரைவேட் ஈக்விட்டி பேக்ஸ்டாப்
- நிதி மேலாண்மையில் பேக்ஸ்டாப் (பேக்ஸ்டாப் இன் ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட்)
முடிவுரை
பேக்ஸ்டாப் என்பது காப்பீடு போன்றது. இது ஒரு நிறுவனம் (மற்றும் அதன் இன்வெஸ்ட்மென்ட் பேங்க்) தான் உயர்த்த விரும்பும் பணத்தை உயர்த்துவதை சில வடிவங்களில் உத்தரவாதம் செய்கிறது.
இன்றைய பங்குச் சந்தை விலைகளை ஆராயுங்கள்
